04. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- மழை பெய்து வளராதது, பனி பெய்து வளருமா?
- வாழ்வின் மழையில் வளராத பயிர் அருளின் பனியில் வளரும்.
- தன் முதுகு தனக்குத் தெரியாது.
- மனம் முழுமையை அறியாது.
- போகாத ஊருக்கு வழி கேட்கிறான்.
- போகாத ஊருக்கெல்லாம் வழி தெரியும் ஞானம்.
- தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டன்.
- தட்டிக் கேட்பதால் வளரும் சண்டப் பிரசண்டம்.
- ஐந்துக்கு இரண்டு பழுதில்லை.
- ஐந்தில் ஐந்தும் பழுதற்றவை.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் ஒரு நிலையிலுள்ள குறை, அடுத்த கீழ்நிலையில் வேறொரு நிறைவால் சரி செய்யப்படும். மேலேயுள்ள குறை கீழேயுள்ள நிறைவால் சரியாகும். |
*****
- Login to post comments