11. பக்குவமான பவித்திரம்
பக்குவமான பவித்திரம்
கர்மயோகி
அன்னையை அறிந்தவர் ஆழ்ந்து மகிழ்ந்தால் அதுவே பக்தியாகும். எளிய மனித வாழ்வில் தேவைகள், குறைகளிருப்பதால் மனம் அவற்றை விட்டு எளிதில் அகலாது. ஆழ்ந்த மன உறுதியும், அபரிமிதமான பாரம்பரியமும், அளவு கடந்த நல்ல மனமும் உடையவர் மனத்திலிருத்த வேண்டிய ஆன்மீக எண்ணங்கள்,
- உள்ளத்து உண்மை உடனே சாதிக்கும், இதுவரை சாதித்தது உள்ளத்து உண்மையைக் காட்டுகிறது.
- மனம் அறிவால் முடிவு செய்தால் அந்த உண்மையை எந்த அளவும் உயர்த்தலாம்.
- நாம் முயன்று உயர்த்தினால், அது தானே உயர ஆரம்பிக்கும்,
- உயர்வது எல்லா நிலைகளிலும், எல்லா வகைகளிலும் வளர்ந்தபடியிருக்கும்.
- சௌக்கியம் சந்தோஷமாகும், அன்பு அனந்தமாகும், இனம் புரியாத இன்ப நினைவால் இறைவன் நம்மை அகத்திலும் புறத்திலும் தீண்டுவான், ஸ்பர்சம் புனர்ஜென்மம், தீண்டுவது திருவடி.
- மனம், குணம் என்ற சிறையின் பிடி தளருவதை உணரும்
- தளரும் பிடி வளரும் சொர்க்கம்
- எதிரொலியாய் வாழ்வு இரவும் பகலும் இன்பமயமாய் எழும்
- அனுபவம் நினைவாய் எழுவது ஆனந்தமாக மாறி மலரும்
- பெற்றோர் செய்த புண்ணியம் பெரும் செயலாய் இன்று காட்டும்,
- நாமே பெற்ற பிள்ளைகள் ஆத்ம வரம் பெற்ற அற்புதமாவார்கள்,
- அன்பரின் பக்குவம் அன்னையின் மகிமையை மகான்களும் பெறச்செய்யும்,
- ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்ற வாக்கு பலிக்கும்,
- திரௌபதியின் துகிலாக பெண்ணொளி வளரும்,
- பஸ்ஸில் இடம் கிடைக்காமல் காரில் பயணம் நிறைவேறும்,
- தேடிப்போனால் கிடைக்காதவர் நாடி வரும் மாற்றம் தெரியும்,
- ஏமாற்றியவர் வலிய வந்து நாம் ஏமாறாதபடி உதவுவார்,
- கடந்தவை வரம், வரவேண்டியதெல்லாம் வாய்ப்பாகும்,
- பழைய பெருமை திருவுருமாறி புதிய வாழ்வின் அந்தஸ்தாகும்,
- உடல் நலம் உள்ள நலம்: வலிமை மிகுந்து ஆயுள் நீடித்து உள்ள வயது பாதியாக செயல்படும்,
- கையிலுள்ள ரூபாயெல்லாம் டாலர் மதிப்பு பெறும்,
- எந்த நேரமும் உள்ளே போனால், உள்ளம் உச்ச கட்டத்தில் இருக்கும்,
- மனம் தியான மையமாகும்,
- தியானம் திகட்டாது, தியானமே திருவுருமாறி சமர்ப்பணமாகும்,
- ரிஷ்ய சிருங்கர் போல போகும் இடமெல்லாம் புதிய ஒளி பரவும்,
- எதிர்ப்பு, குறை, நோய், வம்பு, வழக்கு தம் குணத்தை ஆதரவாக, நிறைவாக, உடல் நலமாக, பாராட்டாக, நியாயமாக மாற்றி அமைத்துக் கொள்ளும்.
***********
- Login to post comments