Skip to Content

"அன்பர் உரை'' நஷ்டமும், தோல்வியும் நம்மவர்க்கில்லை

(சென்னை -மாம்பலம் தியான மையத்தில் 13.7.98 அன்று திருமதி.விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

பணத்தை பாங்கில் போட்டால் பத்திரமாக இருக்கும்.பாங்கே திவாலானாலும் சர்க்கார் பணம் தரும்.தொழிலில் பணத்தைப் போட்டால் இலாபம் வரும், நஷ்டமும் வரும்.பாங்கில் போட்ட பணத்திற்கு நஷ்டமில்லை, வட்டியுடன் வரும்.தொட்டியிலிருந்து நீர் முகந்தால், தொட்டியில் நீர் குறையும்.கிணற்றிலிருந்து நீர் இறைத்தால் நீர் குறையாது.நண்பர்கள் மனஸ்தாபப்பட்டால், நட்பு குறையும், விரிசல் வரும், விலகவும் செய்வார்கள்.குடும்பத்தில் சந்தேகம் வந்தால், அது அதிக நாழி நிற்காது.சந்தேகப்பட்டதற்கு வெட்கப்படுவார்கள்.பாசம் முன்பைவிட அதிகமாகும். கைப்பொருளைப் பிறருக்குக் கொடுத்தால் குறையும்.கற்ற வித்தையை அடுத்தவர்க்குக் கொடுத்தால், அறிவு உயரும்.

  • வாழ்வுக்கு நஷ்டம் உண்டு, தோல்வியும் உண்டு.
  • யோக வாழ்வுக்கு நஷ்டமுமில்லை, தோல்வியுமில்லை.

பணம் நஷ்டப்படாதவனுக்குத் தொழில் நுணுக்கம் தெரியாது என்பது அனுபவம்.அபிப்பிராய பேதமில்லாத உறவுக்கு நெருக்கமில்லை என்பது இலக்கியம்.பேதம் ஏற்பட்டால் தெளியும். தெளிவு உறவை உயர்த்தும்.சர்க்கார் உத்தியோகத்தில் உத்தியோக உயர்வுண்டு.பதவியிலிருந்து இறங்குவதும் உண்டு.I.A.S. இல் சேர்ந்தபின் உயர்வுமட்டும் உண்டு, இறக்கம் இல்லை.

வாலியை எதிர்ப்பவருக்கு அவர் பலத்தில் பாதி வாலிக்குப் போகும்.வாலிக்கு தோல்வியே இல்லை.இது vital power உணர்ச்சிக்குரிய சக்தி.மனம் அதைவிட உயர்ந்தது.ஆன்மா அதனினும் உயர்ந்தது.எதிரி என வந்தால் அவனுடைய சக்தியில் பாதி தனக்கு வரும் என்பது ஆன்மாவுக்கும் உண்டு.ஆன்மாவுக்கு தோல்வி வர வழியேயில்லை.Vital power என்பது லஞ்சம் கொடுத்து சாதிப்பது.ஆன்மாவின் சக்தி உயர்ந்தது.

 

கொடுத்த பணம் வருமா, வாராதா என்ற பிரச்சினையுண்டு. நண்பனுக்குக் கொடுத்த பணம், தம்பி எடுத்துக்கொண்டு போன பணம் வருமா, வாராதா என்ற பிரச்சினையில்லை.நிச்சயமாக வரும். பணம் வாராவிட்டால், நட்பு உயரும், உறவு நெருங்கும்.

பணம் வருமா என்பது உறவிலும், நட்பிலும் இல்லை.

வருமானமில்லாத வீட்டுப் பையன் ஹாஸ்டலில் பணம் கட்ட தாயார் நகையை விற்றுப் பணம் அனுப்பினார்.நண்பர் அரசியல் தீவிரவாதி.மணியார்டரில் அவன் கையெழுத்திட்டு பணத்தை வாங்கிக் கொண்டு அரசியல் செலவு செய்துவிட்டார்.செய்தவர் பணக்காரர்.இழந்தவர் இழப்பு பெரியது.கேட்க முடியாது. வருத்தப்படவும் முடியாது.நடந்ததை வேறொரு ஜமீன்தார் நண்பனுக்கு எழுதினார்.உடன் பணம் அனுப்பி திருப்பித் தரக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தார்.சில ஆண்டுகள் கழித்து அடுத்த பட்டம் பெற ஹாஸ்டலில் சேர்ந்தபொழுது, அந்த அரசியல் நண்பர் வந்தார். அது அவருள்ள ஊர்.அரசியலை அப்பொழுது விட்டுவிட்டார். வசதியற்ற நண்பரை மாதம்தொறும் பார்க்க வரும்பொழுது அவரிடம் கூறாமல் ஹாஸ்டல் ஆபீஸுக்குப் போய் பில் கட்டுவார்.அப்படி 10 மாதம் கட்டினார்.நட்பில் நஷ்டமில்லை.நஷ்டமாகத் தோன்றினாலும் நட்பு உயரும்.நஷ்டமும் யோசனை செய்து பார்த்தால் இருக்கவே இருக்காது.நட்பிலும், உறவிலும் வாராத நஷ்டம், அன்னையிடம் வரப்போகிறதா?

வாழ்வில் சத்தியம் சிறு அளவுண்டு.அதுவே மேற்சொன்னது போல் நடக்கிறதெனில், அன்னை வாழ்வு முழுவதும் சத்தியம்.பொய் கலப்பற்றது.தோல்விக்கு வித்து பொய்.பொய்யில்லாத அன்னை ஜீவியத்தில் பிறந்த யோக வாழ்க்கை நஷ்டத்தை எப்படித் தரமுடியும்? பெற்றுக்கொள்பவருடைய பொய் தடையாக இருக்கும், தாமதப்படுத்தும்.அன்னை வந்தபின் நஷ்டத்திற்கு வழியேது?தோல்வி உயிரோடு இருக்க முடியாத சூழ்நிலை அது.

பல கோடியில் பாக்டரி ஆரம்பித்து கொஞ்சநாள் கழித்து மூடி, பல ஆண்டு அப்படியே இருந்து, கடன்காரர்கள் கையிலுள்ளதைப் பிடுங்கிப்போனபின், பொறுமையாக இருந்த அரசாங்கமும், பாங்க்கும் ஏலத்திற்கு வந்தன.இவர் எப்படித் தொழிலை இழந்தார், என்ன செய்தார், என்று தெரியவில்லை.பல ஆண்டு மூடினால், மெஷின் கெட்டுவிடும்.பலவகையான திருட்டுகள் போகும்.வட்டி அசலைப்போல் இரட்டிப்பாகும்.கோடிக்கணக்கில் கடன் வாங்கியவருக்கு, ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில் பணம் புரளாது.யார் என்ன சொல்லமுடியும்?

இவர் அன்னையை அறிந்தார்.பிரார்த்தனையை மேற்கொண்டார்.அனைவரும் அன்னை செய்ய என்ன இருக்கிறது? என்றனர்.என் மனமும் அதைத்தான் நினைக்கிறது.ஆசை கெட்ட கேடு போகிறேன் என்று நினைத்தார்.ஏலம் ஒத்திப்போயிற்று!இது பெரிய விஷயம்.ஆனால் இதனால் என்ன நடந்துவிடப் போகிறது என்றது மனம்.பெருந் தொகையை வட்டியாக சேர்ந்ததைத் தள்ளிக்கொடுத்தனர்.ஆச்சரியம்!அதனால் இப்பொழுது என்ன? ஆயிரம் நண்பர்கள் உதவிக்கு வந்தனர்.இதுவரை கேட்காத ஆறுதல் மொழி காதில் விழுந்தது.மனம் இதமாக நினைத்தது.அதனால் உலை கொதிக்குமா?சற்று நம்பிக்கை வந்தது.ஒருவர் வந்து என்ன ஆனாலும் பாக்டரியை விடாதே என்றார்.சொல் தெம்பு அளித்தது. நடைமுறைக்குத் தெம்பு போதாது.அடுத்த வாக்கியம் 'அன்றாட செலவுக்கு உதவுகிறேன்' என்றது!!இதுவரை கேள்விப்படாதது. சித்ரவதையுடனிருக்கும்பொழுது உயிர் பிழைக்கச் செய்யும் உதவி வதையை அனுபவிக்கத்தான் உதவுமோ?நன்றியுடன் உதவி பெற்றார்.பாக்டரியைத் திறந்தார்.ஓடுகிறது.ஆனால் அவருக்கு உயிர் போய் உயிர் வரவில்லை.உயிர் போய்க்கொண்டேயிருக்கிறது. கடன் வாங்க, சிறிதளவு உயிர் வந்துள்ளது.1 ரூபாய் கடன் வாங்க 2 ரூபாய் வட்டியும், கடனும் தரவேண்டும்.கடன் கேட்டார்.ஏதாவது வந்தால் போதும் என்றிருந்தார்.எதிர்பாராதவிதமாக எல்லாத் தொகையும் பாங்க் வட்டிக்குக் கிடைத்தது.கிடைத்தது வந்து சேரும் வரை உயிரிருக்குமா எனத் தெரியவில்லை.நம்பிக்கை வளர்கிறது. நம்பிக்கையால் வாழ வேண்டும்.40 வருஷமாக இது நான் பலமுறை பார்த்தது.நஷ்டத்தையே நாடி இலட்சியமாகப் போனவர்களையும், அன்னை நஷ்டத்திற்குள்ளாக்கவில்லை.நம்மவர்க்கு ஏது நஷ்டம்?

பரீட்சையில் எழுதுவதற்குத்தான் மார்க் போடுவார்கள்.பையனுடைய புத்திசாலித்தனத்திற்கு மார்க் போடமாட்டார்கள்.8இல் ஒரு பங்குக்கு மேல் எழுத அவனுக்கு கைவரவில்லை.அதுவும் M.A. பரீட்சை.அவனுக்கும் பாஸ் போட்டு II Class கொடுத்து பல்கலைக்கழக ஆசிரியராக்கிக் கொண்டனர்.அன்னையை நிழலாக அறிந்தவர் நிலை இது.

எழுதாத பரீட்சையிலும் தோல்வி அன்பர்க்கில்லை. முறையோடு படிப்பவர்க்கு ஏது தோல்வி?

மாதம் 4 லட்ச லாபம் சம்பாதிக்கலாம் என்றார் மானேஜர் பதவிக்கு வந்தவர்.மொத்தமாக 27 லட்சம் நஷ்டமாயிற்று.மானேஜர் அன்னையை நாடினார்.தன் சோம்பேறித்தனத்தையும், இல்லாததைச் சொல்வதையும், பதில் பேசாமல் நிற்பதையும் 1 மாதம் ஒத்தி வைத்தார்.பாக்டரி அந்த மாதம் 8 லட்சம் சம்பாதித்தது.அவருக்கு ரூ.5000/- அதிகச் சம்பளம் கொடுத்தனர்.மீண்டும் தம் பழக்கங்களை மேற்கொண்டார்.க்ஷணநேரம் உண்மை பேசினாலும், அந்த நேரம் அன்னை செயல்படுகிறார்.

திவாலான எஸ்டேட்டை புரோக்கர் சாதுரியத்தால் வாங்கி விழி பிதுங்கியவரை அன்னை, முதலை மீட்டுத் தந்தார்.மீட்ட முதலை திவாலாகப் போகின்றவர் கையில் ரசீதும் இல்லாமல் கொடுத்துவிட்டு நின்றார் இழந்ததைப் பெற்றவர்.கடனைத் திருப்பித்தர வேண்டியவர் ஹைகோர்ட்டிற்குத் திவால் நோட்டீஸ் கொடுக்கப் போகிறார். தற்செயலாக அவரும் அந்த நேரம் அன்னையைத் தரிசித்தார். வாங்கிய கடனை எப்படியாவது கொடுக்க திவாலாகும் நிலையிலும் அவர் முயன்று பணம் கொடுத்தவரை நாடிவந்தால், கொடுத்தவர் ஓடி ஒளிந்து கொண்டார்.அவரை அவர் நண்பர் மூலம் தேடிவந்து கடன் பெற்றவர் கடனைத் திருப்பித் தந்தார்.இவை அன்பர் அனுபவங்கள்.

 

முறையாக, திறமையாக, நேர்மையாக, உழைப்பவர் அன்பரானால், அவருக்குத் தோல்வி ஏது?நஷ்டமேது?

தொழிலை நண்பர்களிடம் ஒரு பக்தர் ஒப்படைத்தார்.அவர்கள் நண்பர்களாகவோ, பக்தர்களாகவோ நடந்து கொள்ளவில்லை. வேலை செய்யாமல், பணத்தை விரயம் செய்து உலகமே பாராட்டிய முன்னோடித் திட்டத்தை முழுவதும் நாசமாக்கினர்.பெருநஷ்டம் வந்தது.முதல் போட்டதைப்போல் இருமடங்கு நஷ்டம் வந்தது. நண்பர்கள் பாராட்டை எதிர்பார்த்தனர்.பரிசு கேட்டனர்!இதுவே வாழ்வளிக்கும் பலன்.பக்தர் நண்பர்களால் மனம் உடையவில்லை. மனம் புண்பட்டது.புண்படக்கூடாது என்பது சட்டம். பொறுத்துக்கொண்டாலும், மனம் புண்படாமலிருக்க மறுத்தது. உனக்குப் புண்படும் உரிமையில்லை என்று மனத்திடம் கூறினால் அதை மீறி மனம் வெந்தது.போராட்டம் 1 ஆண்டு தொடர்ந்தது. மனம் புண்படாமல் இருக்க இசைந்தது.என்ன இலாபம் வந்திருக்குமோ, அது அன்பின் பரிசாக வந்தது.

நண்பர்கள் துரோகம் செய்யலாம். வாழ்வு அவர்கட்குத் துணை செய்யலாம். சூட்சும வாழ்வும் நண்பர்களை அங்கீகரித்து அட்டகாசம் செய்யலாம், மனம் புண்படலாம். ஆறுதல் கூற வேண்டியவர் ஆத்திரத்தைக் கிளப்பலாம். உறுதுணையாக இருக்க வேண்டியவர், உயிரை எடுக்கலாம். குடும்பம் ஊராருடன் சேர்ந்து குதூகலப்படலாம். நல்லவனுக்கு வந்த நஷ்டம் ஊரில் அனைவருக்கும் வயிற்றில் பாலை வார்க்கலாம். பொறாமை பலிக்கலாம்.பொய் பலிக்கலாம்.

ஆனால்,

 

அன்னை நஷ்டம் தருவதில்லை, அன்னையிடம் தோல்வியில்லை, நஷ்டமும் தோல்வியும் வருகின்றன எனில் அவர் வாழ்வில் அன்னையில்லை.

பெரும்புகழும், பெருஞ்செல்வமும், பெரிய வருமானமும் பெற்றிருந்தேன்.நல்லவர், இனியவர் என்பவர்கட்கு உதவப் போனேன். என் பெருஞ்செல்வத்திற்கு ஆபத்து வந்தது.வருமானம் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை.கூடை நிறைய நகை போயிற்று, அத்துடன் கார்களும் போயின என்பது ஒருவர் நிலை.

கூடை நகையைக் கடலில் போடலாம்.அது உன்னைவிட்டுப் போகாது.பெரு நஷ்டம் வந்திருக்கலாம்.அது அன்னையை அறியும் முன், அன்னையை அறிந்தபின், நஷ்டம் திருவுருமாறி இலாபமாக வரும்.போன பணம் மட்டும் திரும்ப வாராது.வரும்பொழுது திரளாக வரும்.1 1/2 கோடியை இழந்தவர், 1 1/2 ஆண்டில் 2 1/2 கோடி பெற்றது அன்பர் அனுபவம்.வருவதற்கு வழியே தெரியாமலிருக்கலாம். பெற்றவரே, இனி கொடுக்க வழியில்லை எனப் பிரகடனப்படுத்தலாம். எவருக்குமே வழி தெரியாமலிருக்கலாம்.

உலகச் சரித்திரத்தில் அதிகக் கடன்பட்ட கம்பனியை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என நிர்வாகமும், பத்திரிகைகளும், சர்க்காரும், பொதுஜனமும் ஒருவாய்பட்டதுபோல் சொன்ன பொழுது, எதிராக நல்ல சொல் சொல்ல ஒருவரில்லை.

"சரியான முடிவுகளை எடுத்தால், கம்பனியை மூட வேண்டாம், அத்துடன் கம்பனி உயரும்'' என ஒரு பக்தர் சொன்னார்.அதைக் கம்பனியிடமும் சொன்னார்.

1700 கோடி நஷ்டத்தை அக்கம்பனி ஈடுசெய்து மேலும் 1700 கோடி இலாபம் மூன்றாண்டில் சம்பாதித்து, முன்பு போல் இருமடங்காகி, இன்று பணம் பெருகிய (cash cow) கம்பனியாக பவனிவருகிறது.

மனம் அன்னையை நாடி, முடிவு சரியாக இருந்தால் போன பணம் இரட்டிப்பாகத் திரும்ப வரும்.வரும்பொழுது வளர்ச்சியுடனும், வாய்ப்புடனும், பிரபலத்துடனும் வரும்.

ஆறு வருஷமாக ஆபீசில் சதி செய்தனர்.அனைவரும் கொண்டாடியவர் பெறும் வெற்றி அனைவருக்கும் பொறாமையைக் கொடுத்தது.பொறாமை தீயாக எரிந்தது.இல்லாத புகார்களை இருப்பதாக தலைவரிடம் கூறினர்.தலைவர் பக்தரை அழைத்து "அனைவரும் உன் மேல் பொறாமைப்படுகின்றனர்'' என்றார்.தலைவர் சிக்கலில் மாட்டிய நேரம் பக்தரைப் பழிவாங்க நிர்ப்பந்தம் செய்தனர். தலைவர் ஊழியர் கூட்டம் போட்டார்.புகாரில் ஆரம்பித்த தலைவர், புகார் கொடுத்தவர் மீது எரிந்து விழுந்து கூட்டத்தை முடித்தார். அடுத்த சிக்கலில் தலைவர் வசமாகச் சதிகாரர் கையில் மாட்டிக்கொண்டார்.பக்தர் பழிவாங்கப்பட்டார்.செய்தி நேரடியாக அன்னையிடம் போயிற்று.தலைவர் அன்று மாலை உத்தரவை கிழித்தெறிந்தார், சதிகாரர்களை மோசமாகத் திட்டி வெளியே அனுப்பினார். நோட்டீஸ் எழுதிய வக்கீல் மனைவிக்கு அன்று மாலை பயித்தியம் பிடித்தது.அடுத்த ஆண்டு தலைவருக்கு வேலை போயிற்று.பக்தர் அடுத்த ஆண்டு அதிர்ஷ்டப் பரிசுடன் அங்கிருந்து விலகினார்.

அன்னைக்கு நிகர் அன்னையே. தோல்வியை வெற்றியாக மாற்றுவது அருளாகும்.

நஷ்டம் என்றால் என்ன?தோல்விக்குரிய விளக்கம் எது?

பொருள் நஷ்டம் வருகிறது.அதற்கு நாமறிந்த காரணங்கள் பல.அவை அனைத்தும் புறத்திற்குரிய காரணங்கள்.அகத்திற்குரியது எது?அகம் என்பது மனம்.புரியாவிட்டால், பிடிக்காவிட்டால், முடியாவிட்டால், மனம் ஈடுபாடில்லாவிட்டால், நஷ்டம் ஏற்படுகிறது.

மனத்தின் இயலாமை, நஷ்டத்திற்கு வித்து. தோல்வி எது?

நாம் சந்திக்கும் நிகழ்ச்சி, கடமை, செயல் ஆகியவற்றைவிட நமக்கு strength வலிமை குறைவானால் தோல்வி ஏற்படுகிறது. புறநிகழ்ச்சிகள் அவற்றைப் பிரதிபலிப்பதால் அவை பொருட்டல்ல.

நாம் என்பது மனம்.எக்காரணத்தாலோ, மனம் ஈடுபாடு இல்லை எனில், வலிமை இல்லை எனில் நஷ்டமோ, தோல்வியோ ஏற்படுகிறது.இதுவே ஆன்மீக, மனோதத்துவ உண்மை.

 

அன்று புரியவில்லை, பிடிக்கவில்லை, ஈடுபாடில்லை, வலிமையில்லை, இன்று அது புரிந்தால், பிடித்தால், ஈடுபாடிருந்தால், வலிமையிருந்தால் என்ன நிலைமை?நஷ்டப்பட்டவர் இன்று ஆசையால் நஷ்டப்பட்டேன் என்ற அறிவு பெற்றால் என்ன வரும்? அறிவு வரும்.இனி அதுபோன்ற நஷ்டம் வாராது.இதை, புத்தி கொள்முதல் என்பார்கள்.பொறாமையால் கொலை செய்தேன், அவசரப்பட்டு முதலையிழந்தேன், நண்பனை நம்பி ஏமாந்து போனேன், என்பவர்கள் இன்று பொறாமையைக் கைவிட்டால், அவசரம் தவறு என்றுணர்ந்தால், இனி ஏமாற மாட்டேன் என்றால் மனம் நிம்மதியடையும்.போகிற கதி, நல்ல கதியாகும்.இந்த அறிவுக்கு இழந்ததைப் பெற்றுத் தரும் திறனில்லை.

அன்னைக்கு, இம்மனமாற்றம், வேறு.இழந்ததைப் பெற்றுத் தரும்.

உணர்ந்தால், உணர்ந்து சமர்ப்பணம் செய்தால், இழந்தது வரும். வருவது அதிகமாக இருக்கும்.

நேர்மையும், திறமையும் உள்ள உழைப்பாளிக்கு நஷ்டமும், தோல்வியும் வாராது.கடந்த கால நஷ்டத்தை ஏற்படுத்திய காரணத்தை இன்று அறிந்து

  • மனம் மாறினால்,
  • மாறிய மனம் செயல்பட்டால்,
  • மாறியது உண்மையானால்,
  • பலன் வர சில நாட்களோ,
  • சில மணி நேரமோ ஆவதில்லை,
  • அதே நிமிஷம் இழந்ததைப் பெறுவோம்,
  • பெறும்பொழுது அது பெரியதாக இருக்கும்.

Comments

"அன்பர் உரை'' நஷ்டமும்,

"அன்பர் உரை'' நஷ்டமும், தோல்வியும் நம்மவர்க்கில்லை

 

Para 12  -   Line  8    -  வாக்கியம்‘ "அன்றாட  -   வாக்கியம்   ‘அன்றாட

Para  12 &  Para 13 -  இரண்டு Paragraph-களையும்  சேர்க்கவும்

Para 27   -  Line  1    -  கோடி  -  1700 கோடி நஷ்டத்தை அக்கம்பெனி ஈடு செய்து மேலும் 1700 கோடி

Para 29   -  Line  8    -  கிழித் தெறிந்தார்  -   கிழித்தெறிந்தார்

Para 29   -  Line  9    -  வெüயே                     -    வெளியே

Para 36   -  Line  1    -   வமை யில்லை   -    வலிமையில்லை
 
 
motnir



book | by Dr. Radut