05. சாவித்ரி
சாவித்ரி
P.70 He in a petty coastal traffic plies
கடலோரம் கண்ட சிறுதொழில்
. துறைமுகந்தோறும் காணும் வருமானம்.
. மாற்றமற்ற தொழிலின் நிலையான வருமானம் தரும் நிம்மதி.
. புதியதைப் புறக்கணித்து பழக்கமற்றதை விலக்கும் மனநிலை.
. பெருங்கடலின் பேர்ஆரவாரம் கேட்கிறது.
. விரிந்து பரவும் உலகம் தொலைவிலிருந்து அழைக்கிறது.
. அகண்ட திருஷ்டியின் வளையும் வட்டத்துள் செய்யும் பயணம்.
. முகந்தெரியாத மக்களும் இனம் தெரியாத இடங்களும்.
. வணிகக் கலத்தின் இலட்சிய வண்ணம்.
. காலமெனும் குபேரனின் உலகத்து வாணிகம்.
. நிலங்கொண்ட நீர்ப்பரப்பின் நுரை நிறைந்த கடல்.
. கண்டறியாத நாடுகளின் தொலைவிலுள்ள துறைமுகங்கள்.
. வாழ்வின் வளம் நிறைந்த சுபிட்சத்தின் வாயிலாகும் வணிகத்துறை.
. செதுக்கப்பட்ட சிற்பங்கள், வடிவொழுகும் வண்ணச்சீலைகள், பொன் சுமக்கும் பொதிகள்.
. மணி பதித்த பொம்மைகள் மணியான குழந்தைகள்.
. கடின உழைப்பின் கலங்கிய பரிசுகள்.
. மின்னலென மறையும் சுவர்க்கச் சுவைகள் வந்தது அழிகிறது.
. கற்றூண் வாயிலைக் கடந்து வருகின்றன.
. இனம் தெரியாத கடலோரம் நெருங்கிவரும் கப்பலோட்டம்.
. தூரம் துலங்கும் கனவூடே பயணம்.
. பெயரறியாத சமுத்திரத்தைக் கடக்க மறுக்கும் மனம்.
. புலியடமிருந்து புகடம் தேடும் புதுமை.
. எண்ணமெனும் காந்தம் எடுத்துரைக்கும் பாதை.
. விண்மீன் விளங்காத ஜோதியின் பொவுள் மூழ்கினான்.
. அறியாமையின் சந்தைகளைக் கடந்து வந்தான்.
. புதிய துறைகளைப் புலப்பிக்கும் மரக்கலம்.
. கற்பனையைக் கடந்த கண்டங்களைக் கண்டான்.
. புண்ணிய ஆத்மாக்களின் தீவுகளைத் தேடுபவன்.
. முடிவான கடலோரம் கடந்து, முடிவற்ற கடலையடைந்தும், தவச்சின்னமான பிரம்ம சிருஷ்டியை நோக்கிச் செல்கிறான்.
. காலம் வகுத்த கதியை வாழ்வு மாற்றும்.
. அதன் பிம்பங்கள் அனந்தத்தின் திரைகள்.
. புவியின் எல்லை புலப்படாமல் நகருகிறது.
. வாயுமண்டலம் வண்ணத்திரையாக மறைப்பதில்லை.
. அழியும் எண்ணமும் நம்பிக்கையும் அவனைக் கடந்தன.
. பூமியின் எல்லையில் புதுமையைக் காண்கிறான்.
****
ஸ்ரீ அரவிந்த சுடர் பொறுமைக்கு ஓர் அடையாளம் பிறர் அவசரம் நம்மை பாதிக்கக்கூடாது. எவர் அவசரமும் பாதிக்காதது பொறுமை. |
ஸ்ரீ அரவிந்த சுடர் தன்னலமற்றவரின் இரகஸ்யம் மௌனத்தை அளிக்கும். பிறருக்கு அதிகமாகக் கொடுக்க உதவும். தன்னலமற்ற திறமையை அதிகரிக்க உதவும். |
- Login to post comments