Skip to Content

ஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை

 

  1. மனித  செயல்  வீரியம்  பெற்று இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள்  அன்றாட  நிகழ்ச்சிகளாகும்.
  2.  இனி ஆண்டவனாலும்   காப்பாற்ற  முடியாது  என்ற  நிலை வந்த நேரமே அன்னை தம்மை அழைக்க சிறந்த தருணம்  என்கிறார்.
  3. மனிதன் ஏன் இறைவனை வணங்க  வேண்டும்?  அவனே இறைவனாக  முடியும்.
  4. உலகில்  இறைவன்  ஆனந்தம் தவிர  வேறெதையும்  படைக்கவில்லை.
  5. இறைவன்  ஸ்பர்சம்  எதையும் சாதிக்கும்.
  6. மனிதன் அழைத்து, இறைவன் ஏற்பது அதே க்ஷணம் நடைபெறும்.
  7. புற நிகழ்ச்சிகள் அகவுணர்வைப் பிரதிபலிக்கும்.
  8. அன்னையை அழைத்தால் கர்மம் கரையும்.
  9. அன்னை நம்முள் எழுந்தால், விதி  விலகும்.
  10. ஆன்மாவுடன் தொடர்பு கொண்டால்,  பிறவி புத்திசாலித்தனமும்  வளரும்.
  11. உணர்ச்சி மாறினால் முகக்களை   உடனே   மாறும். உணர்வு  அன்னையை  ஏற்றால் முகம்  அழகு  பெறும்.
  12. விதி முடிவல்ல,  நம்பிக்கையே முடிவு.
  13. அழைத்தால்  அன்னை  உடன் வருவார்.
  14. மனம் அடங்கி அருளை ஏற்றால்,  அருள்  பேரருளாகும்.
  15. எதிரி இறைவனின் அன்புருவம்.
  16. வலியே  ஆனந்தம்.
  17. தம்  ஆன்மாவைக்  காண்பதும், பிறர் அவர் ஆன்மாவைக் காண உதவுவதும்   ஆன்மீக சேவை.
  18. இறைவனை  அறிவதே  மனித லட்சியம்.
  19. தெய்வத்தைக் கடந்த மனிதன் -   சத்திய   ஜீவன்   -   பிறப்பது உறுதி.
  20. மனிதப்   பிறவியே   முடிவானதல்ல.
  21. மதவழிபாட்டின் காலம் முடிந்து விட்டது. வரும் காலம் ஆன்மீகத்திற்கு  உரியது.
  22. அறியாமை அறிவைவிட உயர்ந்தது.
  23. இருள்  அடர்ந்த  ஒளியாகும்.
  24. திருடனுடைய   அடி   திருவடியாகும்.
  25. பொது மகளிரின் ஆன்மா பெரியதாகும்.
  26. மனிதன்  கடவுள்களைவிட உயர்ந்தவன்.
  27. அன்னையை ஏற்ற வாழ்வில் தோல்வியில்லை,    நஷ்டம் இல்லை.
  28. மனிதன் தன் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய  முடியும் .  .
  29. நடக்காது,   நடக்க முடியாது என்ற காரியமில்லை.
  30. பலிக்காது என்ற பிரார்த்தனையில்லை.
  31. இறைவனுக்கு மனிதன் முக்கியம்,  மனிதனுக்கு இறைவன் முக்கியமில்லை
  32. அறிவு புலனை விட்டகன்றால், ஆத்ம  ஞானமாகிறது.
  33. அன்னயை அறிவது அன்னை நம்மை அவரிடம் அழைப்பதாகும்.
  34. அன்னையின் இருப்பிடம் எக்காரணத்தால் வருவதும் அதுபோன்ற  அழைப்பாகும்.
  35. அறிவை நம்பாதே. ஆன்மாவை நம்பு.
  36. பிறர் மீது குறை கூறாதே.
  37. எந்த நேரமும் இறைவனை நெருங்க  முயல  வேண்டும்.
  38. பொய்  பாதாளத்திற்கு  அழைத்துச்  செல்லும்.
  39. மனிதனுக்கும்,    மனிதகுலத்திற்கும் சத்தியமே உறுதுணை. 
  40. மனிதனால் முடியாததை மலர்கள் பூர்த்தி செய்யும்.
  41. நாம் பயன்படுத்தும் பொருள்கள் ஜீவனுள்ளவை.
  42. நம் கவனத்திற்காக அவை ஏங்குகின்றன.
  43. பிரார்த்தனை க்ஷணத்தில் பலிக்கும். அறிவு குறுக்கிட்டு தாமதப்படுத்துகிறது.
  44. அழைத்தால்  மழை  வரும்.
  45. கூப்பிட்டால்  தெம்பு  வரும்.
  46. ஜடமே  சச்சிதானந்தம்.
  47. உலகை  சிருஷ்டித்தது  சத்திய ஜீவியம்,    பிரம்மா இல்லை, பிரம்மாவின்  பிறப்பிடம்.
  48. இறைவனைக்  கண்டு  கொண்ட ரிஷிகள்,. சிருஷ்டியை அறியவில்லை
  49. கண்டார்  விண்டிலர்  என்பதை மாற்றி  கண்டவர்  விண்டுரைக்க முடியும்.
  50. தம்மை  நாடி  வரும்  அருளை அழிக்க முனைவது மனித இயல்பு.
  51. இந்திய  விவசாயி,  மேல்  நாட்டு மேதையை  விட,  இறைவனை அறிவான்.
  52. காலத்துள்  உள்ள  இறைவன், காலத்தைக் கடந்த இறைவனைவிடப்  பெரியவன்.
  53. அன்னையை ஏற்றபின் ஆயுள் உள்பட  எதுவும்  முடிவு  அல்ல.
  54. அன்னை    நம்    அழைப்புக்காகக்  காத்திருக்கிறார்.
  55. நாம் அன்னையைவிட வாழ்வை  அதிகமாக நாடுகிறோம்.
  56. வெறுப்பு  செறிவான  அன்பு.
  57. வாழ்வு அட்சய பாத்திரம், அங்கு வறுமையில்லை, வறுமை  மனத்திற்கு  உரியது.
  58. வாழ்வில் விரயம் என்பது இல்லவேயில்லை.
  59. குழந்தைகளை அடிக்கக் கூடாது.
  60. குழந்தைகளில் வெளிப்படும் குணம் பெற்றோருடைய குணம்.
  61. ஆயுள் முழுவதையும் செய்த யோகத்தை ஒரு பொய் அழிக்கும்.
  62. மோட்சத்தை நாடுவது ஆன்மாவின்  சுயநலம்.
  63. தன்னையறிந்த பகுதி, தன்னையறியாத  முழுமையை விடப்  பெரியது.
  64. பேரின்பத்தைவிடப் பெரிய இன்பத்தை  மனிதனுக்கு இறைவன்    வாழ்வு    மூலம் அளிக்கிறான்.
  65. மனிதன்   அதை   அறியாமல் வாழ்வை  ஏற்று  ஏமாறுகிறான்.
  66. அன்னை வேறு,    ஸ்ரீ அரவிந்தர்  வேறல்ல.
  67. ஸ்ரீ அரவிந்தர் கருணையை மனிதன்    அன்னை    மூலமே பெற  முடியும்.
  68. பரோபகாரம் அகந்தைக்குரியது.
  69. உடல்பெறும் ஞானம் முழுமையான  வலிமையுடையது.
  70. உடல்  விலக்கப்பட  வேண்டியதில்லை.  ஞான  பீடம்.
  71. உடலை  மனம்  நிர்ணயித்தால், வாழ்வில்  தோல்வி  இல்லை.
  72. பிரம்மத்தை   அறிய   மனிதன் சத்தியஜீவியத்தை   அடைய வேண்டும்.

 

 * நேடிரயான சொற்களல்ல, அன்னார்  கருத்தை என் சொற்களால் எழுதியவை



book | by Dr. Radut