Skip to Content

13.கவசம்

  கவசம்

       சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு அன்னையின் செயல் விவரமாகத் தெரியும். மற்றவர்க்கு முடிவு தெரியும், 20 கார்ட் அன்னையிடம் வரும் பொழுது மேலேயுள்ள கார்டுகளை விலக்கி நடுவேயுள்ள கார்டை அன்னை எடுத்து 25ந்தேதி - மாலை மணி 3 என எழுதினார். பிறந்தநாள் தரிசனத்திற்கான தரிசனம். சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு அக்கார்ட் மட்டும் பளிச்செனத் தெரியும். கார்டுக்குரியவர் 3 நாள் இடைவிடாமல் அன்னையை அழைப்பதால் கார்ட் பிரகாசமாக இருக்கிறது. அன்னை அதைத் தேடி எடுக்கிறார்.

       பஸ்ஸில் கூட்டமானபொழுது ஒரு சீட் காலியாக இருக்கிறது, எவரும் அங்கு போய் உட்காருவதில்லை. சூட்சுமப் பார்வையுள்ளவர் பார்வைக்கு அந்த சீட்டில் வெளிச்சம் தெரிகிறது. சற்று நேரம் கழித்து ஒரு பக்தர் வந்து அதில் உட்காருகிறார். பக்தர் அன்னையை பஸ்ஸிற்கு அனுப்பியதால் சீட் பளிச்சென இருப்பது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. சீட் அவருக்காகக் காத்திருக்கிறது.

  • ரோட்டில் போகும்பொழுது முன்னே அனுப்பிய அன்னை சென்றபொழுது ஒளிமயமாக இருக்கிறது.

  •  ஜீப் பள்ளத்தின் மீது வந்தபொழுது விழாமல் தாண்டியதை ஆச்சரியமாகப் பார்த்து அனைவரும் கூக்குரலிடும்பொழுது ஒரு மூதாட்டி தாய் தன் முந்தானையைப் போட்டு பள்ளத்தை மூடினார் எனக் கண்டார்.

  •  உரம் வைக்க விட்டுப்போன மரம் முதலாளியைப் பேர் சொல்லி அழைக்கின்றது.

  •  ஊரில் குடியை நிறுத்த முடிவு செய்த சமயம் அந்த ஊர் பக்தருக்கு சமாதியில் சாராயம் வெளியே போகிற வாசனை வருகிறது.

  •  படத்தில் அன்னையின் உருவம் உயிருடனிருக்கிறது.

      கணவன் Life Divine பிரசங்கம் செய்கிறார். அவர் சொற்பொழிவை மனைவி எழுதினாள். நிறுத்தி, நிதானமாக அழகாக 14 பக்கம் எழுதினாள். சொற்பொழிவு முடிந்தது. சிறப்பாக இருந்தது. அடுப்பில் எண்ணெய் காய்கிறது. அவசரத்தில் எண்ணெய் சிதறி கைமேல் பெரிய அளவில் பட்டுவிட்டது. கொதிக்கும் எண்ணெய் கையைச் சுடவில்லை. எதற்கும் டாக்டரிடம் காட்டுவோம் எனக் காட்டினார். காயமில்லை, உள் காயமுமில்லை என்றார் டாக்டர். சூட்சுமப் பார்வையிருந்தால் Life Divine கைமீது கவசமாக படர்ந்திருந்தது தெரிந்திருக்கும்.

       Life Divine எழுதிய கைக்கு Life Divine கவசமாகும்.

****

 



book | by Dr. Radut