Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு,

தங்களின் புத்தகங்கள் வாயிலாக அன்னையின் அருளை தினமும் அனுபவித்து வரும் பக்தை எழுதிக் கொள்வது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு சிறிய அறையில் (stores) அன்னையின் படத்தை வைத்து நானும் என்னுடன் வேலை பார்க்கும் இன்னொரு பக்தையும் வணங்கி வருகிறோம். அதற்குப் பக்கத்து அறையில்தான் நாங்கள் உட்காரும் அறை உள்ளது. அதாவது ஒரு பெரிய அறை இரண்டாகப் பிரித்துத் தடுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில்தான் (stores) எல்லாவிதமான packing சம்பந்தபட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். அங்குதான் gas cylinder வைக்கப்பட்டிருக்கும். அன்று சாயந்தரம் வெளியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. என்னுடன் factoryஇல் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி வந்து Madam, Tea இருக்கிறது, அதைச் சுட வைத்து உங்கள் இருவருக்கும் கொடுக்கட்டுமா? என்று கேட்டார். நாங்களும் சரி என்றோம். உடனே அவர் அந்த இடத்திற்கு (stores) சென்று அடுத்த நிமிடமே நாங்கள் இருக்கும் officeக்கு வந்தார். அப்போது என்னுடன் இருக்கும் இன்னொரு பக்தை சீக்கிரம் பாருங்கள் ஏதோ எரிகிறது என்றார். உடனே நான் விரைந்து சென்று பார்த்தேன், gas tube எரிந்து கொண்டிருந்தது. உடனே நான் அதை அணைத்துவிட்டுப் பார்த்தேன். சிலிண்டரிலிருந்து gas stoveக்கு செல்லும் tube இரண்டாகப் பிளந்து எரிந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு நிமிடம் முன் அன்னைதான் அந்தப் பெண்மணியை எங்கள் அறைக்கு அனுப்பி வைத்து gasஐ வெடிக்கச் செய்யாமல் காப்பாற்றி, நான் வேலை பார்க்கும் அந்தக் கட்டிடத்தையும், அங்கு இருக்கும் எல்லோரையும் காப்பாற்றினர்கள். நான் மெய்சிலிர்த்து அவர்களிடம் அன்னை அந்த அறையில் இருந்து உங்களை அனுப்பி நடக்கவிருந்த விபத்தைத் தடுத்து நம்மைக் காப்பாற்றியுள்ளார் என்று கூறினேன். அதை நினைக்க நினைக்க எனக்கு மெய் சிலிர்க்கிறது. அன்னை இருக்கும் இடத்தில் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்தக் கடிதம் மூலம் தங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு காணிக்கையாக ரூபாய் பத்து (10/-) இத்துடன் அனுப்பி உள்ளேன்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்  

அதிகாரம், கட்டாயம், தண்டனை ஆகியவை பகவான் யோகத்திற்கு விலக்கு. எந்த நிலைக்குரிய கட்டுப்பாடும் சுயக்கட்டுப்பாடாகவே இருக்கும்

தானே கட்டுப்படாதது கட்டுப்பாடில்லை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு நிகழ்ச்சிக்காகப் பிரார்த்தனை முன்போ, பின்போ இருந்தாலும் அது பலிக்கும். சூட்சுமத்தில் காலம் ஜட உலகக் காலத்துடன் பொருந்தாது.

முடிந்ததையும் முந்திக் கொண்டு, சூட்சுமம் சரி செய்யும்.

*****

Comments

04.அன்பர் கடிதம்line 8 -

04.அன்பர் கடிதம்

line 8 - cylinderவைக்கப்பட்டிருக்கும். - cylinder வைக்கப்பட்டிருக்கும்.

do. 14 - பார்த்தேன்,gas - பார்த்தேன், gas

do.  15 - சிலிண்டரிருந்து - சிலிண்டலிரிருந்து

do. 16 - tubeஇரண்டாகப் - tube இரண்டாகப்



book | by Dr. Radut