Skip to Content

10. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்புள்ள அன்னை அவர்களுக்கு,

உங்கள் அன்பு பக்தை ரா. ஸ்ரீவித்யாவின் கடிதம். இக்கடிதத்தை அன்பு அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைத்துகொள்கிறேன். தாயே! நான் கேட்டபடி Seethalakshmi Ramaswamy Collegeலேயே எனக்கு M.Phil. கிடைத்துள்ளது. 14.7.2010 அன்று Entrance மற்றும் Interviewவை நல்லபடியாக உங்கள் அருளால் செய்ய முடிந்தது. அன்று மதியமே உடனடியாக எனக்கு Admission போட வேண்டும் என்று HOD கூறிவிட்டார். மொத்தம் 8 பேர் வந்திருந்தனர். எனக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. எது நடந்தாலும் பரவாயில்லை என்று அன்னையின் மேல் என் பாரத்தை இறக்கிவிட்டுச் சென்றேன். என்ன ஆச்சர்யம், 8 பேரில் 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அன்றே Admission முடிந்துவிட்டது.

அன்னையின் கருணையை என்னவென்று சொல்வது. தாயே! கடந்த 2 மாதங்களாக மிகவும் குழப்பத்தில் இருந்தேன். குழப்பத்திற்கெல்லாம் விடையை காட்டிவிட்டீர்கள். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் M.Phil.ஐ மிகவும் சிறப்பாகச் செய்ய உங்கள் அருளை வேண்டுகிறேன் தாயே! அனைத்தினையும் நன்றாக நடத்தி வையுங்கள் தாயே!

-- ஸ்ரீ வித்யா, மண்ணச்சநல்லூர்

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பொறுக்க முடியாததைக் கண்டு துடிக்காதது, பாரபட்சம்.
 

*****



book | by Dr. Radut