பிரார்த்தனையும் சமர்ப்பணமும்
- இது இறைவன் வரும் தருணம். அன்னை அழைக்கும் நேரம்.
- லீலையைக் காணும் அழைப்பு.
- லீலையாகும் வாய்ப்பு.
- பிரார்த்தனை மனிதனுக்கு.
- சமர்ப்பணம் அன்னைக்கு.
- மனிதன் மனத்தின் அறியாமையால் செயல்படுபவன்.
- மூடனுடைய நம்பிக்கை மூடநம்பிக்கை.
- அன்னை ஆத்மாவில் பிறந்தபின் உலகை நாடுவது அர்த்தமல்ல.
பிரார்த்தனையும் சமர்ப்பணமும் என்ற கட்டுரையின் சுருக்கம்
- உலகம் ருசிக்கிறது. அன்னை ரசிக்கவில்லை.
- ருசிக்கும் உலகை ரசிக்க விரும்புவது சிறியதன் சிறுமை.
- அழைக்கும் அன்னையை அன்பால் ஏற்பது அருள்.
- அது பேரருளில் முடியும்.
- அதிர்ஷ்டமிருக்கிறது அன்னை அருள் வாழ்வு பெற. ஆசையிருக்கிறது வெறும் மனிதனாய் வாழ.
- போட்டி அருளுக்கும், ஆசைக்கும்!
வேலை வெளியில் இல்லை;
வேலை உள்ளேயிருக்கிறது.
நல்லவர் என்று ஒருவரிருந்தால்,
அவர் மனம் அழகாக இருக்குமேயானால்,
நிதானம் நிறையும்பொழுது,
சந்தோஷம் பொங்கி வரும்.
------
அழைக்காமல் அன்னை அங்கு வருவார்.
வந்தவர் தானே அதை விட்டுப் போகமாட்டார்.
- Login to post comments