11. நெஞ்சுக்குரிய நினைவுகள்
நெஞ்சுக்குரிய நினைவுகள்
கர்மயோகி
Synthesis of Yoga
Part IV Chapter 1, Principle of Integral Yoga (P. 586)
[ஹட யோகம் உடலை மையமாக வைத்துச் செய்வது. ராஜ யோகம் மனத்தை மையமாகக் கொண்டது. தந்திர யோகம் எல்லா யோகங்களையும் இணைக்க முயல்வது. தந்திரம் மனிதனை ஆத்மாவாகக் கருதுகிறது, உடலின் ஆத்மாவாகக் கருதுகிறது. எனவே உடலுக்கும் உயிருக்கும் உரிய ஆசனம், பிராணாயாமம் அதன் கருவிகள். பூரண யோகம் ஆன்மிகமானது. எனவே அதன் முறைகள் ஆன்மாவுக்கும் மனத்திற்கும் உரியவையாக மட்டுமிருக்க வேண்டும். உடலில் ஆரம்பித்தால் முயற்சி பெரு முயற்சியாக இருக்கும். மனத்தில் ஆரம்பிப்பதால் பெரு முயற்சி தரும் பெரும் பலனை மனத்தின் திறனால் எளிதில் சீக்கிரம் அடைய முடியும். குண்டலினி மலர்ந்து எல்லா சக்கரம் வழியாக சகஸ்ரதளம் சென்று மோட்சம் பெறுவது மரபு. பூரண யோகத்தில் சகஸ்ரதளம் திறந்து மேலிருந்து சக்தி உடலில் வந்து, ஒவ்வொரு கட்டமாக குண்டலினியை வந்தடைந்து ஜீவனை சக்கரங்கள் மூலம் தூய்மைப்படுத்தும்.]
- இதன் முறை சரணாகதி.
- மனித ஜீவன் தெய்வீக ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்திற்குச் சரணடையும்.
- மனித ஆத்மாவில் எல்லா முனைகளிலும் தெய்வ ஜீவனை சந்திக்குமிடங்களில் ஐக்கியம் பூரண ஐக்கியம் பெறுகிறது.
- இவ்வைக்கியத்தின் மூலம் இறைவனே நேரடியாக மனிதனாகிய கருவியை தன் ஜோதிக்கு உட்படுத்தி மனித ஜீவனை இயற்கையின் எல்லாச் சக்திகளிலும் தூய்மைப்படுத்துகிறான்.
- இங்கு யோக இலட்சியத்தை நாம் விரிவு படுத்துகிறோம்
எல்லா யோகங்களிலும் ஆரம்ப கட்டம் மோட்சம்.
பொதுவாக இந்த ஆரம்ப இலட்சியத்தை முடிவான இலட்சியமாக்கிவிடுவது வழக்கம்.
அங்கு ஆனந்தம் என்பது நம் ஆத்மா ஆண்டவனில் கரைவது. - தந்திர யோகம் முக்தியை முடிவாகக் கருதினாலும், அது பூரணச் சிறப்பும் (perfection) அனுபவமும் இலட்சியமாகக் கொள்கிறது.
அத்துடன் உச்சகட்ட அனுபவத்தையும் ஒரு க்ஷணம் காணக் கூடியது தந்திர யோகம்.
உச்சகட்ட அனுபவம் என்பது முக்தியும், பிரபஞ்சத்தில் செயல்பட்டு அனுபவிப்பதுமாகும்.
அதனால் எல்லா முரண்பாடுகளும் அந்நிலையில் மறையும். - இது யோக இலட்சியத்தை தந்திர யோகம் உயர்த்திய நிலை.
நாம் அங்கே ஆரம்பிக்கிறோம்.
அத்துடன் இன்னொன்றையும் நாம் சேர்ப்பதால் நம் இலட்சியம் பூரண முக்கியத்துவம் பெறும். - மனிதனை நாம் தனிமனிதனாகக் கருதாமல் பிரபஞ்ச ஜீவனாகக் கருதுகிறோம்.
இப்பிரபஞ்ச ஜீவன் எல்லா ஜீவாத்மாக்களுடன் இணையக் கூடியது எனவும், இயற்கையில் எல்லா அம்சங்களுடனும் இணையக் கூடியது எனவும் கொள்கிறோம்.
இந்த ஆன்மிக இலட்சியத்தின் நடைமுறை முடிவுகளை நாம் ஏற்க முன்வருகிறோம்.
(அதாவது எவர் சிரமமும் நம் சிரமமாகும், எந்த ஜீவராசியின் துன்பமும் நம் துன்பமாகும்.) - யோகத்தின் முதல் இலட்சியம் மோட்சம், இறைவனுடன் இணைவது.
அதைச் சுதந்திரமாக பிரபஞ்சத்தில் அனுபவிப்பது அடுத்த இலட்சியம்.
(பிறருடைய வலி நம் வலியாவதைப் போல் பிறருடைய ஆனந்தம், பிற பொருள்களின் ஆனந்தம் நம் ஆனந்தமானால் நாம் பிரபஞ்ச ஆனந்தம் முழுவதும் அனுபவிப்போம்.) - இதிலிருந்து அடுத்த இலட்சியம் எழுகிறது. அது, இறைவனுடன் இணைவது என்பது எல்லா ஜீவன்களுடனும், ஜீவராசிகளுடனும் இறைவனின் திருவுள்ளப்படி நாம் அனுதாபத்தால் பங்கு கொள்வோம்.
(மற்ற ஜீவாத்மாக்கள் பெறும் முக்தி, ஆனந்தம் அவர்கள் மூலம் முழுமையாக நமக்கும் வரும்.) - தனிமனிதனுடைய யோகம் பிரபஞ்ச யோகமாகிறது.
(அனைத்து ஜீவாத்மாக்களுடன் ஆத்மாவில் தொடர்பு கொள்வதால் நாம் மட்டும் யோகம் செய்யவில்லை. நம்முள் எல்லா ஜீவாத்மாக்களும் யோகம் செய்கின்றனர்.)
முக்தியடைந்த ஜீவாத்மா இறைவனுடன் பிரம்மத்திலும் ஆன்மாவிலும் இணைகிறான்.
அவன் தானே தன்னைச் சிறப்புறச் செய்யும் கருவியாக்கி அதன் மூலம் இறைவன் மனித குலத்தில் மலரும் சந்தர்ப்பம் எழுகிறது. - அம்மலர்ச்சிக்கு இரு அம்சங்கள் உண்டு.
- அகந்தையினின்று வெளிவருதல் ஒன்று.
- தெய்வீக சுபாவத்தை உயர்ந்த முறையில் பெறுவது இரண்டு.
- அதாவது சிறப்பு மனத்தின் சுபாவத்தைச் சத்திய ஜீவிய ஆன்மிக சுபாவமாக மாற்ற வேண்டும்.
- ஞானம், உணர்ச்சி, கர்மம் ஆகியவற்றின் பூரண யோகத்தை ஆன்மிக சத்திய ஜீவிய சுய சிறப்புள்ள யோகமாக மாற்ற வேண்டும்.
ஞானம், உணர்ச்சி, கர்ம பூரண யோகம் என்றால் இவை ஒவ்வொன்றும் முதிர்ச்சியால் இணைந்து பூரணம் பெறும். ஆன்மிக சத்திய ஜீவிய சுய சிறப்பான யோகமெனில் ஆன்மா ஞானத்தில் உள்ளது உணர்ச்சியிலும் உள்ளது, கர்மத்திலும் உண்டு. இந்த ஆன்மா சுய சிறப்புப் பெறுவதால் சத்திய ஜீவியமாகிறது. அதனால் இது பூரண யோகமாகிறது. உலகில் அனைத்தும் ஆன்மா. எனவே ஞானமும் ஆன்மா. ஞானத்தின் ஆன்மா பரிணாமத்தால் சுயமாக சிறப்பு எய்துகிறது. உணர்ச்சியும் ஆன்மா. இந்த ஆன்மா பரிணாமத்தால் முதலில் ஞானமாகி, முடிவில் ஆன்மாவாகவும், சத்திய ஜீவியமாகவும் மாறுகிறது.
முதலில் சொல்லியது ஞானம் முதிர்ச்சியால் மாறுவது. இரண்டாவது கூறுவது பரிணாமத்தால் மாறுவது. - இறைவன் மனிதனுள் வந்து சத்தியஜீவியமாக, முதலில் மனம் இறைவனோடு இணைந்து ஒருமை எய்த வேண்டும்.
- இக்காரணத்தால் திரிமார்க்கமான ஞான, கர்ம, பக்தி யோகங்கள் பூரணயோகத்தின் முக்கிய இரகஸ்யமாகிறது.
- இறைவனோடு கலந்து ஐக்கியமாகிக் கரைவது (மோட்சம் பெறுவது) இந்த யோக இலட்சியமில்லை. ஏனெனில் இந்த இலட்சியத்தை ஏதாவது ஒரு - மனம், உணர்ச்சி, செயலில் ஒன்று - சரணம் பெற்றுத் தரும். ஆனால் சத்திய ஜீவன் இறைவனின் முழு ஜீவனையும் சுபாவத்தையும் அனுபவிப்பது நம் நோக்கம். (பிரதமருடன் நட்பு வேண்டுபவன் உறவு, நட்பு, அரசியல் மூலம் அதைப் பெற முடியும். பிரதமருடைய காபினட்டில் மந்திரியாகி அரசியல் அதிகாரம் பெறுவது அவருடனும், அவருடைய அதிகாரத்துடனும் முழுவதும் இணைவதாகும். மோட்சம் பிரதமரை அறிவது. பூரண யோகம் அவர் மந்திரி சபையில் அங்கம் வகிப்பது, பிரதமராவது.)
- மேலும் ஞான மார்க்கம் முழுமை பெற்றால், முதிர்ச்சியால் பூரணம் பெற்றால், அதுவே பக்திமார்க்கமாகவும், கர்மமார்க்கமாகவுமாகும். எந்த ஒரு மார்க்கம் பூரணம் பெற்றாலும் அடுத்த இரு மார்க்கங்களும் அதனுள் காணப்படும். (நிலம், வியாபாரம், தொழில் (industry), அரசியல் எந்த ஒரு துறையிலும் ஒருவர் உச்சக்கட்டம் எய்தினால், மற்ற துறைகளால் பெறும் பெரிய வசதி, அந்தஸ்து, அதிகாரம், பிரபலம் பெறலாம் என்பதை உதாரணமாகக் கூறலாம்.)
- அதனால் எந்த ஒரு மார்க்கத்திலும் ஆரம்பித்து முடிவில் முழுமை பெறலாம். என்றாலும் மூன்று முறைகளிலும் ஒரே சமயத்தில் ஆரம்பிப்பது சிரமமானாலும், அவசியமில்லை எனினும் பகவான் விரும்பும் முறை அதுவே.
(தொடரும்)
*********
ஸ்ரீ அரவிந்த சுடர்
உலகில் இதுவரை நடந்த யோகங்கள் எல்லாம் மேல் மன யோகம். அகந்தை செய்த தவம். ஆயிரம் ஆண்டிற்கு முன் நம் ஊரில் உலகம் என்பதை நம் ஊர் எனக் கொண்டோம். ராக்கெட் வந்த பின் அதுவரை ரயில், கார், விமானம் உள்பட உலகில் செயல்பட்டவை. ராக்கெட் பூமியைக் கடந்து செயல்படுகிறது. அது போல் பூரண யோகம் முதல் முறையாக மேல் மனத்தைக் கடந்து செல்கிறது. மேல் மனத்தில் மனமாக செயல்படுவது நினைவு. நினைவு மனத்தின் பகுதி. அஞ்ஞானம் மேல் மனத்தில் சுய அனுபவம் பெற முயல்வதால் அகந்தை உருவாகிறது. முழு உண்மையை அறிய மேல் மனத்தால் முடியாது.
மேல் மனத்திலும், உள் மனத்திலும் ஆத்மாவையும், இயற்கையையும் அறிய முயன்றால் சத்தியம் புலப்படும்.
*********
- Login to post comments