Skip to Content

09. பணம்

பணம்

வறுமை என்பது பணமில்லை, பணப்பற்றாக்குறை என்பது. ஆன்மீக சட்டப்படி உயர்ந்த எண்ணம், பரநலம், பரந்த மனப்பான்மையுள்ள அன்பர் எவரும் எந்த அளவு பணத்தையும் உற்பத்தி செய்யலாம் என்பது உண்மை. அதைச் சாதிக்கும் முறை, அதன் தத்துவம் ஆகியவற்றிற்குரிய அடிப்படைக் கருத்துக்கள் கீழ்கண்டவை. 

  • சிருஷ்டி சத்தில் ஆரம்பித்து, சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் வழியாக மனத்தில் முடிகிறது. மனமே சிருஷ்டியின் முடிவு.
     
  • வாழ்வும், ஜடமும் மனத்தின் பிற உருவங்களே. மனம் சிருஷ்டித்ததே வாழ்வு.
     
  • பணம் வாழ்வின் பகுதி.
     
  • வாழ்வையே உற்பத்தி செய்த மனத்தால், அதன் பகுதியான பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.
     
  • மனத்திலுள்ள எண்ணம், அதனுள் உள்ள உறுதியுடன் இணைந்து செயல்பட்டால் சக்தி பிறந்து வாழ்க்கையாகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சக்தி உருவம் பெற்றால் பொருள்களாக மாறி ஜட உலகமாகிறது எனவும் கூறுகிறது.
     
  • எண்ணமும், உறுதியும் இணைந்தால் வாழ்வு எழுகிறது எனில் மனம் வாழ்வில் பகுதி என்பதால், உறுதி பணத்தை உற்பத்தி செய்ய முடிவு செய்தால், அதற்கு எண்ணம் இசைந்தால் பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும்.
     
  • உறுதி என்பது திறமை. திறமை என்பது தெளிவு பெற்ற சக்தி. எண்ணம் என்பது குறிக்கோள். பணம் ஈட்டும் திறமை, தெளிவு பெற்று, எண்ணம் அதை இலட்சியமாக ஏற்றால் பணத்தை மனம் உற்பத்தி செய்யும் என்ற கொள்கை எழுகிறது.
     
  • பணத்தை சேகரம் செய்தவரிடம் நாம் இதைக் காண்கிறோம். பணத்தை எந்த வழியாகவும் சேகரம் செய்யலாம். அருள் மூலம் நல்ல முறையில் மட்டும் சேகரம் செய்ய முடியும்.
     
  • அபரிமிதம் எப்படி எழுகிறது?

    • வாழ்வு என்பது பேரரங்கம். எண்ணமும், உறுதியும் வாழ்வே சிருஷ்டித்தவை. அதனால் பகுதியான பணத்தை சிருஷ்டித்தால் பலன் அபரிமிதமாக இருக்கும்.
       
    • எண்ணம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். கெட்ட எண்ணத்தில் சுலபமாக சம்பாதிக்கலாம். நல்ல எண்ணத்தால் பணம் சம்பாதிப்பது சிரமம். பலன் குறைவு. ஆனால் கெட்ட எண்ணம், நல்ல எண்ணமாக மாறியபின் அதன் திறன் அபரிமிதமாகப் பெருகும். திருடன் மனம் மாறி வியாபாரம் செய்தால் சிறப்பாக இருப்பானல்லவா?
       
    • கெட்ட முறையில் சம்பாதிக்கும்பொழுது மனம் உறுத்தும். முறை நல்லதானால் உறுதி தெளிவாகச் செயல்படும்.
       
    • பணம் பகுதி என்பதாலும், எண்ணம் நல்லது என்பதாலும், உறுதி மலர்ந்து செயல்படுவதாலும் பலன் அபரிமிதமாக எழுகிறது.
       
    • அன்னை சக்தி சேர்ந்தால் அபரிமிதம், அளவற்றதாகிறது.

     
  • கட்டுரையின் கரு : பிறர் வாழ்வு மலர்வதில் பெருமிதம் கொள்ளும் அன்பர், பணம் திரட்டும் முறைகளை அறிந்து, நல்ல முறையில் உறுதியுடன் செயல்பட்டால் அருள் அவர் முயற்சிக்கு அபரிமிதமான பலனை உடனே தரும்.
     
  • சக்தி அதிகமானால் அதிகம் சம்பாதிக்கலாம். உடலுழைப்பை மன உழைப்பாக்கினால் பலன் பெருகும், பணம் என்பது ஒரு organisation முறை என்பதால் மனம் முறைபட்டால் சம்பாதிக்கும் திறன் பெருகும். விரைவாக செயல்படுவது பெரிதும் உதவும்.
     
  • பணம் என்பதனுள் பொதிந்துள்ளவை  நம்பிக்கை, சக்தி, முறை (organisation). சர்க்கார் மீது நம்பிக்கையிருப்பதால் பேப்பரான நோட்டை ஏற்கிறோம். மனித உழைப்பு - சக்தி - பொருளை உற்பத்தி செய்வது பணமாகிறது. நாம் முயன்று செயல்பட்டு சாதிப்பவை - திருமணவிழா, வீடு கட்டுவது போன்றவற்றிற்கு முன்போல் நாமே முயல வேண்டாம். முயற்சியுடையவர் பணம் பெற்று நமக்காக அதைச் செய்கிறார்  பணத்தால் இன்று நடக்கின்றன. எனவே இவை மூன்றும் பணம். இவை முக்கிய அம்சங்கள். இவற்றை நம் மனம், மனத்தின் தன்மையால் மட்டும் உயர்த்த முடியும் என்பதால் மனத்தால் பணத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றேன்.
     
  • ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் நிலம் மட்டுமே விளைந்தது. அந்த விளைச்சல் பணமாயிற்று. 300 ஆண்டுக்கு முன்னால் நிலம் மட்டும் விளைச்சல் தரவில்லை. நானும் விளைபொருள்களை product உற்பத்தி செய்கிறேன் என பாக்டரி வந்தது. கடந்த 50 ஆண்டாக நிலமும், பாக்டரியும் செய்வதை service தொழில் செய்கிறது. டெய்லர், தச்சன், வக்கீல், ஆசிரியர் போன்ற தொழில்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்தாலும் பாக்டரி, நிலத்தை நம்பியிருந்தன. இப்பொழுது service தொழிலை நம்பி பாக்டரியிருக்கிறது. நிலமும், பாக்டரியும், தொழிலும் இதுவரை பணத்தை உற்பத்தி செய்தது போல் இனி மனம் பணத்தை உற்பத்தி செய்யும். இது எப்படி முடியும் என்பதை விளக்குவதே இலட்சியம்.
     
  • Process of creation of money பணம் இதுவரை உற்பத்தியான முறையை மனம் அறிந்து கொண்டால், அம்மனத்திற்கு பணத்தை உற்பத்தி செய்யும் திறன் எழுகிறது. எந்த தொழிலும் பணத்தை உற்பத்தி செய்கிறது. பணம் என்பதன் இரகஸ்யத்தை அறிந்தவர்க்கு எந்த தொழிலின் இரகஸ்யமும் விளங்கும். அதனால் எல்லா தொழில்களையும் சிறப்பாக நடத்தும் ஞானம் அவருக்குண்டு. அந்த ஞானம் முழுமை பெற்றவுடன் அது சக்தியாகிறது. பணம் திரட்டுவோர் அச்சக்திக்குட்படுவார்கள். அதன் மூலம் மனம் பணத்தை உற்பத்தி செய்யமுடியும். இந்த ஞானமுடையவர் எந்த துறையில் வேலை செய்தாலும் அத்துறை ஈட்டுவதுபோல் 10 அல்லது 100 மடங்கு ஈட்டுவார் என்பதை மனம் பணத்தை உற்பத்தி செய்யும் என்கிறேன்.
     
  • வேறு வகையாக ஓரளவு இக்கொள்கையை உலகம் இன்று பூர்த்தி செய்கிறது. ரூ.30,000க்கு வாங்கிய கலைக் களஞ்சியம் இன்று இன்டர்நெட்டில் இலவசமாகக் கிடைக்கிறது, எனில் இப்பணம் உபரி. இதுபோல் internet மூலம் மக்கள் கையில் மறைமுகமாக பணம் உபரியாகிறது. உபரியாகிறது எனில் பணம் அதிகமாக உற்பத்தியாகிறது எனப் பொருள்.
     
  • 30 ஆண்டு வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர் 92 வயதிருந்தால் 32 ஆண்டு பென்ஷன் பெறுகிறார். அதாவது 1 ஆண்டு சேவைக்கு 2 ஆண்டு சம்பளம் பெறுகிறார். பணம் உபரியாகிறது, இரட்டிக்கிறது.
     
  • பணம் பற்றாக்குறையாக இருப்பதால் அதற்கு இன்று மரியாதையுண்டு. காற்று, தண்ணீர் போல அளவுகடந்து இனாமாகக் கிடைத்தால் அதற்கு மரியாதை போய்விடும். இன்டர்நெட், வெளிநாட்டு போன் கால் phone callக்கு உள்ளூர் call charge வசூல் செய்கிறது. எந்தப் புத்தகமும் internetஇல் இனாமாகக் கிடைக்கும். இது நீடித்தால் பணம் கொடுத்து வாங்க வேண்டியவை குறையும். தொடர்ந்தால் பணம் தேவையில்லை என்ற நிலையும் ஒரு நாள் வரும்.
     
  • கம்ப்யூட்டர் வந்தபின் பணம் ஒரூரிலிருந்து அடுத்த ஊருக்கு சில நிமிஷத்தில் போகிறது. இதுபோல் 1 நாளில் 2 trillion dollar கம்ப்யூட்டர் மூலம் நாடு விட்டு நாடு போகிறது. லட்ச ரூபாய் முதல் போட்டவன் ரூ.10,000 சம்பாதித்தால் 10% இலாபம். அதே சரக்கு 6 மாதத்தில் விற்றால், 6 மாதத்தில் 10%, 1 வருஷத்தில் 20% இலாபம் வருகிறது. ஒரு மாதத்தில் விற்றால் 120% இலாபம் வரும். ஒரு லட்ச ரூபாய்க்கு 1 வருஷத்தில் 1,20,000 இலாபம் வரும். பணம் வேகமாகப் பிரண்டால் (turnover) இலாபம் அதிகமாக வரும். இது பணத்தை உபரியாக உற்பத்தி செய்வதாகும். ஏற்கனவே இலட்ச ரூபாய் முதல் போட்டவர் இப்பொழுது 12 இலட்சம் முதல் போட்டவர் பெறும் இலாபம் பெறுகிறார். அதாவது 12 மடங்கு இந்த வியாபார முறை பணத்தைப் பெருக்குகிறது. Internet அதுபோன்ற transactionயை க்ஷணத்தில் செய்கிறது. மாதக்கணக்கில், வாரக்கணக்கில் நடந்தவை 1 நிமிஷத்தில் நடந்தால் Internet ஆயிரம் மடங்கு பணத்தை உற்பத்தி செய்வதாக நாம் அறிகிறோம். வேகத்தை அதிகரிப்பதால் பணம் பெருகுகிறது.
     
  • மனத்தால் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளைச் செய்ய முடியும் என்பதுபோல் மனம் வேகத்தை அளவுகடந்து அதிகரிக்கும்.
     
  • வேலை, உழைப்பு, நம்பிக்கை, செலாவணி, வேகம், முறை, எண்ணம், கருத்து, சக்தி ஆகியவை பணத்தை உற்பத்தி செய்தவை. மனம் இத்தனையையும் தானே உற்பத்தி செய்யவல்லது என்பதால் மனத்தால் பணத்தை உற்பத்தி செய்ய முடியும். 

இதை நம் வாழ்தல் சாதிப்பதெப்படி? 

  • மனம் மட்டும் செயல்பட்டு பணம் உற்பத்தியாகும் என்பது தத்துவரீதியாக உண்மை. நடைமுறையில் அதை எப்படிப் புரிந்து கொள்வது?
     
  • உடலால் செய்பவற்றையும், உணர்வால் செய்வனவற்றையும் மனத்தால் செய்தால் அதிகப் பணம் சம்பாதிக்கலாம். எதிரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டால் உடலால் செயல்படுபவன், நேரே எதிரியைப் போய் தாக்கி விடுதலை பெற முயல்வான். உணர்வால் செயல்படுபவன், ஊரைக் கூட்டி நியாயம் கேட்டு நிலத்தைப் பெறுவான். அறிவால் செயல்படுபவன் சிந்திப்பான். எதிரி எதற்குக் கட்டுப்படுவான், எதை நம்புகிறான். ஜாதகத்தை நம்புபவனானால், ஜாதகப்படி அவன் காரியம் தோற்கும் எனக் காட்டலாமா? கர்மத்தை நம்புகிறானா? சட்டத்தை நம்புகிறானா? எதை நம்புகிறான் என யோசனை செய்வான். இவன் நாணயஸ்தன் என்பதால் சர்க்கரை ஆலை 15 ஏக்கர் பண்ணையை இவனை நம்பி கொடுத்திருக்கிறது என்றால், அவனிடம் போய் "உன் 'நாணயத்தை' ஆலையில் போய் சொல்வேன்" என்பான். இவன் நிலம் திரும்ப வரும். அறிவால் செயல்படும்பொழுது பலன் அதிகம். பணம் ஈட்டும் செயல்களை அறிவு நிலைக்குயர்த்தினால் அபரிமிதமாகப் பணம் பெருகும்.
     
  • நாம் செய்யும் தொழிலில் இன்று அதிகபட்ச நுணுக்கங்கள் எவ்வளவு உள்ளதோ அத்தனையும் பின்பற்றினால் அறிவு செயல்படும். அத்துடன் அருள் சேர்ந்தால் தொழில் அபரிமிதமாகப் பெருகும்.

*****



book | by Dr. Radut