Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • "மக்கு", "புத்திசாலி", "கெட்டிக்காரன்", "உஷார்", "சூட்டிகை", "ஆழம் அதிகம்", "நம்பலாம்", "சாதாரணமானவரில்லை", "வித்தியாசமானவர்", "பத்தாது" என மனிதர்களை நாம் பாகுபாடு செய்கிறோம்.
    • இதெல்லாம் மனிதனுடைய உணர்வுகள். மனம் — அவற்றின் திறமை, கூர்ந்த பார்வை, சூட்சுமம், ஞானம். இவை ஆத்மாவின் திறமைகள். (Senses and mind — their faculties, insight, subtle vision, intuition, etc.are faculties of the Spirit).
    • சமூகம் பணத்தாலும், பதவியாலும், சொத்தாலும் நடக்கிறது. நம் வாழ்வு மனத்தால் அறிவால் நடக்கிறது. ஆத்மாவின் திறன்கள் - மௌனம், அமைதி, பொறுமை, நிதானம், பதம், பக்குவம்.
    • தாழ்ந்ததை விடாமல் உயர்ந்தது பிடிக்காது.

      உள்ளூர் வாசத்தை விட முடியாது எனில் IAS வேலையை ஏற்க முடியாது. விவசாயம் சொற்பமாக சம்பாதிக்கும், வியாபாரம் அளவு கடந்து சம்பாதிக்கும். தலைமை நாட்டையாளும்.

      • சிறியதை விடாமல் பெரியது வாராது.
      • கூலி வேலை செய்பவனுக்குச் சொத்தில்லை.
        கூலிக்காரன் நிர்வாகம் செய்தால் முதலாளியாவான்.
      • உடல் வேகத்தை விடாமல் அன்பு பூக்காது.
        அன்பு மலர ஆத்திரம் அடங்க வேண்டும்.
      • "காசு” போகாமல் செல்வம் வாராது.
      • சொத்து போகாமல் சுதந்திரம் வாராது.
      • இருக்கிறதை விடாமல் பறக்கிறதைப் பிடிக்க முடியாது.
      • பொய் போகாமல் மெய் வாராது.
      • பெட்டை குட்டி போடும் பெண் குடும்பத்தை உற்பத்தி செய்வாள்.
    • வேட்டையாடியவன் விவசாயி ஆனான்.
      இயற்கை உற்பத்தி செய்ததை இவனே உற்பத்தி செய்தான்.
      இல்லாததை - வில், அம்பு, பணம், துணி - உற்பத்தி செய்வது (manufacture).
      பண்டமாற்றுப் பணம் சமூகத்தின் சக்தியாயிற்று.
      கர்மத்திற்குக் கட்டுப்பட்ட மனிதன் கர்மத்தை ஆண்டான்.
      அது ஸ்ரீ அரவிந்தம்.

      விவசாயம் பணத்தையும் படிப்பையும் நகர வாழ்வையும் உற்பத்தி செய்தது.
      இப்பொழுது காலத்தில் ஒரு புதிய அம்சம் (மூன்றாம் நிலைக்காலம்) உற்பத்தியாகியுள்ளது.
  • "இந்தியாவில் லஞ்சம் ஒழிய 100 வருஷமாகும்".
    யுகம் க்ஷணமாகுமா?
    என்ன செய்தால் இது நடக்கும்?
    • அன்னை அன்பர்கள் அனைவரும் லஞ்சம் கொடுக்க மறுத்தால், லஞ்சம் அழியும். ஒரு 100 பேராவது செய்வது அவசியம்.
    • 100 ஆண்டு ஆகும் என உலகம் அறிவதைச் சில ஆண்டுகளில் சாதிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 10 அன்பர்களாவது லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அப்பொழுது இந்தியா கீழ்க்கண்டவாறிருக்கும்.
      1. 25 வயதான அனைவரும் பட்டம் பெற்றிருப்பர்.
      2. ஓராண்டாவது இந்தியா எல்லா நோபல் பரிசுகளையும் பெறும்.
      3. மேல்நாடுகள் போல் இந்தியர் உண்மை பேசுவர்.
      4. 80 வயதில் 50 வயது ஆரோக்கியமிருக்கும்.
      5. கொஞ்ச ஜில்லாக்களில் வியாதியேயிராது.
      6. ஹிந்துக்கள் முஸ்லீம்களை, கிருத்துவர்களை மணப்பார்கள்.
      7. கம்பனிகள் கணக்கு உண்மையாக எழுதுவார்கள்.
      8. புயல் வீசாது.
      9. ஒரு ஜில்லாவிலாவது கொலை நடக்காது.
      10. ஒரு ஊரிலாவது திருடு மறையும்.
    • ஒரு அன்பர் வீட்டில் தனியாக சோதனை செய்யலாம். அது (token) அடையாளமாக இருக்கும். பலன் தற்காலிகமாக சில ஆண்டுகள் இருக்கும். செய்ய வேண்டியவற்றைக் கீழே எழுதுகிறேன்.
      1. ஒரு மாதம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.
        அது சத்தியமானதாக இருக்க வேண்டும்.
      2. ஒரு மாதம் உடல், படுக்கை, அலமாரி, தட்டுகள், துணி பரிபூரணமாக சுத்தமாக இருக்க வேண்டும்.
      3. ஆழ்ந்து உள்ளே போய், மனத்தைக் கடந்து போய், அன்னை உள்ளிருந்து தன்னையழைக்கும் வரை உள்ளே போய் 1 மணி இருக்க வேண்டும்.
      4. 72 மணி நேரம், வருபவரிடம் மனம் மென்மையை உணர வேண்டும் - நயத்தக்க நாகரிகம் பயில வேண்டும்.
      5. உடன் நேரடியாகப் பழகுபவர் அனைவரிடமும் 72 மணி நேரம், மனம் இதமாக இருக்க வேண்டும். அவர்கள் பெருமையை மனம் உணர்ச்சிபூர்வமாகப் பாராட்ட வேண்டும்.
      6. 12 மணி நேரம் நெஞ்சில், காண்பவர் எவரைப் பற்றியும் கெட்ட எண்ணம் உதிக்கக் கூடாது.
      7. 3 நாட்கள் தொடர்ந்து 1 வேளை தினமும் நீ விரும்புபவருக்கு இனிமையாக உணவு பரிமாறி அவர் "வயிறு குளிர்ந்தது” எனக் கூற வேண்டும்.
      8. அன்னையின் ஆன்மீகப் பெருமையை ஒரு அம்சத்தில் முழுவதும் ஒரு வினாடி புரிந்து அனுபவித்துப் பூரிக்க வேண்டும்.
      9. க்ஷண நேரமாவது கோரம், விகாரம், லாவண்யமாகத் - அக அழகு - தெரிய வேண்டும்.
      10. 3 நாள் தினமும் ஒரு முறை மெய்ம்மறந்து புளகாங்கிதமாகப் புல்லரித்துப் பூரிக்க வேண்டும்.
      11. பத்து நிமிஷம் அன்னையுள்பட அனைத்தையும் மறந்த மகிமை.
      12. ஒரு முறை பிரியம் (human love) 100 கோடியை விட இனிப்பதைக் காண வேண்டும்.
        சச்சிதானந்தத்தில் ஆனந்தம் அகமாகி, அகம் புறமானால் அது பிரியம், சந்தோஷம், அழகு எனப் பிரிந்து தெரியும்.
        பிரியம் (Love) என்பது ஆனந்தம்.
        க்ஷணம் அதை நெஞ்சு உணர்ந்தாலும் உடல் புல்லரிக்கும், புளகாங்கிதம் பெறும்.
      13. முழு கிராக்கி செய்பவர் அதற்கு எதிரான முழு நாகரிகமான இனிமையான பண்பை 12 மணி நேரம் உணர வேண்டும்.

      மேற்சொன்னவற்றைப் பயின்றால் வீட்டில் கீழ்க்கண்டவை கொஞ்ச நாளாவது நடக்கும்.

    • 11 வயது குழந்தை 6 வயது போல் மெலிந்திருப்பது 30 நாளில் பருத்துவிடும்.
    • பெண்கள் 75 வயதில் 30 வயது அழகு பெறுவர். அனைவருக்கும் இளமை வரும்.
    • நெஞ்சில் தெய்வீகக் கருணை பொங்கி எழுந்து கரை புரளும்.
    • இதே முயற்சி 2 அல்லது 3 மாதம் தொடர்ந்தால் வீடு, நியூயார்க் வீட்டைப் படத்தில் பார்ப்பது போல் நிறையும் (will be furnished).
    • இன்று வரும் மிகப்பெரிய VIPயைவிட பெரியவர்கள் 30 நாள் தொடர்ந்து வருவார்கள். பிரியமாக, உயர்ந்த மரியாதையுடன் நடப்பார்கள்.
    • ஒரு நாள் முழுவதும் சமைப்பதெல்லாம் அமிர்தமாக இனிக்கும்.
    • 3 நாள் நல்ல பெரிய செய்திகள் மட்டும் வரும்.
    • 30 நாள் தொடர்ந்து நாமறியும் 100 பேர் TVயில் வருவார்கள்.
    • வீட்டிலுள்ளவர், முக்கியமாகக் குழந்தைகள் அனைவரும் ஒரு முக்கிய பரிசு பெறுவர்.
    • நாட்டில் பெரிய குடும்பம் நம்முடன் உறவாட விழையும்.
    • முழுவதும் நரைத்த தலை முழுவதும் கருமையாக மாறும் (90% பலிக்கும்).
    • ஒருவராவது ஒரு நாள் மட்டும் அன்னையாகவே நடப்பார்.
    • வீடு வியாபாரத்திலிருந்தால் 30 ஆண்டு வியாபாரம் ஒரு ஆர்டர் மூலம் வரும்.
    • நிலமிருந்தால் 5 வருஷ மகசூல் 1 வருஷத்தில் வரும்.
    • அனைவருக்கும் உடல் வெண்கலம் போலிருக்கும்.
    • வீட்டில் ஒருவராவது "இந்த மாதிரி நல்லவரில்லை'' (perfect gentleman) எனப் பெயர் பெறுவார்.
    • ஒரு மருமகளாவது பெண்மைக்கு எடுத்துக்காட்டாக (angel) மாறுவாள்.
    • வீடு முழுவதும் சந்தன மணம் வரும்.
    • உலகத்தில் பிரச்சினையேயில்லை என மனம் நினைக்கும்.
    • மேடையை அறியாதவர், ஆங்கிலம் பேசாதவர் 1 மணி நேரம் ஆங்கில சொற்பொழிவும், 1 மணி தமிழ் சொற்பொழிவுமாற்றுவார்.
    • ஒரு பிள்ளையாவது மேதை (genius) யாகும் என்ற நம்பிக்கை பிறக்கும்.
    • சுயநலம் எழும்பொழுது - (அடுத்தவர் உயரும் பொழுது) - அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டம்.

      விருந்தினரை, ஓடிப்போய் முகமலர்ந்து வரவேற்பது கிராக்கி பர்சனாலிட்டி personalityகளுக்கு கழுத்து அறுப்பது போன்ற (discipline) கட்டுப்பாடு.

  • வேலையைச் செய்தால் கட்டுப்பாடு உயரும்.
    ஹைதராபாத் நியூஸ் பேப்பர்.
    • ஹைதராபாத்தில் ஆட்கள் குடித்துவிட்டு வருவார்கள். பர்மிஷன் இல்லாமல் வெளியே போவார்கள். கேட்க பயங்கரமாக இருக்கும்.
    • திறமை, பயிற்சி, வேலை, கட்டுப்பாட்டைத் தரும் என்பது சட்டம்.
    • நம்மவர் சொன்னால் கேட்கமாட்டார்கள். அந்த நியூஸ் பேப்பர் கேட்டுக் கொண்டது. புது திறமைகளைப் பயிற்றுவித்தனர்.

      ஒரு மாதத்தில் நிலைமை மாறியது. அனைவருக்கும் ஆச்சரியம்.

    • கட்டுப்பாடேயில்லாத இடத்தில், ஒரு skill திறமையைக் கற்பித்தால் கட்டுப்பாடு வரும்.
    • ஒரு காரியம் செய்ய முடியவில்லையெனில் (உதாரணமாக Silent Will மௌன சக்தி வராவிட்டால், உள்ளே போக முடியாவிட்டால்) ஒரு புது ஸ்கில்லைக் கற்றுக் கொள். தினமும் 3 பக்கம் ஆங்கிலம் படிக்க ஒவ்வொரு வார்த்தையையும் டிக்ஷனரியைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியிருந்தால் அது நல்ல பயிற்சி. 3 பக்கத்தை எழுது. அது பெரிதல்ல. ஆனால் பெருந்திறமை. கையெழுத்து நன்றாக வர முயல்வது பெருந்திறமை.
    • 20 வயது பெண் போல் புடவை கட்ட 60 வயது பெண் முயல்வது சிரமம்.
      • இவற்றிற்கும் Silent will மௌன சக்திக்கும் தொடர்பு இல்லை.

        ஆனால் இந்த ஸ்கில் பெறுவதால் Silent will வராதது வரும்.

        எந்தத் திறமையும் பெரிய குரு, மந்திரங்களைவிட, ஆச்சார்யனைவிட உயர்த்தும்.

    • Orderliness, punctuality ஒழுங்கு, நேரத்தில் செயல்படுவது கற்றுக்கொள். சிறப்பாகக் கற்றுக்கொள். இவற்றில் பேர் பெற்றவர் வெட்கப்படும்படி கற்றுக்கொள். ஆரோக்கியம் உயரும்.
    • கையால் செய்யக்கூடியவை பல. அவற்றைக் கற்கலாம்.
    • ஆன்மீகத் திறமைகள், மனத்திற்குரியவை உண்டு. அவை சக்தி வாய்ந்தவை (உ.ம்.) பிறர் பேசும்பொழுது பதில் பேசாமல், குறுக்கிடாமல், அவரே முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்கப் பயில்வது பெரிய திறமை.
    • தற்சமயம் பெரிய பல (physical skills) கையால் செய்யக்கூடியவற்றைக் கற்றுக்கொள். தட்டு, டம்ளரை மேஜை மீது சத்தம் கேட்காமல் வைப்பது புதியதாய் சாப்பாடு போடுபவருக்கு serve செய்பவருக்குக் கஷ்டம். டம்ளர், தட்டு, கப் ஆகியவற்றை நன்றாக சிறப்பாக துடைத்து பரிமாறுவது, காப்பி டம்ளரில் வழியாமலிருப்பது பெரிய திறமை discipline.
    • குரல் எழாமலிருப்பது கடினம்.
    • பணம் எண்ணினால் அழகாக அடுக்குவது சிரமம்.
    • துணியை மடித்து வைத்தால் iron பண்ணியது போலிருக்கும்.
    • நடக்கும்பொழுது கை, கால் இடறாமலிருப்பது discipline.
    • ஒரே ஸ்டிரைக்மயமான கம்பனி தொழிலாளிகள் எந்தத் தொந்தரவும் கொடுத்தேயிருக்கமாட்டார்கள். கேட்டுக் கொள்ள முதலாளியால் முடியவில்லை.
  • உள்ளதெல்லாம் கொடுத்தபின் "பெற்றேன்" எனக் கூற வாய் கூசும்.

    அடுப்பைப் பெயர்த்துக் கொடுத்தாலும் பிறந்த பெண் திருப்தியடையமாட்டாள் - பழமொழி.

    கொடுப்பதும், கொடுக்காததும் ஒன்றே.

    எதை எவராலும் செய்ய மனம் வரவில்லையோ, அதைச் செய்வது நம் கடமையில்லை. ஆனால் அதைச் செய்வதால் நாம் திருவுருமாற்றத் தகுதி பெறுகிறோம்.

    ******

    • என்னுடைய வக்கீல் எதிர்கட்சிக்குக் கேஸ் எடுத்தார். 10 வருஷ முன் பத்திரம் எழுதும்பொழுது வக்கீலுக்குச் சட்டம் சரிவரத் தெரியாமல் சுவீகாரம் போனவரிடம் விடுதலை வாங்க விட்டுப் போய் சில மாதம் கழித்து இந்த வக்கீலை வாங்கச் சொன்னேன். அது விடுதலைப் பத்திரம். 10 வருஷம் கழித்து கேஸ் நடந்தது. இந்த வக்கீல் எதிர்கட்சியானார். நான் விடுதலை பத்திரத்தைத் தாக்கல் செய்தேன். கேஸ் முடிந்தபின் எனக்கு வரவேண்டிய விடுதலை பத்திரத்தை எதிர்கட்சிக்காக இந்த வக்கீல் திருடினார். இதைச் சட்டம் மூலம் திரும்பிப் பெற 2 வருஷம் கேஸ் ஆட வேண்டும். ஜில்லா ஜட்ஜ் தெரிந்தவர் என்பதால் உடனே வாங்கி வந்துவிட்டோம். ஒரு வாரத்தில் வக்கீல் இறந்துவிட்டார். அந்தச் செய்தியை அவர் அண்ணனுக்கு USAவில் சொல்ல நம் (telex) டெலக்ஸை நாடினார்.
      • நம்மைத் துரோகம் செய்த வக்கீல்.
      • அவர் திருடிய பத்திரம் உயிரைக் காப்பாற்றுகிறது.
      • பத்திரத்தை எடுத்தவுடன் உயிர் போயிற்று.
      • இவர் வருமானத்தை 3 மடங்காக்கும் பாங்க் வேலை நான் வாங்கிக் கொடுத்தேன்.
      • நமது தெம்பால் நம் எதிரி நம் உயிரை எடுப்பது சட்டம்.

        திருடு அறியாமை --- அறியாமை திருடு.

    • அன்பரின் நண்பர், நல்லவர், பொய்யே சொல்லாதவர், பொய் சொல்லியறியாதவர். கெட்டவரை அவருக்குக் கெட்டவர் எனத் தெரியாது.

      பெரு நஷ்டத்தைக் கெட்டவர் தாங்கி வந்தால் நண்பர் அவரை நம்முள் கொண்டு வருவார்.

      மிக நல்லவரால், நஷ்டம் மட்டும் தொடர்ந்து வருகிறது. நண்பர் மனம் திறந்து பேசினால் உலகிலில்லாத நல்லவராகலாம்.

    • "ஏன் எங்கள் வீட்டிற்கு வருகிறீர்கள்?'' என விருந்தாளியைத் தவறாது கேட்டவர் ஒருவர், முழுவதும் உண்மையாக எதிரான மனம் மாறி செயல்பட முடிவு செய்தார்.

      மறுநாள் தெருவில் விருந்தாளியைப் பார்த்ததும், தன்னையறியாமல் தோட்டத்திற்குப் போனார்.

      ஏற்கனவே வெறுப்பாகப் போனவர் இப்பொழுது வெறுப்பில்லாமல் போகிறார்.

      மனம் மாறியது உண்மை.

      செயல் மாறாததும் உண்மை.

      ஜீவியம் (consciousness) மாறும்.

      பொருள் (substance) மாறாது.

      (Substance) பொருள் மாற சின்சியரிட்டி பொருளில் இருக்க வேண்டும்.

      அன்னை நமக்குச் செய்தவற்றையெல்லாம் நாம் பிறருக்குச் செய்வது சேவை.

    • முடிவான பலனை முதலில் தர வேண்டும்.
    • கேட்கும் முன் பிரியமாகத் தர வேண்டும்.
    • ஒருவரால் முடியாததை நாம் அவருக்காக முயன்று தர வேண்டும்.
    • அவர் போகுமிடமெல்லாம் நாம் முன்னே போய் சேவை செய்ய அவருக்காகக் காத்திருக்க வேண்டும்.
    • அடுத்தவர் பொறுப்பை ஏற்க வேண்டும்.
    • அனைவர் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
    • எல்லா பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
    • பஸ் ஸ்டாண்டில் இலவச ஹோட்டல் நடத்த வேண்டும்.
    • வெறியனையும் குருவாக மதிக்க வேண்டும்.
    • நாமழிய பிறர் முயன்றால் நம்மை உதவி கேட்பார்கள், அதையும் தர வேண்டும்.
    • பாவமெல்லாம் புண்ணியமாகத் தெரிய வேண்டும்.
    • கழுதை போன்ற மனிதரைக் கற்பக விருக்ஷமாகக் கருத வேண்டும்.
    • அற்பம் அக்ஷய பாத்திரமாகத் தெரிய வேண்டும்.
    • சில் விஷமம் சீரிய சேவையாகத் தெரிய வேண்டும்.
    • எவர் சொல்வதும் வேத வாக்காகும்.
    • அப்பொழுதும் எவரும் நல்ல சொல் சொல்லமாட்டார்கள்.

      இப்படி நடப்பதால் அன்னைசக்தி நம்முள் வந்து, எதிரி எதுவும் செய்ய முடியாமல் திகைப்பதைக் காணலாம். 1914இல் அன்னை புதுவையிலிருந்த பொழுது முதல் யுத்தத்தில் பாரிஸ் சரணடைந்தது. காளி அன்னையிடம் வந்து கூறினார். அன்னை அதை முடிவாக ஏற்கவில்லை. லோகமாதா அன்னை குரல் கேட்டு பாரிசுக்குப் போனார். அவர் சக்தி எங்கும் பரவியது. எதிரிக்கு பிரெஞ்சுப் படை எதிர்ப்பில்லை. பிரெஞ்சுப்படை வெளியில் வரவில்லை. எதிரி பாரிஸுள் நுழைந்தபொழுது அவர்களைப் பீதி பற்றியது. "ஏன் படை எதிர்க்கவில்லை? ஏதோ சூட்சுமம். நாம் உள்ளே போனால் நம்மைச் சூழ சதி செய்திருக்கின்றனர்'' எனப் புரிந்து கொண்டனர். ஜெனரல் முதல் சிப்பாய் வரை நடுக்கம் எடுத்தது. பின் வாங்கினர். பாரிஸ் தப்பித்தது.

    • அன்னைசக்தி நம் மூலம் செயல்பட்டால் எதிரிக்கு எதுவும் செய்யாமல் பீதி எழும், ஓடிவிடுவான்.
  • எப்படி எனக்கு 7 மார்க் போடலாம்?

    வாத்தியார் மார்க் போடுவதில்லை.

    பையன் மார்க் வாங்க வேண்டும்.

    எந்தப் பையனும் "வாத்தியார் போடலை'' என்பான், "நான் வாங்கவில்லை'' எனக் கூறமாட்டான்.

    இது போன்ற ஒரு சொல் அந்த ஊர், அந்த நாட்டின் cultural levelயைக் கூறும்.

    அங்கெல்லாம் "கட்டடம் கிளம்பிவிட்டது” என்கிறோம். "கட்டடம் கட்டிவிட்டார்கள்' என்பது குறைவு. கட்டடங்கட்கு ஜீவனுண்டு என அறியும் ஆன்மீகப் பண்பின் குரலிது.

    "எல்லாமே மாறிப்போயிற்று' என்றால் வாழ்க்கை நம் கையிலில்லை எனப் பொருள்.

    "இந்தக் காலத்து பசங்க இப்படிப் பேசறாங்க” என்றால் பேசுவது பையன் என மனம் கூறுகிறது. நாம் - 60 வயதில் - இன்று பேசுவது 15 வயதில் உலகம் பேசியது. நம் காலத்து பாஷையை நாம் பேசுகிறோம். அவன் காலத்து பாஷையை அவன் பேசுகிறான் - நமக்கு அது தெரிவதில்லை.

    "காலம் மாறிப்போச்சு' என்பது காலம் மனிதன் கையிலில்லை எனக் கூறுகிறது. நாம் காலத்தை மாற்றிவிட்டோம் எனக் கூறுவதில்லை.

    இதெல்லாம் பேசுபவர் (unformed personalities), அர்த்தமற்ற ஜன்மங்கள்.

    கையெழுத்து மனிதனைக் காட்டும். அளவில் பெரியதாகவும் அர்த்தமற்று அகன்றும் பல வழிகளிலும் நீளும் கையெழுத்து "உள்ளே” எதுவுமில்லை, மனிதன் என்று ஒன்று "உள்ளே” உருவாகவில்லை எனப் பொருள். இவர்களை unformed personalities, உருவம் பெறாத உருப்படிகள் என்பார்கள். லட்டு சூடாக இருக்கும்பொழுது உருண்டையாகப் பிடிபடும். ஆறிப்போனால் உருண்டையாக வாராது, உதிரியாகும். இப்படிப்பட்ட கையெழுத்து நான் 2 பிள்ளைகளிடம் மட்டுமே கண்டுள்ளேன். எந்த நேரமும் அவர்கள் தங்களை அழித்துக் கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் அன்னையிடம் ஏதோ ஒரு அளவில் வந்து மனிதனாக, பிரபலமாக, பெரும் சொத்து பெற்று வாழ்கின்றனர்.

    பெரிய பர்சனாலிட்டி சிறிய தொழிலில் இருக்கும்.

    அற்பமான பர்சனாலிட்டி அளவு கடந்த உயரத்திலிருக்கும்.

    கையெழுத்து எத்தனை விதமாகவும் மாறுபவர்கள் நிலையற்றவர்.

    பயணம், டூர், ஷாப்பிங், பாஷன் அவர்கட்கு உயிர்நாடி.

    மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

    பணம் வந்தால் முதலில் செய்பவை இவை.

    அடுத்தாற்போல் விசேஷம், மஞ்சள் நீர், காது குத்துவது, பிறந்த நாள், திருமணம். ஏதாவது விசேஷம் தேவை கொண்டாட.

    விசேஷம் கொண்டாடுவது அவரவர் அந்தஸ்த்தைக் காட்டுகிறது.

    சினிமா ஸ்டார் கோடி கோடியாய் வாங்குவது தெரியும்.

    அங்கு வர அவன் பட்ட அவதி தெரியாது.

    பலன் தெரிகிறது, முயற்சி தெரியவில்லை.

    ஆட்டமும் அவனே, ஆடுபவனும் அவனே, அரங்கமும் அவனே என்பது அர்த்தபுஷ்டியானது.

    இந்த ஞானம் அந்தப் பலனைத் தரும்.

    பொய் ஜடத்தின் - அசத்தின் - மெய்.

    முழுப்பொய்யிலும் ஒரு துளி சத்தியம் உண்டு.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வெளியிலிருந்து ஒரு நிகழ்ச்சி மூலம் வரும். உள்ளிருந்து வரும் பொழுது ஓர் இலட்சியம் அல்லது தெய்வீக ஆர்வத்திலிருந்து வரும்.
 
புற நிகழ்ச்சி, உள்ளுறை இலட்சியம் நிறைவு தரும்.

*******



book | by Dr. Radut