ஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை
- மனித செயல் வீரியம் பெற்று இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகும்.
- இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்த நேரமே அன்னை தம்மை அழைக்க சிறந்த தருணம் என்கிறார்.
- மனிதன் ஏன் இறைவனை வணங்க வேண்டும்? அவனே இறைவனாக முடியும்.
- உலகில் இறைவன் ஆனந்தம் தவிர வேறெதையும் படைக்கவில்லை.
- இறைவன் ஸ்பர்சம் எதையும் சாதிக்கும்.
- மனிதன் அழைத்து, இறைவன் ஏற்பது அதே க்ஷணம் நடைபெறும்.
- புற நிகழ்ச்சிகள் அகவுணர்வைப் பிரதிபலிக்கும்.
- அன்னையை அழைத்தால் கர்மம் கரையும்.
- அன்னை நம்முள் எழுந்தால், விதி விலகும்.
- ஆன்மாவுடன் தொடர்பு கொண்டால், பிறவி புத்திசாலித்தனமும் வளரும்.
- உணர்ச்சி மாறினால் முகக்களை உடனே மாறும். உணர்வு அன்னையை ஏற்றால் முகம் அழகு பெறும்.
- விதி முடிவல்ல, நம்பிக்கையே முடிவு.
- அழைத்தால் அன்னை உடன் வருவார்.
- மனம் அடங்கி அருளை ஏற்றால், அருள் பேரருளாகும்.
- எதிரி இறைவனின் அன்புருவம்.
- வலியே ஆனந்தம்.
- தம் ஆன்மாவைக் காண்பதும், பிறர் அவர் ஆன்மாவைக் காண உதவுவதும் ஆன்மீக சேவை.
- இறைவனை அறிவதே மனித லட்சியம்.
- தெய்வத்தைக் கடந்த மனிதன் - சத்திய ஜீவன் - பிறப்பது உறுதி.
- மனிதப் பிறவியே முடிவானதல்ல.
- மதவழிபாட்டின் காலம் முடிந்து விட்டது. வரும் காலம் ஆன்மீகத்திற்கு உரியது.
- அறியாமை அறிவைவிட உயர்ந்தது.
- இருள் அடர்ந்த ஒளியாகும்.
- திருடனுடைய அடி திருவடியாகும்.
- பொது மகளிரின் ஆன்மா பெரியதாகும்.
- மனிதன் கடவுள்களைவிட உயர்ந்தவன்.
- அன்னையை ஏற்ற வாழ்வில் தோல்வியில்லை, நஷ்டம் இல்லை.
- மனிதன் தன் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும் . .
- நடக்காது, நடக்க முடியாது என்ற காரியமில்லை.
- பலிக்காது என்ற பிரார்த்தனையில்லை.
- இறைவனுக்கு மனிதன் முக்கியம், மனிதனுக்கு இறைவன் முக்கியமில்லை
- அறிவு புலனை விட்டகன்றால், ஆத்ம ஞானமாகிறது.
- அன்னயை அறிவது அன்னை நம்மை அவரிடம் அழைப்பதாகும்.
- அன்னையின் இருப்பிடம் எக்காரணத்தால் வருவதும் அதுபோன்ற அழைப்பாகும்.
- அறிவை நம்பாதே. ஆன்மாவை நம்பு.
- பிறர் மீது குறை கூறாதே.
- எந்த நேரமும் இறைவனை நெருங்க முயல வேண்டும்.
- பொய் பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும்.
- மனிதனுக்கும், மனிதகுலத்திற்கும் சத்தியமே உறுதுணை.
- மனிதனால் முடியாததை மலர்கள் பூர்த்தி செய்யும்.
- நாம் பயன்படுத்தும் பொருள்கள் ஜீவனுள்ளவை.
- நம் கவனத்திற்காக அவை ஏங்குகின்றன.
- பிரார்த்தனை க்ஷணத்தில் பலிக்கும். அறிவு குறுக்கிட்டு தாமதப்படுத்துகிறது.
- அழைத்தால் மழை வரும்.
- கூப்பிட்டால் தெம்பு வரும்.
- ஜடமே சச்சிதானந்தம்.
- உலகை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம், பிரம்மா இல்லை, பிரம்மாவின் பிறப்பிடம்.
- இறைவனைக் கண்டு கொண்ட ரிஷிகள்,. சிருஷ்டியை அறியவில்லை
- கண்டார் விண்டிலர் என்பதை மாற்றி கண்டவர் விண்டுரைக்க முடியும்.
- தம்மை நாடி வரும் அருளை அழிக்க முனைவது மனித இயல்பு.
- இந்திய விவசாயி, மேல் நாட்டு மேதையை விட, இறைவனை அறிவான்.
- காலத்துள் உள்ள இறைவன், காலத்தைக் கடந்த இறைவனைவிடப் பெரியவன்.
- அன்னையை ஏற்றபின் ஆயுள் உள்பட எதுவும் முடிவு அல்ல.
- அன்னை நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்.
- நாம் அன்னையைவிட வாழ்வை அதிகமாக நாடுகிறோம்.
- வெறுப்பு செறிவான அன்பு.
- வாழ்வு அட்சய பாத்திரம், அங்கு வறுமையில்லை, வறுமை மனத்திற்கு உரியது.
- வாழ்வில் விரயம் என்பது இல்லவேயில்லை.
- குழந்தைகளை அடிக்கக் கூடாது.
- குழந்தைகளில் வெளிப்படும் குணம் பெற்றோருடைய குணம்.
- ஆயுள் முழுவதையும் செய்த யோகத்தை ஒரு பொய் அழிக்கும்.
- மோட்சத்தை நாடுவது ஆன்மாவின் சுயநலம்.
- தன்னையறிந்த பகுதி, தன்னையறியாத முழுமையை விடப் பெரியது.
- பேரின்பத்தைவிடப் பெரிய இன்பத்தை மனிதனுக்கு இறைவன் வாழ்வு மூலம் அளிக்கிறான்.
- மனிதன் அதை அறியாமல் வாழ்வை ஏற்று ஏமாறுகிறான்.
- அன்னை வேறு, ஸ்ரீ அரவிந்தர் வேறல்ல.
- ஸ்ரீ அரவிந்தர் கருணையை மனிதன் அன்னை மூலமே பெற முடியும்.
- பரோபகாரம் அகந்தைக்குரியது.
- உடல்பெறும் ஞானம் முழுமையான வலிமையுடையது.
- உடல் விலக்கப்பட வேண்டியதில்லை. ஞான பீடம்.
- உடலை மனம் நிர்ணயித்தால், வாழ்வில் தோல்வி இல்லை.
- பிரம்மத்தை அறிய மனிதன் சத்தியஜீவியத்தை அடைய வேண்டும்.
* நேடிரயான சொற்களல்ல, அன்னார் கருத்தை என் சொற்களால் எழுதியவை
- Login to post comments