06. அஜெண்டா
அஜெண்டா
P.315 Sri Aurobindo sitting on the compound and all were inside Him (Vol. III)
August 15, 1962இல் தியானத்தின்பொழுது பகவான் ஆசிரம காம்பவுண்டு மீது அமர்ந்து அனைவரையும் தன்னுட் கொண்டிருந்தார்
- பெரியவர்களை தரிசிக்கும் பொழுது அவர்களுடன் இரண்டறக் கலப்பதாக உணர்வதுண்டு.
- ஆசிரமத்தில் இறந்த சாதகர்கள் ஆத்மா அனைத்தும் அன்னை தம் நெஞ்சில் குடி கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.
- தாயார் அன்பால் குழந்தைகள் தன் பகுதியாக உள்ளதை அறிவார். அவர் தியானத்தில் குழந்தைகள் அவருள் தெரியும்.
- தியான மையம் நடத்துபவர்க்கு தியானத்தில் அன்பர்கள் தெரிவதுண்டு. மையத்துள் தெரிவதுண்டு, தன்னுள் தெரியும்.
- பிரபஞ்சத்தில் ஏகனும் அநேகனும் உள்ளனர். அநேகன் என்பது இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்கள்.
- ஜீவாத்மா சித்திப்பது மோட்சம். அதற்கு ஏகன் என்ற பரமாத்மா சித்திப்பது உயர்ந்த மோட்ச நிலை. அதைக் கடந்த 3 நிலையும் உண்டு.
- பூரணயோகம் மோட்சத்தை நாடாது, ஜீவாத்மா சித்தித்தவுடன் அடுத்த ஜீவாத்மாக்களுடன் இணைய முயலும். அடுத்த கட்டத்தில் பரமாத்மா - ஏகன் - வுடன் இணையும். மோட்சப் பாதையைத் தவிர்க்கும்.
- ஜீவாத்மாக்கள் சித்திப்பது பிரபஞ்சம் சித்திப்பது. இதற்கு அகந்தை கரைய வேண்டும். பரமாத்மா சித்திப்பது கடந்தது சித்திப்பது. அதுவும் சித்தித்தபின் மனிதனுள் வெளிப்படுவது ஆத்மா ஈஸ்வரனாகி, அற்புதம் வெளிப்படுவது.
- பகவானும் அன்னையும் சாதகர்கள் அனைவரையும் தங்கள் ஆத்மாவினுள் ஏற்று அனுக்கிரகம் செய்கிறார்கள்.
- குடும்பத் தலைவர் குடும்பத்தினர் அனைவர் தேவைகளை ஏற்பது போல் சாதகர்கள் அனைவரின் ஆன்மீக தேவைகளை பகவான் தருகிறார்.
- குடும்பம், தொழில் (கம்பனி), கட்சி, பெரும் பண்ணை நடத்துகிறோம். நாம் குடும்பத்துடன் எந்த அளவுக்கு ஆத்மாவில் இணைந்துள்ளோம் என அறிய தியானத்தின் போது அதைக் காண முயலலாம். கொஞ்ச நாள் கழித்து அது பலிக்கும் வாய்ப்புண்டு.
- அந்த நேரம் நாம் பிரியத்தால் ஏற்றுக் கொண்ட அனைவரும் நம்முள் தெரிவர்.
- கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அன்னியோன்யமாக இருப்பதுண்டு. பிறர் தியானத்தில் ஒருவர் வந்தால் உடன் அடுத்தவரும் வருவார். அவர்கள் ஆத்மாவில் இணைந்தவர்கள்.
- அன்னியோன்யமான தம்பதிகளும், வெறுப்பால் பிரிந்த தம்பதிகளும் தியானத்தில் அடுத்தவரைத் தவறாது காண்பதுண்டு.
வெறுப்பு தீவிர அன்பு. வெளிப்பாடு எதிராக அமைந்துள்ளது. - பார்த்து பல வருஷமானவர் தியானத்தில் வந்தால், சில நாட்களில் அவரைச் சந்திக்க நேரும். உருவம் அதிக தெளிவாக இருந்தால், கதவைத் திறந்து கொண்டு கண்ணில் படுவார்.
- மனக்கண், அகக்கண், ஞானக்கண் என்பவை செயல்படும் வகை வேறுபடும்.
- மனக்கண் நினைவிலிருப்பதைக் காட்டும்.
- அகக்கண் ஆத்மாவின் கண். ஆத்மாவின் அம்சம் அதில் தெரியும்.
- ஞானக் கண் எதிர்காலத்தைக் காட்டும்.
- குடி தண்ணீரில்லாத ஊரில் கூலிக்காரன் கனவில் ஊரில் மூன்று போகம் பயிராவது வரும். பத்து ஆண்டுகட்குப் பின் ஊரில் அனைவரும் கிணறு தோண்டி மூன்று போகம் பயிர் செய்தனர்.
- அத்தை மகளை மணக்க விரும்புபவன் கனவில் அவள் தங்கை வரும். திருமணமாகும் பொழுது கனவில் கண்டவளே மனைவியாக வருவாள். இது சூட்சுமப் பார்வை.
- ஒருவர் கல்லூரி விருந்திற்கு 2 அமெரிக்கர்கள் வந்தனர். 14 வருஷம் கழித்து அந்த விருந்தை ஏற்பாடு செய்தவரை நாடி இரு அமெரிக்கர் வந்து அவருடனே தங்கினர். நிகழ்ச்சி ஞானக் கண்ணாக செயல்பட்டுள்ளது.
********
ஸ்ரீ அரவிந்த சுடர் மௌனம் சாதிக்கும். |
********
ஸ்ரீ அரவிந்த சுடர் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் போதாது. அகக்கண் ஒன்றே போதும். அன்னை தரிசனம் அகம் பெறும் அதிர்ஷ்டம். |
*******
- Login to post comments