ஆத்மாவின் இரு முனைகள்
- மனிதனுடைய ஆயுள் முடிய அவனுடைய சம்மதம் தேவை. மனிதனாகிய ஜீவாத்மா முடிவு செய்யாமல் உயிர் உடலை விட்டுப் பிரியாது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
- மேலும் பரமாத்மாவின் உத்தரவும் தேவை.
- பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சம்மதிக்காமல் உயிர் உடலை விட்டுப் போகாது.
- எந்த சிறு காரியத்திற்கும் பிரபஞ்ச சட்டம் இதுவே.
- ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஆத்மாவின் இருமுனைகள் என்பதால் ஒன்று சம்மதப்பட்டால் இரண்டும் சம்மதப்படுவதாக அர்த்தம்.
- உலகிலும், பிரபஞ்சத்திலும் உயிருடையது ஆத்மா மட்டுமே.
- மற்ற அனைத்தும் ஆத்மாவுடன் தொடர்பு கொள்வதால் உயிர் பெறுகின்றன.
- ஆத்மாவின் ஒரு முனை பிரம்மம். அடுத்த முனை வாழ்வு.
- ஆத்மா அறிவாலும், அறிவின் திறனாலும் செயல்படுகிறது.
- பிரம்மமே முதல், அதுவே முடிவு என்பது ஸ்ரீ அரவிந்தம்.
- மேலிருந்து கீழே வருவது சிருஷ்டி, கீழிருந்து மேலே போவது பரிணாமம்.
- இவற்றிடையே வீச்சுடனிருக்கின்றன. ஆயிரம் இடங்கள் அனந்தமான வலது பக்கம் போவது சமூகத்தில் சிறப்புடன் வாழ்வது.
- மனிதன் தானுள்ள இடத்திலிருந்து மேலே போகலாம், கீழே போகலாம், வலது பக்கமோ, இடது பக்கமோ, எந்த பக்கமோ முடிவில்லாமல் போகலாம்.
- இது பிரம்மத்தின் சுதந்திரம், மனிதன் பிரம்மம் என்பதால் அவன் பெற்ற சுதந்திரம்.
- தவம், துறவறம், மோட்சம் மேலே போவது. உள்ளதுபோய் சீரழிந்து அவல வாழ்வில் ஒதுக்கப்பட்டு ஜடமாவது கீழே போவது, இடது பக்கம் போவது சமூகத்தில் தவறான செல்வத்துடன் வாழ்வது. இதுபோல் மனிதனுக்குரிய பாதைகள் முடிவற்றவை.
- உள்ளே போய் மேலே போவது பரிணாமம். சத்திய ஜீவனாவது.
- ஆண்டவனும்,. அன்னையும் மனிதன் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை
- ஆத்மா அறிவால் உணர்ந்து திறனால் செயல்பட்டால் எதையும் சாதிக்கும்.
- உணர்வது அருள், செயல்படுவது சாதனை.
- அருள் தன்னை அன்னையாக நாடுவதை அறிவது பேரருள்.
- நல்லவனும், கெட்டவனும், தோல்வியடைபவனும், வெற்றியடைந்தவனும், தன் இச்சைப்படியே சாதிக்கிறான்.
- மறைந்த பிரம்மம் மறந்தது ஜடம். நினைவுபடுத்துவது அருள். ஏற்பது அறிவு. நடப்பது யோகம்.
- ஆத்மா அசைந்தால் அனைத்தும் அசையும்.
- ஆத்மா அசைக்காதது இல்லை.
- ஆத்மா அறிவால் எதையும் அசைக்கும்.
மனிதன் விரும்பினால் எதையும் சாதிப்பான் என்பது ஆத்மாவின் தத்துவம்.
******
- Login to post comments