Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

39. அசரீரி, வாணி, ஆதேஷ்.

சந்திரநாகூரில் உள்ளபொழுது, "பாண்டிச்சேரிக்குப் போ" என பகவானுக்கு உள்ளிருந்து குரல் கேட்டது. ஏன் எனக் கேட்க முடியாது. பிரெஞ்சுப் பகுதி என்பதாலா எனில் சந்திரநாகூரும் பிரெஞ்சு பகுதியாயிற்றே!

  • உலகில் ஆன்மீகம் வளர்ந்த ஒரே நாடு இந்தியா.
    கிரீஸில் மனம் வளர்ந்தது. அது ஒரு நூற்றாண்டில் அழிந்து விட்டது. நாடு அழிந்தாலும் இன்றுவரை உலகை ஆளும் கருத்துகள் அனைத்தும் கிரீஸில் உற்பத்தியானவை.

    ரோமாபுரி (vital) உணர்வால் வீறு கொண்டு எழுந்தது. 500 ஆண்டுகள் ஐரோப்பாவை ஆண்டது. பிறகு அழிந்தது. இன்று உலகம் முழுவதும் பயன்படும் சட்டம் Roman Law ரோமாபுரியின் சட்டம்.

    அழிந்தது மீண்டும் கிரீஸ் போல எழவில்லை.

    அத்துடன் 20ஆம் நூற்றாண்டில் முஸலோனியை உற்பத்தி செய்தது.

    Mafia கடத்தல் தொழிலுக்கு உலகத் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியையும், இங்கிலாந்தையும் கடல் கொள்ளும் என்கிறார் அன்னை.

    உலகில் ஆன்மீகம் மனம், வீரத்தைவிட உயர்ந்தது. அது வளர்ந்த நாடான இந்தியா 500 ஆண்டுகளாக அடிமையாக இருந்தது.

  • 1848இல் காரல் மார்கஸ் தொழிலாளரைப் புரட்சி செய்ய அறைகூவல் விட்டார்.

    1917இல் தொழிலாளரே இல்லாத நாடு அதை ஏற்றது.

  • 1940இல் ஹிட்லர் போர் தொடுத்தபொழுது அமெரிக்கா "நமக்கும் இப்போருக்கும் தொடர்பு இல்லை'' என ஒதுங்கியது. அதுவே 1945இல் போரை வென்றது.

    உலகின் போக்கு எது?
    ஆண்டவன் திருவுள்ளம் என்ன?
    என வரலாற்றிலிருந்து மனிதனால் கணிக்க முடியவில்லை.

    அசரீரியை ஆதேஷ் எனவும், வாணியெனவும், கூறுவர். இது நெஞ்சிலிருந்து எழும் குரல். இது ஆண்டவனின் குரலாக இருக்கும். அல்லது நம்மை ஆட்கொண்ட கெட்ட தெய்வங்கள் குரலாகவு- மிருக்கும். ஒருவருக்கு (inner voice) இது போன்ற குரல் கேட்கும். ஆனால் அக்குரல் எந்த நல்ல காரியத்தையும் செய்யாதே என வற்புறுத்திக் கூறும். அவர் குரலைப் பிறகு இழந்துவிட்டார். தற்செயலாக வேறொருவருடன் சமாதிக்கு வந்தார். குரல் மீண்டும் வந்துவிட்டது.

  • 1973இல் ஒரு இளைஞன் பக்தனாகி சமாதியில் நெடுநேரமிருப்பான். அவன் மைத்துனன் கிராமத்திலிருந்து வந்து அவன் மனைவியையும் குழந்தையையும் அழைத்துப் போக விரும்பினான். குரல் "அனுப்பாதே'' என பல முறை கூறிற்று. அனுப்பினான். மறுநாள் குழந்தை இறந்துவிட்டது.

    சமாதியில் உட்கார்ந்ததால் எழுந்த குரல் என்பதால் இது நல்ல குரலென அறியலாம்.

  • 25 ஆண்டுகட்கு முன் சர்க்கார் கெஜட் பதவி ஆபீசர், சர்க்கார் மீது கேஸ் போட்டார். இவர் அனைவர் மீதும் கோபப்படுவார். இலாக்கா டைரக்டரானார். எவரும் நம்ப முடியவில்லை. வைஸ் சான்ஸ்லராக விரும்பினார். கேட்டவர் நம்பவில்லை. அன்னை கனவில் தோன்றி, "பாண்டிக்குப் போ'' என்றார். அவர் வைஸ்சான்ஸ்லரானார். பிறகு திட்ட கமிஷன் உறுப்பினரானார்.
  • ஒரு சிலருக்கு (inner voice) அசரீரி கேட்க வேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டிருக்கும். அவர்கள் அன்னையிடம் கேட்டால் அது கிடைக்கும். அது சொல்வதைத் தட்டாமல், மீறாமல், பின்பற்றும்வரை இருக்கும். புறக்கணித்தால் அசரீரி நின்றுவிடும்.

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறியாமையை மீறிய நேரம் உள்மனம் திறந்து வழிவிடும். அறியாமையாலான மேல்மனத்தை விட்டு நகர்ந்தால், உள்மனத்தை நாடுவதாக அது அமையும்.
 
அறியாமையைக் கடந்த உள்மனம்.
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் அனந்தனை நினைக்கிறது. உணர்வு அனந்தனைச் சக்தியாக உணர்ந்தாலும், உடல் அனந்தனை உலகெங்கும் வியாபிக்கும் பொருளாக (substance) அறிந்தாலும், பரம்பொருளைச் சிருஷ்டியாகவும், சிருஷ்டியைப் பரம்பொருளாகவும் அறிய உதவும்.
 
பரம்பொருளே சிருஷ்டி.
 
 
*****



book | by Dr. Radut