Skip to Content

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                (சென்ற இதழின் தொடர்ச்சி....)

அண்ணன் - ஒரு கண்ணாடிக்கு முன்னால் 15 பொருள்களிருந்தால் கண்ணாடி 15 பொருள்களையும் பிரதிபலிப்பதுபோல் செயல் சூழ்நிலையைப் பூரணமாகப் பிரதிபலிக்கும்.நமக்குச் சில விஷயங்கள் மட்டும் தெரிகின்றன. வைத்தியர் நாடி பார்க்க கையைப் பிடிக்கிறார். அதனால் நாடி மணிக்கட்டில் மட்டும் இருக்கிறது எனப் பொருளில்லை. உடலெங்கும் நாடித் துடிப்புண்டு. இல்லாத இடமில்லை, மணிகட்டில் நாடி தெளிவாகத் தெரியும்.

தம்பி - பெற்றோர் குழந்தையைப் பூரணமாகக் கவனித்து ஒரு monograph ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினால் நமக்கு அதிகம் புரியுமா?

அண்ணன் - மிகவும் உதவும். பொதுவாகக் குழந்தையைக் கவனிக்க - இந்தக் கண்ணோட்டத்தில் - பெற்றோர் பயிலவில்லை. ஆனால் அது மிகவுதவியாக இருக்கும்.குழந்தையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எதையும் மறைக்கக் கூடாது. சொல்லக் கூச்சப்படக் கூடாது. சிறு வயதிலி ருந்து குழந்தையைத் தாய் அறிவார். அதுபோல் நினைவு கூர்ந்து எழுதுவது மிகவுதவும். இது போன்ற ரிப்போர்ட் ஆங்கிலத்தில் எழுதினால் நல்லது. நம் நாட்டு வழக்கங்களைத் தமிழில் எழுதுவது பயன்படும்.

தம்பி - கருவான விஷயம் சமர்ப்பணம், அன்னையை அறிதல்.

அண்ணன் - எந்த விஷயமும் பெரியது (infinite). நாம் செயல்படும் பொழுது அதன் பெரிய அம்சத்துடன் தொடர்பு கொள்வதில் இரகஸ்யமிருக்கிறது. அன்னை எழுதியவற்றை அடிக்கடிப் பார்க்க வேண்டும். குழந்தை சண்டி செய்தால் அன்னை சண்டித்தனத்தைப் பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் என்று எல்லா 18 வால்யூம்களிலும் பார்க்க வேண்டும். அதற்கெதிரான சொல் நிதானத்தையும் பார்க்க வேண்டும். தொடர்புள்ள சொற்கள் எரிச்சல், கவலை போன்ற எல்லாச் சொற்களையும் பார்க்க வேண்டும். பெரிய சாதனைகளானாலும், பெரிய வாய்ப்புகளானாலும், எதிர்காலத்தை முழுவதும் மாற்றியமைத்த திருப்பங்களானாலும், அன்பர்கட்கு அது நடப்பது, முடிவு எடுப்பது - உருவாவது என்பது 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் என்பதைக் கவனிப்பதில்லை.

தம்பி - செயலை (act) ராசி, அம்சம், குணம் என விவரமாக அறிந்தால் மேற்சொன்னதை அறிய உதவுமா?

அண்ணன் - அது சரி. நான் சொல்வது வேறு. அன்னை கொடுப்பன பெரியவை. அவற்றை வெகு குறுகிய காலத்தில் தருகிறார். பெரியதைக் கொடுக்க முடியாது. கொடுத்தால் நாளாகும். அன்னைக்குரிய விசேஷம் பெரியதைக் குறுகிய காலத்தில் - க்ஷணத்தில் எனவும் கூறலாம் - தருகிறார்.

தம்பி - இந்தக் குழந்தைக்கு அப்படிப் பெரிய எதிர்காலத்தை க்ஷணத்தில் தருவார் என்கிறீர்களா?

அண்ணன்-அன்னை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார், அதை நாம் தெரிந்து பலன் பெறத் தெளிவு வேண்டும் என்கிறேன்.

தம்பி - இங்கு வேண்டிய தெளிவு 3. தானே அன்னையை Consciousness-Force ஜீவிய சக்தி என அறிதல், செயலின் சூட்சுமம், பெரிய அம்சத்துடன் (infinity) தொடர்பு கொள்ளும் திறன்.

அண்ணன் - ஆம்.

தொடரும்.....


 


 


 


 


 



book | by Dr. Radut