07. சாவித்ரி
சாவித்ரி
P.129 And still it keeps the habit of its birth
பிறந்த பழக்கத்தை மறவாத மனநிலை
- முரண்பாட்டை முழுமனதுடன் ஏற்பது நம் வழி.
- அழியும் இவ்வுலகின் முரடான மூலம்
- வாழ்வோ, மனமோ, நெஞ்சோ நிலையில்லை.
- அறிவுக்கெட்டாத சூன்யம் அமைத்து அருளிய உலகம்
- ஜடமான உலகம் தவிர நிலையானதொன்றில்லை,
- வானமும், மலையும், கடலும் விரும்பி ஏற்ற ஐக்கியம்
- இளம் தெய்வங்கள் ஆத்ம விடுதலையை ஆர்வமான நாடின
- உயிரற்ற பொருட்களில் உறக்கமாக உள்ளுறைந்தது.
- அனைத்தையும் இழந்த பேரலங்காரம், சிறப்பையிழந்த அழகு,
- செவிட்டுக் காதின் அமைதி, கேளாத சப்தம் அழிக்காத அமைதி,
- சொல்லப்படாத பாரம் சொற்கடந்த துன்பம்
- தேவையற்ற லோகத்தின் தெய்வீக அருள்;
- உணரவோ, உணர்ந்து ஏற்கவோ எவரும் அங்கிலர்.
- கனத்த பாரம் கண்டுகொள்ளாத உணர்வின் துடிப்பு
- சிருஷ்டியின் சிறப்பான வேகம் கட்டுப்படாத கலன்:
- ஜடத்தின் ஜீவனற்ற சுமுகத்தில் தன்னை இழக்க முடியாத நிலை,
- கல்லாய் சமைந்த கடவுளிழந்த ஆத்ம நிலை.
- உலகை நீத்த சமாதி தேடியலையும் பார்வை,
- விழிப்பான இதயத்தின் வேகமான சலனம்,
- எண்ணமும், சொல்லும், எழுச்சியின் அன்பும் மகிழ்விழந்து வாடி உதிரும்,
- உணர்வற்ற ஊமை உருளும் இரவும், பகலும்
- ஏக்கம் எதிர்பார்ப்பாய் எழுவதற்குக் காத்திருக்கும்.
- இருளாய் அமைந்த ஜடம் ஏற்றமாக வீற்றிருப்பதைத் தொட்டு அசைத்தது,
- ஞானத்தின் மௌனம் நடுங்கிக் கூறும் நாமம்,
- உணர்வற்ற அச்சை ஊடுருவ வாழ்வு பெறும் அழைப்பு
- தெய்வம் முரடனாகக் கண் விழித்தது.
- உருளும் ஊமை உலகம் எழுப்பும் குரல்,
- கேட்டறியாத சூன்யத்தில் கேட்கும் முனகல்.
- இறந்ததின் ஆழத்தில் எழுந்த ஏதோ ஒன்று:
- விழித்தறியாத வாழ்வு, மகிழ முடியாத மனநிலை,
- அறிய முடியாத ஆதியினின்று உறங்கும் தோற்றம் பெற்றது.
- உள்ளுறை சத்தியத்தை உணர்ந்த உண்மை,
- மறந்த மகிமையையும், இழந்த உரிமையையும் நினைவுகூர்ந்து,
- அறியவும், ஆர்வமெழவும், அனுபவிக்கவும், வாழவும் விழையும்.
********
ஸ்ரீ அரவிந்த சுடர் நாம் போடும் கணக்குத் தப்பாகப் போகலாம்; அன்னை தவறுவதில்லை. |
*******
- Login to post comments