Skip to Content

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - நாம் செய்யாமல் எப்படிப் பிறரைச் செய்யச் சொல்ல முடியும்?

அண்ணன் - அது ஓர் அளவு சரிதான். செய்யவில்லை என எப்படிச் சொல்ல முடியும். நம் குடும்பத்தின் செல்வ நிலை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்பதை மறுக்க முடியுமா?

தம்பி - இது பிறர் கண்ணில் படாது.

அண்ணன் - கண்ணில் படவேண்டுமானால் அதன் நிலை வேறு. யார் கண்ணில் படுகிறதோ இல்லையோ, அது பட வேண்டிய கண்ணில் பட்டுவிட்டது. நம் குரல் வாழ்வின் காதில் பட்டுவிட்டது. அது செயல்படுத்திவிட்டது.

தம்பி - உலகில் பணம் பெருகியுள்ளது. நம் நாட்டிலும் அதன் சாயல் தெரிகிறது.

அண்ணன் - பணப் பெருக்கத்தில் ஒரு விசேஷம் உண்டு. இனி பணம் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் அளவுக்குப் பணம் பெருகியுள்ளது self-multiplying.

தம்பி - சென்ற ஆண்டு புது மத்திய சர்க்கார் ஏற்படும்பொழுது இருந்த தொழிலதிபர் என்னிடம் கூறினார், 'இனி எந்த சர்க்கார் வந்தாலும், வாராவிட்டாலும் தொழில் வளர்வதைத் தடுக்க முடியாது'.

அண்ணன் - தொழில் தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளும் (can self-multiply) என்ற நிலை வந்துவிட்டது என்று அவர் கருதினார். பணம் என்றால் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்பது முதல் நிலை. பெரும் பணம் சேர்ந்தபின் தானே பணம் தன்னைப் பெருக்கிக் கொள்ள வல்லது எனத் தெரியும். பெரும் பணம் பெறும் வட்டி முதலை வளர்க்கும். அத்துடன் ஒரு புதிய அம்சமும் இப்பொழுதுள்ளது. விதையை நட்டு செடியாக வளர்த்துப் பாதுகாக்கிறோம். 2, 3 வருஷமானால் இனி அது தானே வளரும் என்கிறோம். அதுபோல் இதுவரை உலகில் பணம் என்றால் உழைப்பால் உற்பத்தி வருகிறது.பணம் என்பது நாட்டின் உற்பத்தித் திறன் என்றிருந்தது.

தம்பி - 200 மில்லியன் டன் தான்யம் உற்பத்தியாகிறது. தொழிற்சாலைகள் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அதுவே பணம் என்று பொருளாதாரம் கூறுகிறது.

அண்ணன் - நீ சொல்வது பொருள்கள் goods. தச்சன், கருமான், ஆசிரியர், வக்கீல், டாக்டர், கடைப்பையன் போன்ற ஏராளமான பேர் பொருள்களை goods உற்பத்தி செய்யவில்லை. அவர்கள் உழைப்பு சேவையாகிறது services. பொருளாதாரம் goods & services பொருள்களையும், வேலையையும் பணம் என்கிறது. இன்று புதிய நிலை ஒன்று உற்பத்தியாகியுள்ளது. அது value பண்பு என்றுதான் கூற முடியும். அது சரியான சொல்லில்லை.

தம்பி - அது தெரியும். இப்பொழுது informationக்கு value வந்துள்ளது. நெடுநாளாக உள்ளது தானே இந்த value. Academic value, administrative value, work value, public value, social value, individual value, படிப்பு, நிர்வாகம், வேலை, பொது வாழ்வு, சமூகம், தனி மனிதன் ஆகியோர் பண்புதானே. இதற்கும் பண மதிப்பு உண்டா?

அண்ணன் - உண்டு. உண்டு என்பதுடன் ஒரு புதிய அம்சம் எழுந்துள்ளது. பணத்திற்குத் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் புது அம்சம், value பண்பை பிரதிபலிக்கும் அம்சம் இரண்டும் இன்று சமூகத்தில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளன.

தம்பி - பொருள்கள் (goods), வேலை (services) பணத்தை உற்பத்தி செய்வதுபோல் value பண்பும் பணத்தை உற்பத்தி செய்யும் என்று எனக்கு ஓரளவு புரிகிறது. பிறருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லத் தெரியாது.

அண்ணன் - எந்தத் தொழிலானாலும் நாணயம் (value) அதிகமாக இருந்தால் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். இந்த அதிக சம்பாத்தியம் நாணயம், பண்பு (value) ஆகியவற்றால் வருவது.

தம்பி - நாணயம் என்பது நாம் கூறும் valueபண்பில் ஓர் அம்சம்தானே? திறமை, உண்மை (truthfulness), தொழில் நிர்ணயம் (professional integrity) என்பன போன்ற பண்புகள் ஏராளமாக உண்டல்லவா? ஒரு படிப்பு இருந்தால் சம்பாதிக்கிறோம். நாணயம் போன்றவை உடனிருந்தால் அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

அண்ணன் - முடிவில் இதை விளக்கலாம். இப்பொழுது சொல்வது சிரமம். பணம் தன்னைத் தானே இனி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை விளக்கமாகக் கூறியபின் (value) பண்பே பணம் என்பது சற்றுப் புரியும். பண்பு மட்டும் பணமில்லை. அஸ்திவாரமிருந்தால் அதன் மீதுள்ள பண்பு பணம் என்பதைக் கூடியவரை கூற முயல்கிறேன்.

தம்பி - மரம் தானே வளரும் என்பதுபோல் கல்வி, போக்குவரத்து, மார்க்கட், மதம், மொழி ஆகியவைகளும் ஒரு கட்டம் தாண்டியபின் தானே வளரும் என்பதுதானே உண்மை.

அண்ணன் - அதுதான் உண்மை. அதை விவரமாகப் புரிந்து கொண்டால், நாம் பணத்தை நாமே பெருக்கலாம். அதைப் பிறர் ஏற்கும் வகையாகக் கூறுவது கஷ்டம்.

தம்பி - Infinity ஒன்று நூறாகப் பெருகுவது தாவர வாழ்விலும் காண்கிறோம். ஒரு விதை மரமாகி 100 பழம் தருகிறது. தொடர்ந்தும் தருகிறது.

அண்ணன் - நான் சொல்வதில் இதுவும் ஓர் அம்சம். பேச்சு என்பது இப்பொழுது நாம் அனைவரும் அறிந்தது. ஆயிரக்கணக்கான வருஷங்கட்குமுன் பேசுவது என்பது இன்று பணம் உள்ளதைப் போலிருந்தது. ஓர் ஊரில் 10 அல்லது 50 பேர் இருந்தார்கள். மற்றவர்கள் ஓரளவு பேசுவார்கள். போ, வா, சாப்பிடு, உட்காரு போன்ற 100 அல்லது 200 சொற்களுக்கு மேல் பேச முடியாதவர்கள் பெரும்பாலோர். இன்று பணம்போல அன்று பேச்சிருந்தது.

தம்பி - இன்றும் 100 வார்த்தைக்கு மேல் பேச முடியாதவர்கள் எங்கும் 50 அல்லது 200 பேருண்டு. அவர்கள் பொதுவாகத் தலையை மட்டும் ஆட்டுவார்கள்.

அண்ணன் - யாராவது அன்று, "இந்த 10 அல்லது 50 பேர்போல அனைவரும் ஒரு நாள் சரளமாகப் பேசுவார்கள்'' என்று கூறியிருந்தால் எவரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

தம்பி - கார், போன், T.V.,Ph.D, நோபல் பரிசு, போன்றவை சமூகத்தில் சிறுக ஆரம்பித்துப் பெருகியவைதானே.

அண்ணன் - பல பழக்கங்கள் கொஞ்ச நாளிருந்து அழிந்து விடுகின்றன. மற்றவை நாளாவட்டத்தில் வளர்கின்றன. சில வளர்ந்து பிறகு அழிகின்றன.

தம்பி - தெருக் கூத்து, வில்லுப்பாட்டு, போன்றவை நெடுநாள் இருந்து அழிந்தன. பெருங்கவிகள் இப்பொழுது உலகில் எங்கும் உற்பத்தியாவதில்லை. Tram டிராம் கொஞ்ச நாளிருந்து போய்விட்டது.

அண்ணன் - இந்த உதாரணங்கள் சில சரி வரும். எல்லாம் சரி வாரா. இனி அமெரிக்காவில் ஏழைமை வாராது. கல்வி எந்த நாட்டிலும் இனி வளருமே தவிர குறையாது. பஞ்சம் இந்தியாவில் 1943க்குப் பிறகு வரவில்லை. இனி உலகிலேயே பஞ்சம் வாராது என்கின்றனர். யுத்தமும் இனி வாராது என்கின்றனர்.

தம்பி - பணம்?

அண்ணன் - பணம் சில ஆயிரம் வருஷங்கட்கு முன் உலகில் வந்தது. முதலில் பல ரூபங்களாக (சங்கு, தோல்) வந்தது. பிறகு பவுன், வெள்ளி, நாணயமாயிற்று. இப்பொழுது நோட்டாக வழங்குகிறது. அதுவும் கிரெடிட் கார்ட் என மாறுகிறது. ரூபம் எதுவானாலும் உலகில் பணம் நிலைத்துவிட்டது என்று கூறலாம்.

தம்பி - அது சரி.

அண்ணன் - உழைத்து, வேலை செய்து பணத்தை இதுவரை ஈட்ட வேண்டும். இனி பணம் உலகில் தானே தன்னைப் பெருக்கிக்கொள்ளும்.

தம்பி - இது கடினமான கருத்து, எளிதில் ஏற்க முடியாது.

அண்ணன் - ஆதிநாட்களில் பொருளை (goods) உற்பத்தி செய்தோம். பணம் அதன்மூலம் வந்தது. பிறகு service வேலை செய்து பணம் ஈட்டினோம். சமீபகாலமாக நாணயம், பண்பு (value) பணம் ஈட்டுகிறது. நாணயமும், திறமையும் அதுபோன்ற (values) பண்புகள் இனி பணம் ஈட்டும்.

தம்பி - சிக்கலான கருத்து.

அண்ணன் - தத்துவமாகச் சொன்னால் சுலபம். நடைமுறைப்படி சொன்னால் சிக்கல். தத்துவத்தை நடைமுறை அனுபவம் அதிகமாக உள்ளவர்களிடம் கூறினால் எளிதாகப் புரியும். VISA card உற்பத்தி செய்த Dee Hock என்பவரே இக்கருத்தைத் தெரிவிக்கிறார்.

தம்பி - இப்படிச் சொல்லலாமா?

அன்று பணம் வேண்டும் என்றால் உழைக்க வேண்டும்

- உழைப்பில்லாவிட்டால் பணமில்லை.

பிறகு சேவை - வேலை, service - செய்தாலும் பணம் சம்பாதிக்கலாம் என்றாயிற்று.

உழைப்பில் சேவை கலந்து வந்தது. அத்துடன் நாணயமுமிருந்தது.

உழைப்பும், சேவையும் சம்பாதித்ததுபோல், பிறகு நாணயமும், திறமையும் சம்பாதிக்க ஆரம்பித்தன.

அண்ணன் - நாணயம், வெறும் நாணயமாக இருந்தால் மட்டும் சம்பாதிக்க முடியாது. ஓரளவு உழைப்பு, சேவையுடன் கலந்து வரவேண்டும்.

தம்பி - இன்று நாணயம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகியுள்ளது.

அண்ணன் - அப்படிச் சொன்னால் சரிவரும்.

தம்பி - அதனால்தான் துறவிகளுக்கு 'இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம்' வருகிறதா?

அண்ணன் - ரொம்ப சரி. துறவியின் ஆன்மீகப் பண்பிற்கு அன்னம் தேடிவரும். அப்படி வரும் எனில் அன்னம் மட்டும்தான் வரும்!

தொடரும்.....


 

****


 


 



book | by Dr. Radut