05. சாவித்ரி
சாவித்ரி
P.117 Careless of suffering, heedless of sin and fall
வலியும் பொருட்டல்ல, பாவமும், இழப்பும் பதட்டம் தாராது
- ஆபத்தைச் சந்தித்து அற்புதத்தைத் தேடுகிறாள்
- அகமும் புறமும் பரவெளியான ஆத்ம லோகம் சுவடுபடாத லோகம்
- நீண்ட சோதனையாக அமைந்த நிரந்தரம்
- அறிவுத்தாகம் நிறைந்த சக்தியின் முன்னுள்ள ஆபத்து
- சத்தியத்தையெல்லாம் சந்தித்து, பலனற்ற முயற்சியாகி
- திருப்தியில்லாமல் அசைந்து, தெரியாத முடிவை நாடி
- உள்மனம் கண்டபடி புறவாழ்வை அமைத்து
- நினைத்து நெகிழ்ந்து, உணர்ந்து மகிழ்ந்து
- வேகமே வேதனையாகி, பெற்ற பேற்றின் பெருமை நினைந்து
- தலைவனாகி, கருவியாகி, அடிமையாகி
- சட்டப்படி செயல்பட்டு அர்த்தமற்ற முடிவு பெற்று
- முடிந்ததை முடிந்தவரை செய்து முடித்து
- வேதனை மூலம் ஆனந்தத்தைத் தேடி இதயம் போக்கியபொழுது
- இடியென ஒலிக்கும் ஏறியிறங்கும் துள்ளல்
- சந்தர்ப்பம் என்ற ஓட்டப்பந்தயத்தைப் புயலென ஊடுருவி
- மலையையும் மடுவையும் ஆட்டி அசைத்து
- காலமெனும் சக்கரம் உயர்த்தி உடைக்கும் சுழற்சி
- வாடிய ஆசை நாடியையிழந்து ஊர்ந்து
- புழுவாக உழன்று இயற்கையெனும் சகதியில்
- அசுரனை அணைத்து, புவியை விழுங்கி
- நட்சத்திரம் முடியாகி, கடலாடையாகி
- உச்சியினின்று உயர் உச்சிக்கு ஆர்ப்பாட்டமாகச் சென்று
- லோகங்களைத் தேடி, வென்று, வென்றதை ஆண்டு
- சோகத்தின் எழிலில் சொக்கி விரும்பி மயங்கி
- வேதனையின் ஆழத்தில் வேரூன்ற முயன்று
- உழல்பவள் உள்ளத்தின் இருட்டைப் பற்றினாள்
- விரயமான ஆத்மாவின் வீணான உரையாடல்
- இழந்ததை எண்ணி எழுதி எடுத்து
- நீண்டநாள் நட்புடன் துக்கத்தில் மூழ்கி அமைந்து
- வீறுகொண்ட வேகம் எளிதில் களைத்து
- சொச்சமான மகிழ்ச்சி தொக்கி நின்ற முடிச்சு
- விதியிடம் தப்பி, வாழ்வின் இலக்கையிழந்து
- ஆயிரம் குணம் அவிழ்ந்து விரியும் திரை
- எவரும் எதுவும் சட்டமாகும் வாழ்வின் பாணி
- தூய ஆனந்தம் பெற்றவர் ஒருவருமிலர்
******
ஸ்ரீ அரவிந்த சுடர் ஆசையால் உந்தப்படுபவன், ஆசையை வென்ற நிலை, அவன் செயலே நம் செயலாகக் கொண்ட நிலை. அவன் செயலே நம் செயல். |
*******
- Login to post comments