04. யோக வாழ்க்கை விளக்கம்
யோக வாழ்க்கை விளக்கம்
22/11. அருளில்லாமல் ஆர்வமில்லை.
“அவனருளாலே அவன் தாள் வணங்கி”
- ஆர்வம் எழ சக்தி, தெம்பு வேண்டும்
- தெம்பு உடல் நலத்தாலிருப்பது போல் உள்ள உறுதியாலிருப்பது.
- நம் கையிலில்லாதது அருளுக்குரியது.
- அருள் காரணமின்றி செயல்படும்.
- சூழல் தேவைப்படாமலும் அருளிருக்கும்.
- நமக்கு அருள் தேவைப்படுவதை மனிதன் அறிவான்.
- அருளுக்கு நாம் தேவைப்படலாம் எனத் தோன்றுவதில்லை.
- கன்று பால் குடிக்க ஓடி வருகிறது.
- மடி கனப்பதால் பசு கதறுகிறது.
- கன்று தாயைத் தேடுவது போல் தாயும் கன்றைத் தேடுவது இயல்பு.
- உலக சட்டத்தை இயக்க அருள் செயல்படுவதுண்டு.
- தங்கையைக் கற்பழித்தவனைக் கொன்றவன், அவனுக்குப் பிறந்த குழந்தைக்குப் பெரும் சொத்து சம்பாதித்துக் கொடுத்தது கர்மவினை. எனினும் அதை நிறைவேற்றியது அருள்.
- லிஸ்ஸிக்கு டார்சியை எந்தக் கர்மமும் பெற்றுத் தரவில்லை. அது முழு அருளின் செயல்.
- அருள் சூழலிலிருந்தால் ஆத்மாவில் ஆர்வம் எழுகிறது. அது இல்லாமல் ஆர்வம் எழுவதில்லை.
- ஆன்மீகச் சட்டப்படி சீதையை இராவணன் தூக்கிப் போனதும், சிகண்டி பீஷ்மரைக் கொன்றதும், திரௌபதியின் மானம் பங்கப்பட்டதும், நாட்டிலேயே அளவுகடந்த இலஞ்சம் ஹைகோர்ட் நீதிபதி வாங்கியதும், அவரை எதிர்த்து பார்லிமெண்டில் ஒரு வோட்டும் போடாததும் அருளின் செயல் எனில் அதை அறிவது
- அனைத்தையும் அறிவதாகும். அதாவது பிரம்மத்தை அறிவதாகும்.
- அறிவு என்பது அருளை அறிவதாகும்.
- ஆர்வமே அருளுக்கு அடிப்படையெனில் ஆர்வம் எழுவதை அறிவது அருளை அறிவதாகும்.
- அனைத்தும் கைவிட்டபின் கைவிடாத அருளின் செயலை அறியும் அறிவு உண்டா?
- அது அறிவா ஞானமா?
- கைவிட முடியாதது அருள் எனில் ஏன் கைவிட முடியாது என்பது கேள்வி.
- கேள்வி எழுந்தால் அருள் செயல்படாது. கேள்வி எழுந்ததும் செயல்பட மறுக்காத அருள் பேரருளாகும்.
- அருளே முடிவானதெனில் பேரருள் எப்படி வேறுபடும்?
- பகவான் இறைவனைக் கேட்டுப் பெற்ற வரம் அருளானால், அது தன்னை நிறைவேற்ற ஏன் நிபந்தனை விதிக்க வேண்டும்?
- அருளை அறிவது ஆண்டவனை அறிவது.
- அருள் ஆனந்த பிரம்மம்.
************
ஸ்ரீ அரவிந்த சுடர் ஆயிரம் ஆண்டுகட்கும் இலட்சக்கணக்கான உள்ளங்களை ஊடுருவும் கல்வியைக் கதை அளிக்கவல்லது. |
- Login to post comments