Skip to Content

பகுதி 3

கருணையையும், இனிமையையும் முழுவதுமாக உற்பத்தி செய்தால் மனிதன் தெய்வமாகிறான். இது கடினமான காரியம். அன்னை முயற்சியுடையவர்க்கு இதைப் பூர்த்தி செய்வார்.

நமக்குத் தெரிந்தவர்களில் சிறப்பானவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் நமக்குள்ள முழுத் தொடர்பையும் இனிமையாலும், கருணையாலும் நிரப்ப முயன்றால் முதற்கட்டம் சீக்கிரம் டிந்துவிடும். கருணையை அடுத்தவர் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், நமக்கு உற்பத்தியாகாது. உற்பத்தியான கருணையை அடுத்தவரால் ஏற்றுக்கொள்ள எல்லாச் சமயங்களிலும் முடியாது. அதற்குரிய எல்லை வெகு சீக்கிரம் வந்துவிடும். அவற்றைத் தன்னுள் உற்பத்தி செய்தால் மனிதன் தெய்வ நிலைக்கு வருவான், பெற்றுக் கொண்டாலும் தன்னைத் தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்வான்.

******

  1. கவனத்திற்குப் (ஹற்ற்ங்ய்ற்ண்ர்ய்) பலன் உண்டு. நேரடியான பலனில்லை எனில் அதே குணமுள்ள மற்றொருவர் அதே பலனைத் தருவார்.

தவறாது பலன் தரும் கவனம்.

குழந்தையும், தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பதில் உள்ள உண்மை பெரிது. நம் கவனத்திற்குரிய மனிதர்களும், பொருள்களும், நிகழ்ச்சிகளும், நேரங்களும் நம்மை நாடி வர முயல்வதைப் பார்க்கலாம். நம் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால், எந்த விஷயங்களில் நமக்கு அதிக கவனம், அக்கறையிருந்ததோ அவற்றால் நமக்குப் பெரும்பலன் கிடைத்திருக்கும். எவற்றால் நாம் பெரும்பலன் பெற்றோமோ அவற்றின் மீது நமக்குக் கவனம் இருந்திருக்கும் என்பது பொதுவான விதி.

நாம் வேலை செய்யும் ஆபீஸில் உண்மையாக உழைப்பதைக் கண்டு கொள்வாரில்லை. நம் உண்மைக்கும், உழைப்புக்கும், பொறுப்புக்கும் பதிலாக

நமக்குக் கிடைத்தது பராமுகம், உதாசீனம், சில்லரைத் தொந்தரவு என இருக்கலாம். ஏன் என் கவனம் எனக்குப் பலன் தரவில்லை என்று நினைக்கலாம்.

நாம் வீடு கட்டப் புறப்பட்டாலும், நம் தம்பி ஒரு தொழில் செய்ய முனைந்தாலும், அல்லது வேறு எந்தக் காரியத்தை நாம் நாடினாலும், அளவு கடந்த பலன் அதன் மூலம் வரும்பொழுது பார்த்தால், நம்மை உதாசீனப்படுத்திய ஆபீஸில் எப்படி பைல்களை நாம் கவனித்தோமோ, கணக்கை எப்படி பொறுப்புடன் நிறைவேற்றினோமோ அப்படி இப்புதுத் துறையில் பைல்களும், கணக்கும் நம்மைக் கவனிப்பது நமக்குப் பலனளிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் நடந்து கொள்வதைப் பார்க்கலாம்.

*******

  1. உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு. அவர்களுடைய நல்ல குணங்களைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை அறிவதாகும். அவர்களுடைய குறைகளைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை உயர்ந்த றையில் அறிவதாகும்.

நம்மை நமக்கு உணர்த்தும் பிள்ளைகள்.

பெற்றோருக்குக் குழந்தைகள் மீது இயற்கையான பாசம் உண்டு. பற்று, பாசம், பிரியம், அன்பு என்ற நான்கு நிலைகளில் அது அமையும். உடலையுடையவன் மனிதன் என்பதால் உடலுக்குரிய பற்று இயல்பாக இருக்கும். உணர்விருப்பதால் பாசம் இருக்கும். பல குழந்தைகளிருந்தால் எல்லாக் குழந்தைகளிடமும் பற்றிருக்கும். பாசம் சில குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும். பாசம் பழக்கத்தைப் பொருத்தது. பற்று பிறப்பில் வருவது. பிரியம் ஏதோ ஒருவருக்குத் தானிருக்கும். அவர்களுக்கும் அந்தப் பிரியம் குழந்தைகளிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது. பிரியமுள்ளவருக்கு அப்பிரியத்தைப் பொதுவாக ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். பலருக்குத் தன்

பிரியத்தைக் கொடுப்பது சிரமம். பிரியத்தை நண்பனுக்குக் கொடுக்கலாம். அண்ணனுக்கும் அளிக்கலாம், மனைவி அதற்குரியவளாக அமையலாம். சில குழந்தைகள் பெறலாம். எப்படி அமைவதானாலும் மனிதனுக்குள்ள பிரியத்தை ஓரிருவரே பெறுவர். அவர்கள் யார் என்பதைச் சந்தர்ப்பம் நிர்ணயம் செய்யும். அதனால் உன் குழந்தை மீது நிச்சயமாகப் பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வாகும்.

நம் நல்ல குணங்கள் அவரிடம் காண்பதால், அவற்றை அறிவது நாம் நம்மை அறிவதாகும். நாம் உலகத்திடமிருந்து மறைத்த குறைகள் நம் குழந்தைகளிடம் காண்பதால், அதை அறிந்து ஏற்றுக் கொள்வது நாமே நம்மை முழுவதுமாக அறிவதாகும்.

*******

  1. மனித முயற்சி முழுமையானதன்று, தெய்வ முயற்சி ழுமையுடையது. மனத்தின் முயற்சி முழுமையானதன்று. உடன் முயற்சி முழுமையானது. நம் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால் நாம் தெய்வமாகி விடுகிறோம். எல்லாக் கரணங்களிலும் ஆர்வத்தை உடல் அளவுக்கு உயர்த்தினால், நாம் முழுமையாகத் தெய்வமாகிறோம்.

உடலுக்கு உயர்ந்த செயன் உன்னதம்.

ஜீவனுக்கு 4 பகுதிகள் உண்டு. அவை மனம், உணர்வு, உடல், ஆன்மா, இவற்றுள் எந்த ஒரு பகுதியின் யற்சியும் அல்லது செயலும் முழுமையுடையதன்று, ஏனெனில் அவை ஜீவனின் ஒரு பகுதி. ஓரளவு உடலுக்கு மட்டும் விதிவிலக்குண்டு. இக்கரணங்கள் ஒவ்வொன்றுக்கும் இரு பகுதிகள் உண்டு. நாம் தாழ்ந்த பகுதியிருந்து செயல்படுகிறோம். தெய்வம் உயர்ந்த பகுதியிருந்து செயல்படும். மனம் சிந்திப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது, கற்பனை செய்வது, டிவெடுப்பது ஆகியவற்றை அதன் தாழ்ந்த பகுதியிருந்து செய்கிறது. மனத்திற்கு ஜோதியுண்டு. ஜோதியிருந்து செயல்பட்டால் உயர்ந்த பகுதியில் இருந்து செயல்படுவதாக அர்த்தம்.

அதேபோல் உணர்வுக்கும் இரு பகுதிகளுண்டு, உடலுக்கும் இரு பகுதிகளுண்டு, ஆன்மாவுக்கும் இரு பகுதிகளுண்டு. எல்லாக் கரணங்களிலும் உயர்ந்த பகுதியிருந்து மட்டும் நாம் செயல்பட்டால் அது தெய்வ நிலை. தெய்வநிலையிலுள்ளவர் செயல்படும் வகை அது.

மனத்தில் மனம், உணர்வு, உடல் என்ற மூன்று பகுதிகளுண்டு. சிந்திப்பது மனம். உணர்வது மனத்தின் உணர்ச்சிக்குரிய பகுதி. செயல்படுவது மனத்தின் உடலுக்குரிய பகுதி. மூளை என நாம் அறிவது மனத்தின் உடலுக்குரிய பகுதி. மனம் முயன்று செயல்படும்பொழுது அதன் சிந்தனைக்குரிய பகுதியால் செயல்படுவதால் தன்னில் மூன்றில் ஒரு பாகத்தில் செயல்படுகிறது.

உணர்வுக்கும் இம்மூன்று - சிந்தனை, உணர்வு, உடல் - பகுதிகள் உள்ளன. உணர்வு தீவிரமாகச் செயல்படும்பொழுது அதன் உணர்வுக்குரிய பகுதியால் செயல்படுவதால் அதற்கும் முழுமையில்லை.

உடலுக்கும் இம்மூன்று - சிந்தனை, உணர்வு, உடல் - பகுதிகள் உள்ளன. உடல் தீவிரமாகச் செயல்படும் பொழுது உடன் பகுதியால் செயல்படுவதால் அது மூன்றில் ஒரு பகுதியானாலும், கடைசிக் கட்டமாக இருப்பதால் அதனுள் மனத்திற்கும், உணர்வுக்கும் உள்ள பகுதிகள் அடங்கியுள்ளன. எனவே உடன் ஆர்வம் முழுமை பெறுகிறது. அதனால் தெய்வ நிலைக்கு உயருகிறது. எல்லாக் கரணங்களின் ஆர்வத்தை உயர்த்தினாலும், அல்லது உடன் ஆர்வத்தை உயர்த்தினாலும், மனிதன் தெய்வமாகிறான்.

******

  1. எப்பொருள் ஏராளமாக நமக்குத் தேவைப்படுகிறதோ அதைச் சுலபமாகப் பெறும் வழியொன்றுண்டு. தெய்வத்திற்கு அப்பொருளைக் காணிக்கையாக அளித்தால் அபரிமிதமாக அது நம்மை நாடி வரும். அதை விடச் சிறந்த முறை அப்பொருளை அடுத்தவர்க்குக் கொடுப்பதாகும். உதாரணமாக அபரிமிதமான அன்பு தேவைப்பட்டால் உன் அன்பை மற்றவர்க்குச் சமர்ப்பணமாகவும், தெய்வக் காணிக்கையாகவும் செலுத்த வேண்டும்.

மனிதனிலுள்ள தெய்வத்தின் அபரிமிதமான அம்சம்.

ஒரு பொருளை கடனாகக் கொடுப்பதற்கும், கடமையெனப் பரிசாகக் கொடுப்பதற்கும், அன்பின் அடையாளமாகப் பரிசாக்குவதற்கும், காணிக்கை ஆக்குவதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்ததே.

பரிசாகக் கொடுக்கும்பொழுது அடுத்தவர்க்குப் பயன்படுவது முக்கியம். அன்பின் அடையாளம் பரிசாகும்பொழுது அடையாளம் முக்கியம். தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்து பயிரிடுபவன், வேலை தேடுபவன், குழந்தையை ஆபரேஷனுக்கு அனுப்புபவன் காணிக்கை செலுத்துகிறான். தான் தெய்வத்தால் மட்டுமே வாழ்வதை உணர்ந்து, அடுத்து வரும் வேலையை தான் செய்ய மறுத்து, தான் எந்தத் தெய்வத்தை நம்பி வாழ்கின்றானோ, அதை நம்பி செய்ய முன் வந்து, அந்த வேலை பூர்த்தியான பின் தன் நம்பிக்கைக்கு அடையாளமாக ஒரு பொருளைத் தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வது காணிக்கை.

காணிக்கை தெய்வ நம்பிக்கையிருந்து எழுவது. நம்பிக்கையின் சின்னமாக இருப்பது. தெய்வத்தை தெய்வமாகக் காண்பது அனைவராலும் முடியாத ஒன்று. தெய்வம் சிலையாகவோ, படமாகவோ காணப்படும். தெய்வமாக நமக்குக் காட்சியிலோ, உணர்விலோ தென்படுவது அரிது. அடுத்து மனிதரைத் தெய்வமாகக் காண முயல்வது அதனினும் அரிது. தொழுத கையுள் படையை அடக்கிச் சிவனடியாரைக் கொலை செய்ய வந்தவன் சிவனடியார் வேஷம் தரித்து வந்ததால், கொலை செய்தவனைத் தெய்வமாகக் கண்டார் நாயனார். நமக்கு எப்பொருள் அபரிமிதமாகத் தேவையோ

அப்பொருளைத் தெய்வத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நம்மை அளவு கடந்து நாடி வரும். காணிக்கையானவுடன் அப்பொருளிலுள்ள தெய்வீகம் வெளிப்பட்டு காணிக்கை செலுத்திய நம் நம்பிக்கையை வேகமாக நாடி வருவதால் அது அபரிமிதமாக இருக்கின்றது.

ஒரு திருமணத்தில் தெருவில் ஏராளமான கார் நின்றால் காருடைய சொந்தக்காரர்கள் வந்திருக்கின்றார்கள் என்று பொருள். நாம் காணிக்கையாக நெல்லை செலுத்துகிறோம், பணத்தை கொடுக்கின்றோம், நம் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருளை அர்ப்பணிக்கின்றோம். அப்பொருள்கள் நம் பக்தியையும், நம்பிக்கையையும் தாங்கிச் செல்லும் உடைமைகள். நம் நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட இறைவன் அவன் அருளை நமக்கு அனுப்ப அதே பொருளை அருளைத் தாங்கிச் செல்லும் உடமையாக்குகின்றான். அதனால் நம்மை நோக்கி வருகின்றன.

கட்சித் தலைவர்களுக்கு, பெற்றோர்களுக்கு, கம்பெனி தலாளிகளுக்குத் தாங்கள் பெறும் மரியாதையை விட தங்கள் ஊழியர்கள், குழந்தைகள், சிப்பந்திகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு அதிக க்கியம். இறைவனுக்கு அதுபோல் தன் அடியார்கள் க்கியம். அதைவிட அவன் சிருஷ்டித்த மனிதனும், மற்ற பொருள்களும் முக்கியம்.

இறைவனுக்குச் செய்யும் சமர்ப்பணம் உயர்ந்தது. அவனது அடியார்களுக்குச் செய்யும் சமர்ப்பணம் அதைவிட உயர்ந்தது. எல்லாவற்றையும் விட சிறந்ததாகக் கருதப்படுவது எளிய மனிதனுக்கு நாம் செய்யும் சேவை. சேவையைக் காணிக்கையாக மாற்றிச் செய்வதைவிடச் சிறந்த காரியமில்லை.

எளிய மனிதனில் உள்ள தெய்வீகத்தைக் கண்டு அதற்குச் சேவை செய்ய முன் வந்து செய்யும் சேவையை நம் தெய்வ நம்பிக்கையின் வெளிப்பாடாகச் செய்வது தெய்வ வழிபாட்டின் சிகரம்.

******

  1. சமூகம் கடந்ததை மறந்து நடப்பதைக் கருதும். மனம் கடந்ததை மனதில் கொண்டு இன்று கசங்கும். ஆன்மீக வாழ்வு கடந்ததையும் எதிர்காலத்தையும் சேர்த்து இன்றைய வாழ்வை சிறப்பிக்கின்றது. அது முதிர்ந்து திரிகாலத் திருஷ்டியாகிறது.

திரிகால திருஷ்டியின் முழுமையான நிகழ்காலம்.

பரம எதிரிக்குப் பணம் வந்துவிட்டால் அவன் மீது பாசம் வரும். எவனை ஊரால் ஏளனமாக நடத்தினார்களோ அவனுக்குப் பதவி வந்துவிட்டால் அனைவரும் அவனை ஏற்றுக் கொள்ளும் முறை கவனிப்பதற்கே சிறப்பாக இருக்கும். இன்று உயர்ந்த நிலையில் ஒருவன் இருந்தால் அவனுடைய நேற்றைய நிலை, பழைய மோசடி, கேவலமான நிலை ஆகியவற்றை உலகம் க்ஷணத்தில் மறந்துவிடும். செல்வம் வந்தால் மட்டும் இது உண்மையில்லை. எந்தப் பண்ணையார் தெரு வழியே நடக்க அனுமதிக்க வில்லையோ அவர் ங.ட. எலக்ஷனுக்கு நிற்கும்போது நடக்க அனுமதிக்காதவன் வீடு தேடிச் சென்று இரு கரம் கூப்பி வோட்டு கேட்க அதே பண்ணையார் தயங்கவில்லை. ங.ட. எலக்ஷனுக்குள்ள மகத்துவம் அது. இன்று மனம் ஏற்றுக் கொள்ளும் என்றால் கடந்தது எதுவானாலும், சமூகம் மறந்துவிடும்.

பத்துக் கோடி சம்பாதித்த பின் சிறுவயதில் பள்ளிக்கூட பீஸ் கட்ட முடியாததை நினைத்து கண் கலங்கும். நூறு பெரிய மனிதர்கள் வந்து அஞ்ச செலுத்தும் பொழுதும் 25 வருஷத்திற்கு முன் கிடைக்காத பிரமோஷனை மனம் நினைக்கும். அன்று பிரமோஷனில்லை என்று கூறிய ஆபீஸருடைய சொற்களை இன்று நினைத்து மனம் சுடுவதை உணருவோம். உற்றாரையும், ஊராரையும் எதிர்த்துத் தன் செல்வ நிலையைப் புறக்கணித்து அன்பிற்காக ஓர் ஏழைக் கதாசிரியரைத் திருமணம் செய்து கொண்ட பெண், இன்று எவ்வளவு அந்நியோன்யமாக அவருடன் இலட்சிய மனைவியாக வாழ்ந்தாலும் தம் அத்தை மகளையே அவர் விரும்பினார் என்ற செய்தி சாகும்வரை அவள் வாழ்வில் ஜீவனைக் கருகிப் போகச் செய்யும்.

சமூகத்திற்கு நிகழ்காலம் நிதர்சனம். மனத்திற்குக் கடந்தகாலம் பொக்கிஷம். எதிர்காலம் இனிய கற்பனைக்குரியது. நிதர்சனம் (ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் ழ்ங்ஹப்ண்ற்ஹ்) ஜடத்திற்குரிய உண்மை. உடலால் வாழ்பவருக்கே பொருந்தும். கடந்தகாலம் உணர்வுக்குரிய லட்சியம். ஆசையாலும், பிரியத்தாலும் ஆட்கொள்ளப்பட்டவருடைய உலகம் அது. கற்பனைக்குரிய எதிர்காலம் மனத்திற்குரியது. இவை எவையும் ஆன்மாவுக்கு உரியவையல்ல.

ஆன்மாவுக்குரியது காலமில்லை. ஆன்மா காலத்தைக் கடந்தது. ஆகவே உடலாலும், உணர்வாலும், மனத்தாலும் கட்டுப்படாதது. ஆன்மீக நிலைக்கு உடலும், உணர்வும், மனமும் கட்டுப்படும். ஆன்மீக வாழ்வை ஏற்றுக்கொள்பவருக்கு ங.ட. எலக்ஷனும் வாக்காளர் பெருமக்களும் வெறும் நிகழ்ச்சிகள். கணவனுடைய விஸ்வாசம் மனைவியைத் தொடாது. அவனுடைய விஸ்வாசத்தின் பலனை அனுபவிப்பது அவனே. கணவனுடைய ஆன்மா அவன் விஸ்வாசத்தால் உயராது, விஸ்வாசம் குறைவதால் கசங்காது. ஆன்மா மனிதர்களுடன் தொடர்பு கொள்வதில்லை. அவருடைய ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளும். உணர்வுடனோ, நிகழ்ச்சியுடனோ தொடர்பு கொள்வதில்லை. அவற்றிலுள்ள தெய்வீகத்துடன் தொடர்பு கொள்ளும். அதனால் அந்தத் தெய்வீகத்தால் நிறையும். தெய்வீகம் க்காலத்திற்கும் உரியது. அந்நிலை முதிர்ந்தால் க்காலமும் உணர முடியும். அதுவே திரிகால திருஷ்டி.

********

  1. நாம் பிறந்த மண்ணின் பகுதி. நம் உடல் உறையும் ஆன்மாவின் பகுதியாகவும் நாமிருக்கின்றோம். ஆன்மாவைக் கண்டு சித்தி பெறுபவன் யோகி. உடலால் பிறந்த மண்ணின் ஆன்மீகத்தைக் காண்பவன் பூரணயோகி.

உடல் பிறந்த மண்ணின் ஆன்மீகம்.

மண்ணாலான உடலும், சக்தியால் நிறைந்த உணர்வும் அறிவாலான மனமும், ஜோதிமயமான ஆன்மாவும் சேர்ந்ததே ஜீவன். ஜீவனுக்குரியது ஜீவாத்மா, அது பரமாத்மாவின் பகுதி.

மனித வாழ்வு எல்லா நிலைகளையும் தழுவியதன்று. ஏதோ ஒரு நிலையில் நின்று வாழ்வை அந்த நிலையில் பூர்த்தி செய்து கொள்கிறது. குறைந்தபட்சமாகப் பூர்த்தி செய்வதும் உண்டு. அதிகபட்சமாகப் பூர்த்தி செய்வதும் உண்டு.

உடலால் வாழ்பவன் உணவைப் பிரதானமாகக் கருதுகிறான். மூன்று வேளை சாப்பாடு கிடைத்தால் பொழுது போகிறது, இருக்க இடம் இருக்கிறது, வேறு பிரச்னையில்லை என்பவன் வாழ்வை முதல் நிலையான (ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப்) உடல் குறைந்தபட்சமாகப் பூர்த்தி செய்பவன்.

நூறு ஏக்கர் நிலம், ஆளுகை மாகாணம், ஊரில் நாட்டாமை, செல்வாக்கு, வீடு நிறைய தானியம், பவுன், வெள்ளி நகை பாத்திரம் நிறைந்த வாழ்க்கை தல் நிலையான உடன் வாழ்வை அதிகபட்சமாகப் பூர்த்தி செய்வதாகும்.

அடுத்தது உணர்வு. குடும்பத்தின் (சைஸ்) அளவைக் கருதாமல் பாசமும் பற்றும் நிறைந்த மனைவி மக்களுடன் அன்பின் பிணைப்பால் ஆர்வமாக வாழுபவர் செல்வ நிலை எப்படியிருந்தாலும் குறைந்த பட்ச நிலையில் உணர்வால் வாழ்வைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். பொதுவாக இவர்களுக்கு வறுமை, நோய் இருக்காது.

செல்வ நிலையை இரண்டாம்பட்சமாகவும், ஊரில் க்கியத்துவம், தலைமை, செல்வாக்கு, அதிகாரத்தைத் தேடி வெற்றி பெற்றவர் குடும்பத்திலும், தன் ஜாதியிலும், உள்ளூரிலும், எங்கிருந்தாலும் இருக்கும் இடத்தில் முதன்மையாக இருப்பவர் உணர்வில் வாழ்வை அதிகபட்சத்தில் பூர்த்தி செய்பவர்கள் அரசியல் தலைவர்களாகவும், அதிகார பீடத்தில் இருப்பவர்களாகவுமிருப்பார்கள் இவர்கள்.

பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அறிவு நிலையில் வாழ்வைக் குறைந்தபட்ச நிலையில் பூர்த்தி செய்பவர்கள். இவர்களுக்குப் புகழும், செல்வமும் வந்து அதிக பட்ச நிலையிலும் அறிவின் வாழ்வைப் பூர்த்தி செய்வதுண்டு.

இவை பல அளவில் பல நிலைகளில் கலந்து காணப்படும். ஆன்மீகத்தைத் தேடி தவம் பத்து ஞான யோகத்தாலோ, மற்ற வழியாலோ மோட்சம் பெறுபவர் ஆன்மீக வாழ்வைக் குறைந்தபட்ச நிலையில் பூர்த்தி செய்பவர்.

உடலுக்கு ஆன்மீகம் உண்டு. அதை அன்னமயப் புருஷன் என்பார்கள். அதன் மூலம் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அடைவது மோட்சம். ஹடயோகப் பாதை அது. அதற்குரிய ஆன்மீகப் பலன் ஆன்மீக நிலைகளில் முதற்படி. கர்மயோகம் அடுத்த நிலை. பிராணமயப் புருஷன் மூலம் மோட்சம் பெறுவது கர்மயோகம். சைத்தியப் புருஷன் மூலம் மோட்சம் பெறுவது பக்தி யோகம். மனோமயப் புருஷன் மூலம் மோட்சம் பெறுவது ஞானயோகம், ராஜயோகம், ஹடயோகம் முதற்படியானால் ஞானயோகமும், ராஜ யோகமும் கடைசிநிலை. அதனால் ஞானி பக்தனையும், ஆசனம் செய்பவனையும் கே செய்வதுண்டு.

இம்மார்க்கங்கள் எல்லாம் ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பவை. அதையே மோட்சம் என்கிறோம். நம் கரணங்களில் உயர்ந்தது ஆன்மா. தாழ்ந்தது உடல். ஆன்மாவுக்கு மோட்சம் என்பது ங.ட.களுக்கு வீட்டு வசதியும், விமானப் பிரயாண வசதியும், பென்ஷனும் கொடுப்பது போன்றது. கடைசி நிலை மனிதன் கிராமத்திருக்கின்றான். அவனை வறுமைக் கோட்டைத் தாண்டச் செய்வதும், அவனுக்கு எழுத்தறிவு கொடுப்பதும், குடி நீர் வழங்குவதும், வீடு கட்டித் தருவதும் உடலுக்கு மோட்சம் கொடுப்பதை ஒக்கும்.

இன்றுவரை யோகம் ஆன்மாவின் மோட்சத்தையே நாடுகிறது. அதற்கடுத்த நிலையில் மனத்திற்கு மோட்சம் உண்டு. அடுத்த நிலையில் உணர்வுக்கு மோட்சம் உண்டு. கடைசி நிலையில் உடலுக்கு மோட்சம் உண்டு.

மனத்திலும், உணர்விலும், உடலும் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று ஆன்மீகப் பகுதியான புருஷன். அதை அன்னமயப் புருஷன், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன் என்கிறோம். அதற்குக் கீழ் மனத்தில் ஜடமான மூளை இருக்கிறது. உணர்வுக்குக்

கீழே ஜடமான நரம்புள்ளது. அன்னமயப் புருஷன் ஸ்தூலமான உடல் உறைகிறது. மனத்தின் ஜடமான பகுதிக்கு மோட்சம் கிடைக்க இதுவரை எவரும் யோகம் செய்ததில்லை. உணர்வின் ஜடமான பகுதியான நரம்புக்கு மோட்சம் கிடைக்கவும் யோகம் கிடையாது. அன்னமயப் புருஷன் உறையும் உடலுக்கு விடுதலையளித்து மோட்சம் கிடைக்க நினைத்தவரில்லை. அதை இலட்சியமாகக் கொண்டது பூரணயோகம். தான் தேடும் மோட்சத்தைத் திருவுருமாற்றம் என்றழைக்கிறது.

காயமே இது பொய். மலக்கூடு அழியும் உடல். உதாசீனத்திற்குரியது என்று யோகிகள் புறக்கணித்த உடலை நாடி அதனுள் உள்ள ஆன்மீகத்தைத் தொட்டால் உடல் பிறந்த மண்ணின் ஜோதி வெளிவரும். அதற்கு மோட்சம் என்னும் திருவுருமாற்றத்தை நாடுபவன் பூரணயோகி.

******

  1. சட்டத்தைப் பிறப்பிப்பவன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் எனினும் சட்டத்தை அமுல்படுத்தும் பொழுது சாதாரண மனிதனை விடத் தன்னை அதிகமாகச் சட்டத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான்.

சட்டத்தைப் பின்பற்றும் பெருநெறி. நெப்போயனைப் பற்றி ஒரு கதை உண்டு. சக்கரவர்த்தியாக இருக்கும்பொழுது பாரிசில் ஓர் இடம் சர்க்காருக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எடுத்துக் கொள்ள அதிகாரம் இருந்தாலும் அதிகாரத்தைச் செலுத்தாமல், மற்றவர்கள்போல் சக்கரவர்த்தியும் தேவைப்பட்ட இடத்தை விலை

கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தார். மனைக்குரியவன் ஏராளமான விலை கேட்டான். சக்கரவர்த்திக்கே அது பெரிய தொகை. அதிக விலை என்பதால், அதை விட்டு வேறிடம் பார்த்தார்கள். டிவாக அவன் சொன்ன அதிக விலை கொடுத்து வாங்க சம்மதித்தார். மனைக்குரியவன் மேலும் விலையை இரட்டிப்பாக்கினான். இப்படிச் செய்தால் விலையே கொடுக்காமல் சர்க்கார் இடத்தை எடுத்துக் கொள்ளும் என்று அனைவருக்கும் புரிந்துவிட்டது. மீண்டும் அதைவிட்டு வேறிடம் பார்த்து, முடிவாக அவனிடம் அவன் சொன்ன அதிக விலைக்கு வாங்க ன் வந்தார்கள். மறுபடியும் விலையை இரட்டிப்பாக்கினான் மனைக்குரியவன். நிலைமை மீறி விட்டதால் நிதானத்திற்கு இனி இடமில்லை. அரச அவை அடுத்த கட்டத்தைப் பதட்டத்துடன் எதிர்ப்பார்த்தது. சக்கரவர்த்தி நெப்போயனுக்கு நிதானம் தவறிவிட்டது. அவர் அதிகாரத்தை எளிதில் செயல்படுத்தும் நிர்ப்பந்தத்தை மனைக்குரியவன் பல றையும் வற்புறுத்தி ஏற்படுத்தி விட்டான். இழந்த நிதானத்தைப் பொறுமையாக மீண்டும் பெற்ற சக்கரவர்த்தி சட்டத்தைச் சக்கரவர்த்தி ஏற்றுக் கொண்டு மதிப்பதற்கு அடையாளமாக நான் அம்மனையை வாங்கும் எண்ணத்தை இத்துடன் கைவிட்டு விடுகிறேன் என்று பிரகடனப்படுத்தினார்.

சட்டத்தை ஏற்படுத்தியவனுக்கு அதை மாற்றும் திறமையுண்டு. என்றாலும், தான் ஏற்படுத்திய சட்டத்திற்குத் தானே பணிவது ஜனநாயக மனப்பான்மை. இன்றுவரை உலகம் ஜனநாயகத்தைப் போற்றி வளர்த்த விதம் இதுவே. சிபிச்சக்கரவர்த்தி கருணையை வெளிப்படுத்தினார். மனுநீதி சோழர் தாம் ஏற்படுத்திய சட்டத்திற்குத் தம் மகனைப் பயாக்கச் சம்மதப்பட்டார்.

இறைவன் உலகைச் சிருஷ்டித்தவன். சிருஷ்டியை எப்படி மாற்றவும் அவனால் முடியும். ஆனால் சிருஷ்டியின் நிலைக்குரிய சட்டத்திற்கு இறைவன் எப்பொழுதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரைமுறைக்குள் செயல்படுகிறான்.

பெயிலான மாணவன் பிரார்த்தனை செய்தால், அவன் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யும் இறைவன் பரீட்சை சட்டங்களுள் ஒன்றின் வாயிலாக அவனுக்கு அனுக்கிரஹம் செய்கிறார். ஒரு பையன் தான் ந.ந.க.ஈ. கணக்குப் பரீட்சை சரியாக எழுதவில்லை. எனவே மீதிப் பரீட்சை எழுத மாட்டேன் என்று முடிவு செய்த பொழுது, அவனுக்குத் தேறுதல் சொல்ல முன் வந்தவர்கள் அவனுக்கு எத்தனை மார்க் வரும் என்று கூட்டிக் காட்டினர். 32 வந்தது. 35 வேண்டும். சில சமயங்களில் 32 அல்லது 31 வாங்குபவர்களும் பாஸ் செய்கிறார்கள். பையன் மீதிப் பரீட்சை எழுதினான். பாஸ் செய்துவிட்டான். அன்னை பக்தர் ஒருவர் பிரார்த்தனையால் பையன் பாஸ் செய்துவிட்டான். சர்ட்டிபிகேட் வந்தபொழுது அவனுக்கு மார்க் 42 என்றிருந்தது. எப்படி என்று தெரியவில்லை. அந்த வருஷம் கேள்விகள் கடினமானதால் அனைவருக்கும் 12 மார்க் சேர்த்துப் போட்டார்கள் என்பது செய்தி. இறைவன் கருணை இருக்கும் நிலைகளுக்குட்பட்டு செயல்படுவதே வழக்கம். தன் சட்டத்திற்குத் தானே பணியும் பாங்கு அவனுக்குண்டு.

*******

  1. பெற்றோர் குழந்தைபாசம்; தம்பதிகள்; நட்பு; குரு சிஷ்ய உறவு ஆகியவை உறவுகளில் சிறந்தவை. உறவைப் புனிதப்படுத்தும்பொழுது உச்சக்கட்டத்தை எட்டுவது தம்பதிகள் உறவு, புனிதப்பட்ட உறவை ஆன்மீகச் சிகரத்திற்கு கொண்டு செல்ல குரு சிஷ்ய உறவே அனுமதிக்கும்.

திருமணத்தைவிட உயர்ந்த குருசிஷ்ய உறவு. ஆபீஸில் பழகுவது, வியாபாரத்தில் வாடிக்கைக் காரராக இருப்பது; ஒரே காலனியில் குடியிருந்து பழகுவது, சொந்தம் என்பதால் பழகுவது போன்ற உறவுகள் சந்தர்ப்பத்தால் ஏற்பட்டன. பொதுவாக மேலெழுந்தவாரியாக இருக்கும். அவை உயர்ந்த நிலைக்குப் போவதில்லை.

இரத்தபாசம், தாம்பத்யம், நட்பு, சிஷ்யபாவம் ஒருவரை அடுத்தவருடன் இணைத்துவிடும். அதனால் உறவு சிறப்படைகிறது.

உடல், உணர்வு ஆகிய இரண்டுமே இங்கு முக்கியம். மனம் பொதுவாக நட்பு, உறவில் செயல்படுவதில்லை. ஆன்மா எட்டாத நிலை. பெற்றோர் குழந்தைகளுடன் இரத்த பாசத்தால் உறவுள்ளவர்கள். உடல் முதல் நிலை என்பதால் இது உயர்ந்த உறவாகச் சிறந்து வளர்வதில்லை. இரத்த பாசம் அதற்குரியவற்றை ஏற்படுத்தும். அதனுடன் வேறு அம்சங்கள் கலந்து வந்தால் அவை சிறக்கும் வாய்ப்புண்டு. இரத்த பாசத்தை நாம் மிக உயர்ந்ததாகக் கருதுகிறோம். அது உண்மை. ஆனால் உறவில் அது முதல் நிலையில் உள்ளது.

நட்பு, உணர்வால் ஏற்படக் கூடியது. இவ்வுணர்வு தேவையாலோ, சந்தர்ப்பத்தாலோ ஏற்பட்டால் மேலெழுந்தவாரியாக நின்றுவிடும். உயர்ந்த அம்சமான விஸ்வாசம் ஏற்பட்டால் உணர்வின் உறவு சிறக்கும். உணர்விலுள்ள உயர்ந்த அம்சத்தால், நட்பு உயர்ந்துவிடும். உணர்வுக்கு மற்ற கரணங்களுக்கு உண்டானதுபோல், ஆன்மீகம் உண்டு. உணர்வின் ஆன்மீகம் வெளிப்பட்டுக் கலந்தால் அது உயர்ந்த நிலை.

தம்பதிகளுக்கிடையே உள்ள உறவு உணர்வாலாகியது. உணர்வின் நிலையை 4 கட்டமாகப் பிரிக்கலாம். மேலெழுந்தவாரியான உணர்வு, நெருங்கிய உணர்வு இவை இரண்டும் மனித சுபாவத்திலுள்ளது. மூன்றாம் கட்டத்தில் ஆன்மீக அம்சமாகிய விஸ்வாசம் உள்ளது. கடைசி உயர்ந்த கட்டத்தில் ஆன்மாவேயுள்ளது. நண்பர்கள் விஸ்வாசத்தால் பிணைக்கப்பட்டால் சிறந்த நண்பர்களாவார்கள். தம்பதிகள் விஸ்வாசத்தால் பிணைக்கப்பட்டால் இது இயற்கையிலேயே இணையும் உறவாக இருப்பதால் அது நட்பைவிட உயர்வாக மிளிரும். நிலை ஒன்றானாலும் தரம் தம்பதிகளுக்கு உயர்ந்து நிற்கும். கடைசிக் கட்டத்திலுள்ள ஆன்மாவில் தம்பதிகள் கலக்க முடியும் என்றாலும் உணர்வில் விஸ்வாசத்துடனே நிற்பதே வழக்கம். குடும்ப வாழ்வும்,

ஆன்மீகமும் சேராத காரணத்தால், தம்பதிகள் உறவு உணர்வின் உயர்ந்த நிலையான ஆன்மாவில் சேர்ந்து பூர்த்தியாவதில்லை.

குரு சிஷ்ய உறவுக்கு இது அவசியம். ஆன்மாவில் அவர்கள் இணைந்தே குரு சிஷ்யனாக இருப்பதால், உணர்வின் ஆன்மாவில் அவர்கள் கலக்க முடிவு செய்தால் மனித உறவின் சிகரத்தைத் தொடுவார்கள். எனவே சிறந்த உறவாக அது அமையும்.

*****

  1. அன்னையின் சாந்தி கலவரத்தைக் கலைக்கும், இரு நாட்டிடையேயுள்ள போரை நிறுத்தும்.

போரை நிறுத்தும் அமைதி.

ஒரு பெரிய கலவரம் நடக்கும்பொழுது அன்னையின் சாந்தியை அவ்விடத்தில் பொழிவதுபோல் கற்பனை செய்தால், கலவரம் கலைவதைக் காணலாம். கலவரத்தை நிறுத்துவதும், போரை நிறுத்துவதும் ஒரே (ல்ழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங்) தத்துவத்தால்தான். அப்படியானால் ஏன் அன்னையின் சக்தி எல்லா யுத்தங்களையும் தடை செய்யக்கூடாது என்று தோன்றுகிறது.

கலவரத்தின் மீது சாந்தி பொழியும் சோதனையை நாம் செய்து வெற்றி பெற்றால் காஷ்மீர் மீது சாந்தியை பொழியச் செய்து அமைதியை நிலை நிறுத்த அடுத்த சோதனையைச் செய்தால் அது பப்பதில்லை. அது பக்காததால் தத்துவம் தவறு என்றாகாது. அதற்கு மேலும் ஒரு நிபந்தனையுண்டு. சாந்தியை அழைப்பவருக்கு எந்த விஷயத்தில் அக்கறை இருக்கின்றதோ அல்லது எந்த அளவுக்கு அக்கறை இருக்கின்றதோ அந்த அளவுக்குப் பலன் தரும். காஷ்மீர்வாசி ஒருவர் சாந்தியை அழைத்தால் அது காஷ்மீரில் பக்கும்.

ஓர் எலக்ஷன் சமயத்தில் ஒரு மாநிலத்தில் கலவரத்தை அதிக அளவு எதிர்ப்பார்த்து பிற மாநிலங்களிருந்தும் போலீஸ், ரிஸர்வ் கொண்டு வந்திருந்தார்கள். அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் அதே நாட்களில் ஆசிரமம்

வந்திருந்தார். அவர் மனம் கலங்கியிருந்தது. அளவு கடந்து கலங்கியிருந்தது. பேப்பர் செய்தி அவருடைய பீதி நியாயமானது என்று சொல்யது. அவர் தேச பக்தர். நாட்டில் கலவரம் வரக்கூடாதென்று சொல்லும்பொழுதே உணர்ச்சி வசப்படுவார். சாந்தியை அழைத்தால், கலவரம் கரைந்து போகும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். தம் மக்கள் மீது உணர்வால் ஒன்றியவர். காலையிருந்து இரவு வரை கண்ணைத் திறக்காமல் சாந்தியைத் தம் மாநிலத்தின் மீது அழைத்தார். அது மழையாகப் பொழிவதைக் கண்டார். ஒளியும் வெள்ளமாகப் பாய்வதைக் கண்டார். எலக்ஷன் நடந்தது. ஒரே ஒரு சிறு கலவரமும் இல்லை என்பதை நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் சந்தோஷப்பட்டார்.

உணர்வால் நாம் ஏற்றுக் கொண்டுள்ள எந்தப் பிரச்சினையும் அன்னையின் சக்திக்குக் கட்டுப்படும். எலக்ஷனில் சாந்தியை அழைத்தவர் வாழ்க்கை றையானது. அவர் அழைத்த சாந்தி நாட்டுக்கு நல்லது செய்தது. அதே போன்ற மற்றொருவர் தம் வீட்டில் சண்டை சச்சரவு உள்ளவராக இருந்தால், அவர் அழைக்கும் சாந்தி எலக்ஷனை அமைதியாக நடத்தும். அத்தனைக் கலவரமும் அவர் வீட்டில் கிளம்பும். தம் வீடு தமக்குக் கட்டுப்படாத நேரத்தில் நாட்டுக்குச் சேவை செய்யப் போனால், வீட்டில் பிரச்னை வரும்.

தம் வாழ்வு முறையானதாகவும், தம் உணர்வு ஒரு பொதுப் பிரச்சினையில் ஈடுபட்டும் இருந்தால் அவரால் அந்தப் பொதுப் பிரச்சினையை அன்னை சக்தியால் தீர்க்க முடியும்.

********

  1. அன்னையை வாழ்வினுள் அழைத்த பின் பொருளின் நிலை மாறுகிறது, பெறுபவர் அளவு கடந்தது என்று கருதும் தொகை கொடுப்பவருக்குக் கடுகளவு என்று தோன்றும்.

அளவு கடந்த கடுகு.

கொடுப்பவர் பெருஞ்செல்வராகவும் பெறுபவர் ஏழையாகவுமிருந்தால் இந்நிலை ஏற்படும். அன்னையை ஏற்றுக் கொண்ட வாழ்வில் நடப்பது வேறு.

தண்ணீர்ப் பஞ்சமான ஊரில் ஒரு குடம் தண்ணீரில் குளிக்கும் பழக்கம் உண்டு. ஆறு பாயும் ஊருக்கு இவர்கள் வந்தால், பிரசாகமாக நீர் புரள்வது இவருக்குப் புதியதாக இருக்கும். எத்தனை நூறு குடம் தண்ணீர் எடுத்துக் குளிக்கலாம் என்பதன்று கேள்வி. ஆறு வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றது. நாம் ஆற்று நீரைப் பயன்படுத்தும் கண்ணோட்டத்தில் பஞ்சமான ஊர் வழக்கப்படிக் கருதினால் நமக்கு விசித்திரமாக இருக்கிறது. நமக்குப் பெருமளவு நீர் என்பது ஆற்றைப் பொருத்தவரை ஒரு துளியாகும்.

தண்ணீரில்லாத நிலம் ஏக்கர் ரூ. 10,000, நீருள்ள இடம் ஏக்கர் ரூ. 40,000 என்ற ஊரிருந்து ஒருவர் 1000 ஏக்கர் பழத்தோட்டம் போட முயன்றார். 4 கோடி ரூபாயில் நிலம் வாங்குவதெப்படி என்பதால் நிலம் மவாக உள்ள இடங்களைத் தேடிப் போனார். வழிவழியாகப் பனைக் காடு. பனை வளர்ந்து பலன் தர பல வருஷமாகும். இன்று பொட்டல் காடாகி விட்டது. பழைய மரங்கள் அழிந்து விட்டன. புதியவற்றை எழுப்ப முடியவில்லை. ஆயிரம் ஏக்கருக்குமேல் நிலமிருக்கிறது. இருபது ஆண்டுகளாக அதை விற்க நினைத்தால், இதுவரை ஒருவரும் விலை கேட்க முன் வரவில்லை. ஏக்கர் 300 அல்லது 400 கிடைத்தாலும் 3 அல்லது 4 லட்சம் கிடைக்கும் என்று நினைப்பவருக்கு வாங்குவாரில்லை. பழத்தோட்டம் போட விரும்புவர் செய்தி கேட்டு போய்ப் பார்த்தார். ஏக்கர் 400 ரூபாய்க்கு கிடைப்பது அதிர்ஷ்டம். ஆனால் பொட்டல் காடு. அவரும் அதை விலை கேட்கவில்லை. அழைத்துப் போன புரோக்கர் அங்கிருந்த ஒரு கிணற்றைக் காட்டினான். ஏராளமான நீர். எப்படி என்று யோசனை பிறந்தது. அருகில் ஆறு ஓடுவதால் ஏராளமான ஊற்று நீருக்குப் பஞ்சமில்லை. தாராளமாக ஏக்கர் ரூ. 1000 விலை கேட்டார். உடனே கிரயம் ஆகிவிட்டது. கொடுப்பவருக்குக்

கடுகளவாக இருப்பது, பெறுபவருக்கு அபரிமிதமாக இருக்கும் சந்தர்ப்பம் வாழ்க்கையில் எப்பொழுதோ ஒரு முறை ஏற்படும்.

அன்னை இயற்கை சக்திகளை அபரிமிதமாகக் கையாள்வதால், அன்னையை ஏற்றுக் கொண்டவுடன் பொருள் அபரிமிதமாக நம்மை நாடி வரும். மாமரத்தைப் பார்த்து பழம் கேட்டால் நம் வேண்டுகோளுக்கிணங்கி அது பழுத்தால் ஆயிரம் பழம் விழும். மரத்தால் ஒரு பழம் பழுக்க முடியாது. ஒரு முறை பழுத்தால் ஓர் ஆயிரம் பழம் பழுக்கும். அது இயற்கை நியதி.

அன்னையை ஏற்றுக் கொள்வதில் நாம் முதற் கட்டத்தைத் தாண்டுவதில்லை. பிரவாகமான அன்னையின் சக்தி இயற்கையின் வளத்தை வாரி வழங்கும் நிலையில் நாம் அன்னையை ஏற்றுக் கொள்ள நம் குறுகிய மன நிலைகளைக் கடந்து வரவேண்டும். கடந்த நிலையில் இது உண்மை.

******

  1. ஆன்மீக முன்னேற்றம் அருளை அளவு கடந்து கொண்டு வரும். பொதுவாக அதன் அறிகுறியாகப் பெரு மழை வரும்.

அருளாக வரும் பெருமழை.

பல நாள் தியானத்தை மேற்கொண்டால் ஒரு நாள் மௌனம் திடீரென்று ஏற்படும். வெள்ளமாக ஜோதி தெரியும். சாந்தி ஏற்பட்டு உடல் சிர்க்கும். இவை ஆன்மீக முன்னேற்றத்திற்குள்ள சில அறிகுறிகள்.

எல்லா நிலைகளுக்குமுள்ள ஆன்மீக முன்னேற்றங்கள் உண்டு. அவற்றைச் சுட்டிக்காட்டும் அறிகுறிகள் கனவாகவும், காட்சியாகவும், நிகழ்ச்சியாகவும் தெரியும். முதல் நிலைக்குரியவற்றை இங்கு குறிப்பிட்டேன்.

எண்ணம் அழிந்து மௌனம் ஏற்படுதல்.

உணர்வு கரைந்து மகிழ்வு உற்பத்தியாவது.

தியானம் நிலைத்து, கண் திறந்த பின்னும் தியான நிலை நிற்பது.
உடல் அமைதியாக உணர்வற்ற ஜடம்போல் தோன்றும் ஆழ்ந்த அமைதி.

அகந்தை அழிந்து மனம் விசாலமாகி தலை பெரியதாகத் தோன்றுவது.

இனிமை தோன்றி உணர்வை ஆட்கொள்வது.

பழக்கம் கட்டுப்பட்டு புதிய நிலையை ஏற்க உடல் தயாராகி ஸ்தம்பித்துப்போவது. ஆனந்தம் மனத்துள் துள்ளுவது.

பயம் கரைந்து விடுதலை உணர்வு ஏற்படுவது.

அன்னை நினைவு தானே வருவது.

அன்னை தரிசனம் மனக்கண் முன் தோன்றுவது.

விளங்காத ஸ்ரீ அரவிந்தர் எழுத்து விளங்குவது.

நெடுநாளாக இருந்த கறுப்பு, உணர்வில் மறைந்து ஒளி தோன்றுவது போன்ற பல ஆன்மீக ன்னேற்றங்களுண்டு. அவை சிறப்புறும் நேரம் அருளுக்கு அறிகுறியான பெருமழை வரும். ஆன்மீக ன்னேற்றம் பெரு மழையைக் கொண்டு வரும். அளவு கடந்த அருளை எந்த உருவத்திலும் கொண்டு வரும்.

*******

  1. 90 வயதில் அன்னையின் புன்னகையும், சிரிப்பும் 15 வயது குழந்தையினுடையது போருந்தன. ஆன்மா வெளிப்படும்பொழுது சிரிப்பு போன்ற நம் பழக்கங்கள் இளமையைத் தாங்கி வரும்.

அன்னை ஜீவியத்தின் அருள் நிறைந்த இளமை.

********

  1. ஒரு சிலரைத் தவிர அன்னையை நாடி வருபவர்களில் மற்றவர்கள் கடைசிவரை அன்னையோடிருப்பதில்லை. கடைசிவரை இருப்பவர்கள் அன்னையிடம் நெருங்கி வந்து அவர் இதயத்தில் தங்கி விடுவார்கள். மற்றவர்கள் விலகி விடுகின்றனர். அவர்களில் சிலர் அன்னையை மறந்து விடுகிறார்கள். யாரோ ஒரு சிலர் அன்னையிடமிருந்து பெற்றதையும் விட்டு விடுகிறார்கள். இவர்களில் ஒருவரைக் கூட அன்னை மறப்பதில்லை. எந்த அளவில் தொடர்பு நிற்கின்றதோ, அதே அளவில் அருள் செயல்படுகிறது.

வய விலகியவருக்கும் வழங்கும் அருள். விலகியவர்கள் அன்னை மூலமாக வந்த செல்வத்தை இழப்பதில்லை. ஏற்கனவே தானே வந்த பெருஞ் செல்வத்தை இப்பொழுது பெற அதற்குரிய உழைப்பைக் கொடுத்துப் பெற வேண்டியிருக்கும். அது வாழ்க்கைக்குரிய போராட்டமாக இருக்கும்.

அன்னையை மறந்தவர்கள் ஏதோ ஒரு சமயம் மீண்டும் அன்னை நினைவுபடுத்தும்பொழுது அருள் முன்போல் மழையாகப் பெய்வதைக் காணலாம். அருளை வீசி எறிந்தவர்கள் மீண்டும் அதை அடைய அதற்கே உரிய பிரம்மப்பிரயத்தனத்தை மேற்கொண்டு கண்ணால் இரத்தம் சொரிய வேண்டியிருக்கும்.

*******

  1. அகம் புறத்தைப் பிரதிபக்கும் நிலைகள் மூன்று. முழுச் சக்தியுடைய அகம் அதன் பிரதிபப்பாகப் புறத்தை ஏற்படுத்துகிறது. வமையில்லாத அகம் புறநிகழ்ச்சிகளை பிரதிபக்கும் பாங்குடையது. இவற்றிடையே இந்த இரண்டு அம்சங்களும் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளன.

அகத்தை பிரதிபக்கும் புறநிகழ்ச்சிகளின் மூன்று நிலைகள். கல்லூரித் தேர்தலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்பொழுது பல மாணவர்கள் தலைமைப் பதவியை நாடுகின்றனர். போட்டி உருவாகிறது. தலைமைப் பதவிக்குள்ள எல்லாத் தகுதிகளும் உடைய ஒருவர் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாலும் தாம் நின்றால் தலைவராகலாம் என்ற எண்ணம்

அவருக்குத் தோன்றவேயில்லை. போட்டி நிலைகள் பல கட்டங்களைத் தாண்டி வந்து ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்த நிலையில் பலரும் முன்வந்து தகுதியுடையவர் எவரும் போட்டியிடவில்லை, தகுதியுள்ளவர் ஒருவர் இருக்கின்றார். அவரையே நாம் தலைவராக்க வேண்டும் என்கிறார்கள். போட்டியிட விரும்பிய அனைவரும் ஏதோ காரணத்தால் ஆமோதிக்கின்றார்கள். அனைவரும் அவரை ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அகத்தில் உள்ள திறன் புறத்தில் நிகழ்ச்சிகளை உருவாக்கியதற்குச் சிறு உதாரணம். நம்மைத் தேடி ஒருவர் வருகிறார். அவர் நினைவு அன்று நமக்கு வருகிறது. அவரைப் பற்றிப் பேசுகிறோம். அரை மணியில் நம் முன் நிற்கிறார். அவர் வருகையை நம் மனம் உணர்ந்து பிரதிபத்திருக்கின்றது. நம் உணர்வால் அவர் புறப்பட்டு வரவில்லை. இவற்றிடையே பல நிலைகள் உள்ளன.

*******

  1. பிரம்ம ரிஷி உலகத்தைப் பிரம்மமாகக் காண்கிறார். பூரணயோகி உலகத்தைப் பிரம்மத்தின் வெளிப்பாடாகக் காண்கிறார். பிரம்மரிஷி பிச்சைக்காரன் மனதிலுள்ள பிரம்மத்தைக் காண்கிறார். பூரணயோகி பிச்சைக் காரனையே பிரம்மமாகக் காண்கிறார்.

பிச்சைக்காரனைப் பிரம்மமாகக் காணும் பிரம்ம ஞானம்.

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது வழக்கு, ஒவ்வோர் அணுவும் அவனே. அசைவும் அவனே. அவன் தவிர உலகில் எதுவும் இல்லை என்பது அடுத்த கட்டம்.

எல்லா ஜீவராசிகளுக்கும் வித்தாக அமைவது பிரம்மம் என்பது தத்துவத்தின் முதல் நிலை. வித்து மட்டுமன்று, ஜீவராசியே பிரம்மம் என்பது தத்துவத்தின் முடிவான நிலை.

இந்த மரத்தில் பழுக்கும் பழத்தை நாம் சாப்பிடலாம் என்பது ஒன்று. வாழை மரத்தில் எல்லாப் பாகங்களும் நமக்கு உதவும், கறியாகும் பாகங்கள் பல என்பது

மற்றொன்று. மரத்தின் பழத்தை மனிதன் சாப்பிடுகிறான். இலையை ஆடுமாடுகள் தின்கின்றன. பட்டையையும், மரத்தையும் செல் அரிக்கிறது. மரத்தின் எல்லாப் பகுதிகளும் உணவாக மாறக் கூடியனவே.

மனிதனுள் உள்ள பிரம்மத்தைக் காண்பது முதல் நிலை, மனிதனையே பிரம்மத்தின் வெளிப்பாடாகக் காண்பது முடிவான யோக நிலை. தன்னுடைய ஆன்மாவில் உயர்ந்தவனுக்கு மற்றவருடைய ஆன்மா தெரியும். தன் கரணங்களையும், தன் அசைவுகளையும், செயல்களையும், உணர்வுகளையும் ஆன்மாவாக உணர்ந்தவனுக்குப் பிச்சைக்காரனே பிரம்மமாகத் தெரியும்.

********

  1. கண் எதிரேயுள்ள வாய்ப்பைக் கண்டு கொள்ளாமருப்பது கண்மூடித்தனம். அதிருந்து மீண்டுவந்து அந்த வாய்ப்பு கிடைக்கவேண்டும் என நினைக்கும்பொழுது அது நமக்கு எட்டுவதில்லை. நம்மை அது புறக்கணிப்பதை நாம் மறந்து விடுகிறோம். இனி அது வேண்டும் என்ற ஏக்கம் ஆர்வத்தின் ஆரம்பம். நாம் புறக்கணிக்கப்படுவது ஏக்கம் வருமுன் உள்ள நிலை.

புறக்கணிக்கப்படுவதின் புனிதம்.

*******

  1. அருள் செயல்படும்பொழுது கேட்டது மட்டும் கிடைப்பதில்லை. பல நல்லவை நடக்கும்.

அருள் வழங்கும் ஒன்று பலவாகும்.

மனிதன் விரும்புவது ஒரு பொருள். அருள் ழுமையானது. ஒரு பொருள் அருளில் ஒரு பகுதி. பயிரிடக் கடன் வேண்டும் என்பது பயிருக்குரிய அம்சங்களில் ஒன்று. கடன் கேட்டவர் கடனை மட்டுமே நினைத்தார். அவர் அன்னையைக் கேட்டதால் அன்னை அருள் மூலம் கடன் வழங்கினார். பயிருக்குரிய அம்சங்கள் பல. கடன் கேட்டவருக்குக் கடன் கிடைத்தது. நேரத்தில் கிடைத்தது. வானம்

பார்த்த பயிர் என்பதால் மழை முக்கியம். மழை நேரத்தில் போதுமான அளவு பெய்தது. பூச்சி விழக் கூடாது. விழவில்லை. மகசூல் இரு மடங்கு, இரண்டரை மடங்கு, மும்மடங்கு என்று பலருக்கும் கிடைத்தது. பூச்சியில்லாமல், மழையிருந்ததால், மகசூல் அதிகமாயிற்று. மகசூல் அதிகமானால் விலை உடனே குறையும். மூட்டை ரூ.60 முதல் ரூ.90 வரை விற்ற பண்டம் அந்த ஆண்டு ரூ.90இல் ஆரம்பித்து, நிறைந்த மகசூருந்தும், தொடர்ந்து ஏறிற்று. ரூ.180ஐயும் எட்டியது. ரெகார்ட் எனும்படி ஒரு நாள் 190 ரூபாயும் விற்றது. அருள் செயல்படும் காரியங்கள் இதுபோலப் பூர்த்தியாகின்றன.

******

  1. தான் பெற்ற முழு அறிவை அறியாமை என்றுணர்பவன் ஞானி. தன் அறியாமையை அறிவாகக் கொண்டவன் மனிதன்.

ஞானியின் அறியாமை; மனித அறிவு.

ஸ்ரீ அரவிந்தர் 5 வருஷங்களில் எழுதி முடித்ததை 5 வருஷங்களில் படித்து முடித்தவரில்லை. 30 வருஷமாகப் படிப்பவரும் இன்னும் முழுவதும் புரியவில்லை என்கிறார். ஸ்ரீ அரவிந்தரை அன்னை ஒரு முறை உங்கள் புத்தகங்களை ழ்ங்ஸ்ண்ள்ங் மீண்டும் எழுதவேண்டும் என்ற எண்ணம் என்ன ஆயிற்று என்று கேட்டார். அதற்குப் பதிலாக மீண்டும் அந்த ண்ய்ற்ங்ப்ப்ங்ஸ்ரீற்ன்ஹப் ங்ச்ச்ர்ழ்ற் அறிவுக்குரிய எழுத்துப் பயிற்சியை என்னால் மேற்கொள்ள முடியாது என்றார்.

மௌனம் சித்தித்த பின் பேச முடியாது. மௌனம் திர்ந்து அடுத்த நிலைக்குப் போனால் நினைக்க டியாது. அதற்கடுத்த நிலையில் நினைப்பது அறிவைக் குறைக்கும், எழுதுவது அறியாமையை வளர்க்கும். பகவான் இந்த நிலைக்கு வந்ததால் மீண்டும் எழுத முடியாது என்றார். எந்தப் புத்தகங்களைப் புரிந்து கொள்ள நமக்கு அறிவில்லையோ அவற்றை அறிவின் எல்லைக்குக் கீழ்ப்பட்டதாக, பகவான் கருதுகிறார். இது ஞானியின் மனநிலை.

தனக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டால் அது சரியா, தப்பா என்று யோசனை செய்யாமல் பேச ஆரம்பித்து விடுகிறான் மனிதன். அவன் பேசுவதை ஆர்வமாகப் பலர் கேட்டால், தன்னை அறிவாளி என நினைக்கின்றான். அறிவுடை ஒருவன் முன்வந்து அவன் பேசுவது அனைத்தும் அறிவுக்குப் பொருந்தாது என்று சொல்லும்வரை தன்னைப் பறைசாற்றுவதைச் சாதாரண மனிதன் நிறுத்த மாட்டான். இப்படிப் பேசியவர்கள் ஏராளம்.

இந்தியா பஞ்சத்தால் சாகும். இந்திய விவசாயிக்குப் பயிரிடத் தெரியாது. படிப்பு அனைவருக்கும் இல்லை. சுதந்திரம் வந்தால் நாடு அழிந்து விடும் என்றெல்லாம் பேசி அறிவாளி எனப் பட்டம் பெற்று உயர் பதவியை அடைந்தவர் பலர்.

********

  1. நம் நிலையின் உச்சகட்டத்தைத் தியானத்தில் தொடுகிறோம். அடி மட்டத்தை அன்றாட வாழ்வில் வெளிப்படுத்துகிறோம். நம் குறைந்தபட்ச நிலை ஆன்மீக ன்னேற்றத்தை நிர்ணயிக்கும்.

ஆன்மீகத்தை நிர்ணயிக்கும் அன்றாட வாழ்வு.

எளிய ஆன்மீக நிலையிலுள்ள சிலருக்குச் செல்வாக்கு இருக்கும். அவர்களுடைய அந்தஸ்திற்கு மீறிய இடங்களில் பிரபல்யமாக இருப்பார்கள். அவர்களுடைய சாதுர்யத்தால் அமைவது இது. ஒரு முதலீடு செய்ய வேண்டும். வீடு கட்ட வேண்டும், சம்பந்தம் செய்ய வேண்டும் என்றால் இவர்களுடைய செல்வாக்கிற்குத் தகுந்தாற்போல் அது அமையாது. செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் அது அமையும். ஆயிரம் காலத்துப் பயிர் தோற்றத்திற்கேற்ப அமையாது. உண்மையை அது வெளிப்படுத்தும்.

ஆன்மீகம் முழுமையானது, ஆழமானது, கனமானது. நம் உச்சநிலைக்கேற்ப ஆன்மீகப் பலன் கிடைக்காது. நம் உண்மை நிலைக்கேற்ப அது அமையும்.

******

  1. நாம் யாருக்குப் பணிகின்றோமோ அவரே நம்மை அதிகாரம் செய்ய முடியும். சூட்சும உலகில் உன் எதிரியிடம் தொடர்பு கொண்டாலும் அவனால் உன்னை அதிகாரம் செய்ய முடியும், அழிக்க முடியும். எந்த அளவில் தொடர்பேற்பட்டாலும், எதிரிக்குச் சாதகமாக முடியும். சில சமயங்களில் நினைத்தாலும் அத்தொடர்பு ஏற்படும்.

நினைவாலும் விலக்க வேண்டிய தொடர்பு. பலருடன் பழகுகிறோம். சிலரால் உதவி செய்ய டியும். சிலரால் தொந்தரவு செய்ய முடியும். உதவியைப் பெற நமக்கும் மற்றவர்க்கும் ஒரு காரியமாக உறவு தேவை. முன்பின் தெரியாதவர் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள். நாம் யாரோடு கொடுக்கல், வாங்கல், உறவு, நட்பு கொள்கிறோமோ அவர்களால்தான் நமக்குத் தொந்தரவு செய்ய முடியும். எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒருவரால் நமக்கு உதவவோ, கெடுதல் செய்யவோ முடியாது. ஒரு நண்பன் நமக்குத் தொந்தரவாக அமைகிறான். அவனிடம் உள்ள தொடர்பை அறுத்துவிட்டால் பின்னர் அவனால் தொந்தரவு செய்ய முடியாது. இது நம் வாழ்வில் அறிந்த உண்மை.

சூட்சும உலகத்தின் விதிகள் சற்று மாறுபட்டிருக்கும். அன்னை நம் வாழ்வில் செயல்படுவதும் மாறுபட்டிருக்கும். அன்னையை நாம் அறிந்திருந்தாலும் அல்லது அன்னையை அறியாமல் அவர் விரும்பும் வகையான மனநிலையுடையவராக இருந்தாலும் சில சமயங்களில் அன்னை நம் வாழ்வில் நாம் அறியாமலே செயல்படுவதைக் காணலாம். அன்னையைப் பற்றி லேசாகக் கேள்விப்பட்டிருப்போம். அதையும் மறந்திருப்போம். நமக்கு வேலையிருக்காது. நண்பன் ண்ய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ் வுக்குப் போகும்போது அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று உதவியாக அவனுடன் போயிருக்கும்பொழுது தற்செயலாய் நம்மை அங்கு சந்தித்தவர் மூலம் கிடைத்த செய்தியால் நாம் நல்ல உத்தியோகத்தைப் பெறுவோம். நல்லெண்ணத்தின் மூலம் நாம் மறந்து விட்ட அன்னை நமக்கு அருள்



book | by Dr. Radut