Skip to Content

உலகம் முதல் பிரம்மம் வரை

 

நாம்  கண்ணால்  காண்கிறோம்.  கண்  என்பது  புலன்.  இது புலன்களில்  ஒன்று.  ஐம்புலன்களும்  அகந்தையால் ஏற்படுத்தப்பட்டவை.   புலன்கள்   அகந்தையின்   கருவிகள்.   தவசி கண்மூடி தியானிக்கும்பொழுது புலன்கள் அவிகின்றன. புலன்கள் குவிந்து,   அவிழ்ந்தால்   மனம்   விழித்துக்   கொள்ளும்.   புலன்கள் அவிந்த  பின்  மனம்  தானே  புலனின்றிச்  செயல்படும்.

கண்  மூடியிருக்கும்பொழுது  பார்க்கும்.

காதை  மூடிக்  கொண்டாலும்  கேட்கும்.

தொடாவிட்டாலும்  தொடு  உணர்ச்சியிருக்கும்.

முகராவிட்டாலும்  வாசனை  தெரியும்.

சுவைக்காவிட்டாலும்  ருசி  தெரியும்.

விழிப்படைந்த    மனம்    நிஷ்டையில்    மேலே    போகும். மனத்தினுள்    ஆத்மா   மனோமயப்    புருஷன்        உண்டு. தூய்மையான மனத்தின் ஆத்மா மனத்திலிருந்து விடுதலை பெறும். விடுதலை  பெற்று  உயரும்.  உயரும்  ஆத்மா  பிரம்மத்தை  அறிய அவாவுடையது.   மனம்   பகுதியானது.   பகுக்க   ஏற்பட்ட   கருவி. பிரம்மம் முழுமையானது. முழுமையான பிரம்மத்தைப் பகுதியான மனம்  காண  முடியாது.  பிரம்மத்தின்  ஓர்  அம்சம்,  அல்லது  ஓர் உருவம், ஒரு தோற்றம் மட்டும் தெரியும். அப்படி மனம் பிரம்மத்தைக் காண  முயன்றால்  பிரம்மம்  சச்சிதானந்தமாகத்  தெரியும்.

  • பகுதியான  மனத்தின்  பார்வைக்கு  பிரம்மத்தின் ஓர்  அம்சமாக  சச்சிதானந்தம்  தெரியும்.
  • பிரம்மம்  சச்சிதானந்தமில்லை.
  • சச்சிதானந்தம்  பிரம்மத்தின்  ஒரு  தோற்றம்.
  • சத்து,   சித்து,   ஆனந்தம்   என்ற   மூன்று   அம்சங்களுள்ள சச்சிதானந்தத்தின் ஒரு பகுதியே மனத்தின் பார்வைக்குத் தெரியும்.
  • அப்படிக்   காணும்   ரிஷிகள்   சத்தைக்   கண்டால்,   அதை சச்சிதானந்தத்தின்   ஓர்   அம்சம்   எனக்   கொள்ளாமல்   சத் என்பதையே   முழு   சச்சிதானந்தம்   என்பர்.   அதேபோல்   சித்தை மட்டும்  காண்பவர்களும்,  ஆனந்தத்தை  மட்டும்  காண்பவர்களும் அவற்றையே  முழு  சச்சிதானந்தம்  என்பர்.  மனம்  இப்படி  மட்டும் செயல்படும் தன்மையுடையது.
  • தவத்தின்  உயர்வுக்கேற்ப  சத்  தன்னை  வெளிப்படுத்தும்.
  • சத்  என்பதை  Self  என்று  ஆங்கிலத்தில்  குறிக்கிறார்.
  • இந்த  Selfக்கு  4  நிலைகள்  உள்ளன.
  • முதல்  நிலை  கடந்த  நிலை  Transcendent Self.
  • அடுத்தது  பரமாத்மா  எனும்  Superconscient Self.
  • அதற்கும் அடுத்தது பிரபஞ்சத்தின் ஆத்மா எனும் Cosmic Self.
  • கடைசியானது  அக்ஷரப்  புருஷன்  எனும்  Immutable Self.

கடந்ததை   Self  எனவும்   பிரபஞ்சத்திற்குரியதை   Soul எனவும்   குறிக்கிறார்.   தவத்தின்   நிலைக்கேற்ப   சத்   புருஷன் தன்னைத்   தவசிக்கு   வெளிப்படுத்துகிறான்.   மனிதனிலுள்ள பிரம்மத்தை  self  எனக்  குறிக்கிறார்.  மனிதனுடைய  selfலிருந்து கடந்த நிலையிலுள்ள  Self வரை எல்லாவற்றையும் தழுவும் சொல் spirit, ஆன்மா  எனப்படும்.

முழுமையான   சச்சிதானந்தத்தின்   அம்சங்கள்   பகுதியான மனத்திற்குப்  பிரிந்து  எதிரெதிரானவையாகத்  தெரிவதற்கும்  நல்ல உதாரணம், ஈஸ்வரன்    இது  சச்சிதானந்தத்தின்  முழுமையான  மூன்று அம்சங்களில்    பிரம்மம்,  புருஷன்,  ஈஸ்வரன்    ஒன்று.  சத்திய ஜீவியத்திலிருந்து    பார்த்தால்    ஈஸ்வரன்    முழுமையாகத் தெரிவான்.   இதற்கு   நிர்குணம்,   சகுணம்   இரண்டும்   உண்டு. தெய்வீக  மனத்திலிருந்து  பார்த்தால்  ஒரு  புறம்  நிர்குணமாகவும், அடுத்த  பக்கம்  சகுணமாகவும்  தோன்றும்.

******



book | by Dr. Radut