Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையை அறிந்தபின்: நான் முதன்முதலில் அன்னையைப் பற்றிய "இதுவரை பலிக்காத பிரார்த்தனைகள் இனி பலிக்கும்'' என்ற கட்டுரையை மங்கையர் மலரில் 1996இல் படித்தபின்தான் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய அருளையும் அவர்களின் சக்தி இயங்கி எப்படி பிரச்சினைகள் தீர்க்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன். அதுமுதல் பலவித அனுபவங்-கள். அவற்றுள் சமீபத்தில் எனக்குக் கிடைத்த இனிய அனுபவத்தை நன்றி கூறிச் சொல்வதன்மூலம் அன்பர்கள் பலரும் அதுபோல் ஸ்ரீ அன்னையின் ஆசியைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

எனக்கு, தினமும் தியானமையம் சென்று அங்கு ஸ்ரீ அன்னையை வணங்கிவந்தால் தான் அமைதி, இன்பம். அப்படி, தினமும் ஓர் அன்பர் நடத்தும் தியானமையத்திற்குச் செல்கிறேன். எனக்கு தியானமையத்தில் ஏதாவது ஒரு சர்வீஸ் செய்ய மிகவும் ஆசை. ஆகையால் அவர்களை சந்தித்து எனக்கு ஏதாவது சர்வீஸ் கொடுக்கும்படிக் கேட்ட மறுநாளே அவர் என்னை அன்றே, அதாவது 3.5.2005 evening meditation service பார்த்து கொள்ளச் சொன்னார். நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு செல்லும்போதே வானம் இருண்டு அந்த இடத்தில் மழையுடன் தியான மையத்திற்குள் நுழைந்து "Mother and me' என்று இருக்கும் பொழுது அன்னை அவர்களின் சத்திய மந்திர வார்த்தைகளான "அன்னை ஜீவனோடு இருக்கும் இடம் தியானமையம். மனித மனத்தின் சுமுகம் தியானமையத்தின் ஜீவன். நெஞ்சை நிரப்பும் நிலையம் நிலையான ஜீவனுடையது'' என்கின்ற சென்னை மாம்பலம் தியானமைய 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மார்ச் 20, 2005இல் சொன்னது நினைவுவந்தது.

இப்பொழுது இது உண்மை என்று நம்புகிறேன், "Mother' என்று தியானித்து,கண்களை மூடிக்கொண்டு நமஸ்கரித்து, கண்களைத் திறந்து நமஸ்கரித்தபடியே பார்த்தபோது இரண்டு கைகள் என் தலைமேல் நிஜமாகவே தொட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். கீழே திருவடிகளில் என் கைகளைப் பதித்து "யார்' என்று அப்படியே நமஸ்கரித்தபடியே நிமிர்ந்தபோது அந்த கைகள் ஸ்ரீ அன்னையின் மஹாகாளி ரூபத்தில் நன்றாகச் சிரித்தபடி என் தலையில் பதிந்திருப்பதைப் பார்த்து உணர்ந்து அனுபவித்தேன். நிஜமாகவே நான் பார்த்தது என்னை வியப்பிலாழ்த்திய-தோடு அன்னையின் வார்த்தைகள் எந்த அளவுக்கு சத்தியமானவை.அந்த சத்தியவார்த்தைகளுக்காக ஸ்ரீ அன்னை இந்தச் சாதாரண கருவியாகிய எனக்கும் காட்சி கொடுத்தது மிகவும் அற்புதம். கண்களை கண்ணீர் நனைத்தது. ஒரு நிமிடம் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. உணர்வால் நெகிழ்ந்து, உள்ளம் பூரித்து அன்னையின் அந்த சத்திய வார்த்தைகள் ஒளியாகவும் அன்பாகவும் ஆனந்தமாகவும் சக்தியாகவும் (power) மாறி மனம், உள்ளம், நாதம், உடல் என்ற கூறுகளில்

இன்பத்தை அனுபவித்தது. எனக்கு அந்த நிமிடம் முதல் "self existing joy'எப்பொழுதும் இருப்பதை உணர்கிறேன். ஸ்ரீ அன்னை தியானமையத்தில் ஜீவனோடு இருக்கும் அளவிற்கு அந்த தியானமையத்தை நன்றாக நடத்தும் அன்பருக்கும் என் நன்றியைக் கூறுகிறேன். இன்று தமிழக மக்கள் பலரும் ஸ்ரீ அன்னையை அறிந்து, ஸ்ரீ அன்னையை மட்டுமே தெய்வமாக ஏற்றுக் கொண்டு ஸ்ரீ அன்னையை மட்டுமே முழுமையாக நம்பி பயனடைகிறார்கள் என்றால் அதற்கு முழுக்காரணம் மதர்ஸ் சர்வீஸ் சொசைட்டி. அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் நாட்கள் போதா, வார்த்தைகள் போதா. அவர்கள் மூலமாக, அதாவது அவர்கள் எழுத்துகள்மூலமாக நானடைந்த அனுபவங்கள் தினம் தினம். இப்படிப்பட்ட வெளியீட்டில் வெளியாகும் எழுத்துகளை ஒவ்வொருவரும் படித்து தமிழ்நாடே, இந்தியாவே, உலகமே பயனடையவேண்டும் என்று எல்லா அன்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

****
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

வழிபாட்டு முறைகள் எல்லாம் மனிதனைப் பழக்கத்திற்கு உட்படுத்துவது. வாழ்வு, இராணுவப் பயிற்சி, நகர வாழ்வு,வறுமை, காராக்கிருகச் சிறை, அகதிகள் முகாம் மனிதனின் பழக்கங்களை இழக்கச் செய்பவை.

நாமே முன்வந்து பழக்கங்களை அழிப்பது சரணாகதி.


 


 



book | by Dr. Radut