02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
N. அசோகன்
41. | பரப்பிரம்மம் : | சச்சிதானந்த நிலையையும் கடந்து எந்தக் குண விசேஷத்தையோ, வர்ணனையோ ஏற்காத நிலையில் இருக்கின்ற ஆதியைப் பரப்பிரம்மம் என்கிறோம். |
42. | பேரின்பம் : | அசையாத சச்சிதானந்தத்தில் காணப்படும் இன்பம், அசைகின்ற இயக்கத்தில் வெளிப்படும் பொழுது பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது. |
43. | இறை வெளிப்பாடு : | பரப்பிரம்மத்தில் மறைந்திருக்கும் படைப்பாற்றல்முடிவில்லாமல் இயக்கத்தில் வெளிப்படும் பொழுது அதை நாம் இறை வெளிப்பாடு என்கிறோம். |
44. | வரம்பற்ற நிலை : | முதலும், முடிவும் இல்லாத ஒரு நிலையைவரம்பற்ற நிலை என்கிறோம். இந்த வரம்பற்ற நிலைதான் பிரம்மத்தினுடைய சுதந்தரத்திற்கும், ஆனந்தத்திற்கும் காரணமாக அமைகிறது. |
45. | சமநிலை : | எதனாலும் பாதிக்கப்படாத ஒரு நிலையை சமநிலை என்கிறோம். |
46. | மானிட அறிவு : | சத்தியஜீவியத்தினுடைய இரு பகுதிகளுக்கிடையே உள்ள இடைவெளியில் பிரிவினையை உண்டு பண்ணக்கூடிய ஜீவியம் பிறக்கும் பொழுது அதை நாம் மானிட அறிவு என்கிறோம். |
47. | உள் அசரீரி : | இறைவனின் எண்ணம் நமக்கு ஆன்மாவின் குரலாகக் கேட்கும் பொழுது அதை நாம் உள் அசரீரி என்கிறோம். |
48. | சூட்சும ஜட நிலை : | சூட்சும உலகத்தில் நம்முடைய உடம்பிற்கே ஒருசூட்சும பாகம் உண்டு. பகவான் அந்தச் சூட்சும பாகத்தைத்தான் உண்மையான ஜட நிலை என்கிறார். |
49. | அவதாரம் : | பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக இறைவனே மானிட உருவெடுத்து பூமியில் பிறப்பதை நாம் அவதாரம் என்கிறோம். |
50. | பிறப்பு : | புதிய அனுபவங்கள் பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆன்மா புதிய உடம்பை ஏற்கும் பொழுது அதை நாம் பிறப்பு என்கிறோம். |
தொடரும்..... |
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் அழியா இலக்கியம் அமர காவியம். இலக்கியம் அழிக்க முனைந்தால் சமூகம் அழியும். அது அழிக்கும் இலக்கியமாகும். சமூகத்தை அழியா இலக்கியமாக்குவது அழிக்கும் இலக்கியம். மனித வாழ்வே அழியா இலக்கியம். அன்னை வாழ்வு அமரர் இலக்கியம். |
*******
- Login to post comments