07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைத் தேடாதே.
- இருப்பது போகும்வரை எதுவும் வாராது.
- கையிலுள்ள கிளாக்காய், மரத்திலுள்ள பலாக்காயைவிட சிறப்பு.
- கிளாக்காயை நாடாவிட்டால் பலாக்காய் நம்மை நாடி வரும்.
- புறங்கையை சுவைக்காதவனில்லை.
- கொட்டையையும் சுவைக்காதது புறத்தின் கட்டுப்பாடு.
- அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.
- யோகம் செயல்வழிச் செல்லும்.
- ஆடையில்லாதவன் அரை மனிதன்.
- அன்பில்லாதவன் அரை மனிதன்.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் தனக்குத் தெரிந்ததையும், முடிந்ததையும் செய்து முடிக்க முன்வருபவனுக்கு முன்னேற்றம் உற்பத்தியானால் அது நிற்பதில்லை. அறிவுடை முயற்சிக்கு முன்னேற்றம் முடிவில்லை. |
*******
- Login to post comments