01.ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
٭சிறியதற்கு முடியாதது பெரியதற்கு முடியும்.
சுயநலத்திற்கு முடியாதது பர நலத்திற்கு முடியும்.
காலத்திற்கு முடியாதது காலத்தைக் கடந்தவர்க்கு முடியும்.
٭ஒரு நிலையில் நாம் கைவிடும் முறைகள் அடுத்த உயர்நிலையில் மீண்டும் வேறொரு ரூபத்தில் வரும்.
வாய்விட்டு ஜபிப்பதை பகவான் வேண்டாம் என்று கைவிட்டார். ஒரு கட்டத்தில் அன்னை தன்னுடம்பிற்கு அது தேவையென்று ஏற்றுக் கொண்டார்.
٭ஆண்டவன்மேல் ஆர்வம் வர மனிதனுள் ஆண்டவன் பிறக்க வேண்டும். மனிதனுக்குத் தானாக ஆர்வம் வருவதில்லை.
- Login to post comments