05. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
கர்மயோகி
128. விரயம் வருமானம் - ஆலை அழுக்கு
- சர்க்கரை ஆலைகளின் கரும்பு சக்கை அழுக்காக வெளிவரும். இது ஆயிரக்கணக்கான டன்களாக வருஷாவருஷம் வரும். கொட்டி வைக்க இடமில்லை. பிரச்சனை.
- இது நிலத்திற்கு சிறந்த உரம் எனக் கண்டுபிடித்த பொழுது, அது பெரும் வருமானமாயிற்று.
- வாழ்வில் விரயமில்லை என்ற தத்துவம் இதன் மூலம் ஓர் அம்சத்தில் வெளிவருகிறது.
- அன்னையே முன்நின்று சொத்து கைமாறிய பொழுது, பணம் போட்ட முதலாளி பேங்கில் பணம் பெறும் உரிமையை எதிரிக்குத் தரவில்லை. சமர்ப்பணத்தால் எதிரியான அன்பர் பெற்ற பொழுது அன்பர் உரிமையால் பெறுவதைப்போல் இருமடங்கு திரும்பிக் கேட்கும் உரிமையின்றிப் பெற்றார்.
- விரயம் வினோதமான பெரும் இலாபம்.
- தீண்டாமை இந்தியாவில் மட்டும் காணப்படுகிறது என்று உலகம் கூறுகிறது.
- நம் நாட்டில் ஜாதிக்குப் புறம்பானவன் என்பதுபோல் எல்லா நாடுகளிலும் சமூக அந்தஸ்திற்குப் புறம்பானவர்கள் பாதி மக்கட்தொகை. ஆனால் தீட்டு என்பதில்லை.
- ஐரோப்பாவில் அதிகமான இந்நிலை (serfdom) அமெரிக்காவில் மிகக் குறைவு.
- ஐரோப்பிய “தீண்டாமை” அமெரிக்க சம உரிமையானது, அமெரிக்கா இன்று பெற்ற செல்வத்திற்கு முதற்காரணம்.
- பகவான் புதுவைக்கு வந்தபொழுது 16% தீண்டாதவர். தற்சமயம் 25%.
- தீண்டாமை உலகில் இல்லை எனினும் அதன் அடிப்படை இல்லாத இடமில்லை.
- 4 வர்ணங்களைக் கண்ட இந்திய சமூகம் ஆன்மிகத்தில் சச்சிதானந்தத்தைக் கண்டது.
- பகவான் கூறும் பெரிய உண்மையான சச்சிதானந்தத்தில் இது பகுதி.
- சமூகத்தை துறப்பது இந்திய ஆன்மிக மரபு.
- வர்ணாசிரமம் ஏற்பட்ட பொழுது இந்தியர் சமூகத்தை முழுமையாக அறிந்ததாக நினைத்தனர்.
- விரயமில்லை என்ற பகவான் தத்துவம் நாம் ‘விரயம்’ எனக் கூறுவதை சமூகத்தின் உயர்ந்த பகுதியாகக் கருதுகிறது.
- சமூகத்தின் முழுமை மனிதன் ஏற்படுத்திய எல்லைக்குள்ளில்லை. வர்ணாசிரம தர்மம் எல்லையை ஏற்படுத்தினால் ‘சமூகம்’ எல்லைக்கு வெளியே இன்று 25% வளர்ந்துள்ளது.
- அமெரிக்கா எல்லைக்கு வெளியே வளர்ந்து உலகை ஆள்கிறது.
- இந்தியாவில் S.C. எனப்படுபவரிலிருந்து மனிதகுல மாணிக்கங்கள் எழுந்து உலகையாளும் என்று தத்துவம் சுட்டிக் காட்டுகிறது.
- வரும் தலைமுறைகள் பரம்பரையை அழித்து புதிய தலைமையை ஏற்படுத்துவதும் அந்தச் சமூகம்.
- விரயத்தைத் தவிர்த்து செயல்பட செயல் சிறப்பாக, செம்மையாக இருக்க வேண்டும்.
- ஷெர்லக்ஹோம்ஸ் கதைகளில் சிக்கல்கள் அவிழ்வது இதுபோன்ற ‘விரயம்’ என்ற அம்சத்தால் என்பதைக் காட்டுவதால் அவை நேரடி ஞானம் எழும் கதைகளாம்.
- இராமாயணத்தில் பொய்மான் தெரியாததும், பாரதத்தில் துரியோதனன் பரமாத்மாவுக்குக் கட்டுப்படாததும் மனிதன் தேடும் “தீர்வு விரயத்திலிருப்பதைக் காட்டுகிறது.”
- உலகப் போருக்குப்பின் ‘விரயமான’ அமெரிக்கா உலகை ஆள்வது அந்த அம்சம்.
- நாம் உலகத்தின் சிறப்பை விரயம் எனக் கூறுகிறோம்.
**********
- Login to post comments