05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- மருந்தும் விருந்தும் 3 நாள்.
எந்த முறையும் ஒரு தரம் பலிக்கும்.
- அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
அன்பின் அமிர்தத்திற்கு அளவில்லை.
- சீசீ இந்தப் பழம் புளிக்கும்.
எந்தப் பழமும் எப்பொழுதும் புளிக்காது.
- ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
மனம் அடுத்தவர் அதிர்ஷ்டத்தை நாடினால் அருள் நம்மை நாடும்.
- அரசனை நம்பி புருஷனை விட்டாற்போல.
அருளை விட்டகன்றால் பேரருள் வரும்.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் மனத்திற்குப் பார்வையில்லை. மீண்டும் மீண்டும் கேட்டதையே கேட்கும். அன்னை பார்வையைத் தருகிறார். அக்கண்ணோட்டம் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும். |
******
- Login to post comments