03. சாவித்ரி
சாவித்ரி
Page 176: Leaped out from a chance tension of the soul
ஆத்மாவின் துடிப்பான படபடப்பு துள்ளியெழும் வாய்ப்பு
- பிரம்ம வண்ணம் வாழ்வை அலங்கரிக்கும்
- ஞானத்தின் பெருமையும், ஆத்ம ஞான திருஷ்டியும்
- அன்பின் இதயம் ஆர்வத்தின் வேகத்தால் தீவிரம் பெற்று
- உடலின் உருவமற்ற இரகஸ்யத்தின் உத்தம குரு
- கண்காணாத ஆத்மப் போர்வையுள் அடைக்கலம் புகுந்து
- உணர்வை அதன் எல்லையை மீறும்படி நிர்ப்பந்திக்கும் மனஉறுதி
- புலனுக்குப் புலப்படாத ஒளியும், சந்தோஷமும்
- சொல்லொணா அமைதியுள் அடியெடுத்து வைத்தன
- மூடியிட்ட ஆசையின் இனிமையை அரைகுறையாக ஆட்கொண்டது
- புதிரான ஆனந்த நெஞ்சம் புகலிடம் தேடியது
- திரையிட்ட சத்தியம் சிருஷ்டிக்குப் பகுதியாக உட்பட்டது
- ரூபலோகத்தின் உண்மையுணர்வை கடைக்கண்ணால் கண்டது
- எண்ணம் திருஷ்டியாகி ஒளி பெருகியது
- இதய ஞானம் தழலாய் எழுந்து தாங்கிப் பிடித்தது
- ஆன்மாவின் விழிப்பான ஆகாயத்துள் பிடிபட்டது
- பிரபஞ்ச பிரம்மம் சின்னமாகச் சிறந்தது
- இந்த லோகம் பெருநம்பிக்கையை நம்முள் எழுப்புகிறது
- அதன் சக்திகள் வானிலிருந்து புவியில் இறங்கி வந்தன
- அதன் அடையாளம் நம் வாழ்வின்மீது தம் முத்திரையைப் பதித்தன
- நம் தலைவிதிக்கு அவை ராஜ நடையைத் தருகின்றன
- வாழ்வின் பெரு அலைகளுக்கு அதன் தவறான அசைவுகள் ஆதரவு தருகின்றன
- நாம் தேடுவன அனைத்தும் அங்கு முன்கூட்டி அமைந்துள்ளன
- நாமறியாதவை, நாம் தேடாதவை அனைத்தும்
- மனித இதயம் உரிமையாகப் பெற்றவை
- காலத்தைக் கடந்தவன் காலத்தில் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறான்
- நாள் எனும் புதிருள் நலமாகக் கரைந்துறையும்
- திறந்த அனந்தனின் பிரம்மத்தின் காலம்
- முடிவற்ற வாய்ப்பு மலைமுடியையெட்டும்
- படியில்லாத ஏணியின் கனவு முயன்று மலையேறுகிறது
- ஜீவனின் விழிப்பான சமாதியில் என்றென்றும்
- அவ்வேணியில் ஏறுபவரெல்லாம் தெரியாத இலக்கை நாடுகின்றனர்
- நிரந்தரமான நிலையற்ற சக்தி முயன்று
- திரும்பும் நிலையற்ற யாத்திரை
- அப்பாலை நாடும் இயற்கையின் புனித யாத்திரை
*************
ஸ்ரீ அரவிந்த சுடர்
எவ்வழி எச்சக்திகளால் ஜீவியம் பரமாத்மாவாயிற்று என அறிவது Supreme Discovery மாபெரும் வெற்றி என பகவான் குறிப்பிடுவது.
*********
- Login to post comments