Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

பிரம்மாண்டமான திட்டங்களின் தரிசனம்
இவை இனி சித்திக்கப் போகும் திட்டங்கள்.
That மனிதனில் that ஆக பரிணாம வளர்ச்சி பெறுவது.
மூலத்தை எட்டுவதும் மனித வளர்ச்சியும், பல ஜென்ம பலன் சில நிமிஷங்களில் பெற முடியும்

  • மகேஸ்வரி மனிதனுக்குரியவாறு எடுக்கும் ரூபம்
  • பகவான் கனவில் இந்திய கனிப்பொருள் மண்ணில் மண்டியிருப்பது வந்தது.
  • நாம் நினைப்பதெல்லாம் தள்ளிப்போனாலும், நினைக்காததெல்லாம் That முன் ரூபமாக வரும்.
  • பிரம்மாண்டமான திட்டம் எனில் நாமறிந்தவற்றைப் பெரியதாகக் கருதுகிறோம். அது அதுவன்று.
  • வானம் நிறையுமளவு பகவான் தலை திருஷ்டியில் தெரிந்தால் பிரபஞ்ச ஜீவியம் சத்திய ஜீவியமாகும்.
  • மனிதன் மூலத்தை எட்ட விரும்பினால் அதற்கு வழி பிறக்கும்.
  • தான் வளர விரும்பினால் அது அகலவாட்டு வளர்ச்சி பிரபஞ்சத்தை நிரப்புவது.
  • மகேஸ்வரி ஞானத்தின் அம்சம். பகவான் தலை Outline- ஆகத் தெரிவது மகேஸ்வரி அம்சம்.
  • பள்ளியில் புத்தகத்தில் படிப்பது படிப்பு. மகேஸ்வரியின் ஞானம் கல்லும் புல்லும் ஞானம் பெறுவது.
  • அது ஜோதியாய் தெரியும்.
  • வேத காலத்தில் காயகல்பம் பெற்றவர் நாட்டில் எங்குமிருக்கலாம் என அன்னை கூறுகிறார்.
  • திருஷ்டி ஒருவருக்குச் சித்தித்தால் அவருக்கு அந்த ரிஷிகள் உள்ள இடம் தெரியலாம்.
  • ஆரம்ப நாட்களில் பகவான் automatic கை தானே எழுதுவதைப் பயின்றார். இறந்தவர்களை - தகப்பனார், தாயார், பரமஹம்சர், விவேகானந்தர் போன்றவர்கள் - அழைத்தால் அவர்கள் கூறுவதை பகவான் கையெழுதும். அந்த நாட்களில் அதை ஒரு வெளியீடாக திருச்சியில் பிரசுரம் செய்தனர். பகவான் இவை சூட்சும உலகுக்குரியன. அதனால் ஆன்மிக சத்தியம் எனக் கூற முடியாது என்று கூறியுள்ளார்.
  • தரையில் விழுந்த பழம் கிளையில் போய்ச் சேர்வது தெய்வீக மனசக்தி. திருஷ்டியில் அச்சக்திகள் செயல்படுவது தெரியும்.
  • சத்திய ஜீவியத்தில் நமக்கு வேண்டும் என்ற பொருட்களை நாமே செய்யும் திறமை நமக்குண்டு என்றால் நம்மால் பேனா, பழம் செய்ய முடியுமா? நாம் பேசும்பொழுது நமக்குத் தேவையான சொற்களை நாமே உற்பத்தி செய்வது மனத்தளவில் தெரிகிறது. இந்த மகேஸ்வரி திருஷ்டி ஏற்பட்டால் மனிதன் அது போன்ற சக்தியைப் பெற்றிருப்பது தெரியும். நம் திருஷ்டியில் ஒருவர் வந்தால் அவர் எழுத நினைத்தால் அவர் கையில் பேனா வரும். அது அவரால் செய்யப்பட்டதாக இருப்பது நமக்குத் தெரியும். ஏகன் அநேகன் என்ற கருத்து சித்தித்தால் நாம் காணும் ஒருவருள் உலகம் தெரியும் - கிருஷ்ணன் வாயுள் உலகம் தெரிந்தது போல் - அது சத்திய ஜீவிய சித்திகளில் ஒன்று. வீசும் காற்று கீதமிசைக்கும்.
  • மகேஸ்வரியின் சித்தி இருளை அடர்ந்த ஒளியாகக் காட்டும்.
  • Mahayogi Sri Aurobindo என்ற சிறு புத்தகம் R.R. Diwakar எழுதி பாரதிய வித்யா பவனால் பிரசுரிக்கப்பட்டது. அதை ஒருவர் வாங்கிப் படித்தார். காலை 4 மணிக்கு எழுந்து ஸ்விட்ச் போட நினைத்தார். அறை முழுவதும் வெளிச்சமாயிருந்ததால் ஸ்விட்சைப் பார்த்தார். அது போடப்படவில்லை.
    இது போன்ற பல அனுபவங்களை அன்பர்கள் அறிவார்கள்.
    இத்தலைப்பு கூறுவது இதுவரை உலகமறியாதது. நாம் எப்படி அதைக் கூற முடியும். கூறமுடியாவிட்டாலும் அது முழுவதும் தெரிய முடியாததல்ல எனவும் கூறுகிறார்.
    ஜோதிமயமான பிரம்மாண்டமான விசாலம் (vast comprehensive luminous space) என்று வேதம் கூறுவது நினைவு வந்தால் பூமி ஒரு சிறு பொருளாகி பிரபஞ்சம் ஜோதிமயமானது க்ஷணம் தெரியும். கண்ட அன்பர்களுண்டு.
    இவை ஆன்மிக திருஷ்டி. அன்பர்கட்கு இதை வாழ்க்கைப் பலனாக நான் இதுவரை கூறியுள்ளேன். இந்த திருஷ்டி ஒருவருக்கு வியாபாரத்தில் பலித்தால் நான்கு வருஷ வியாபாரம் ஒரே ஆர்டரில் வரும்.

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

எந்தச் செயலிலும் பல அம்சங்கள் உள்ளன. செயலுக்கு ராசியுண்டு. செய்பவருக்குப் பர்சனாலிட்டியுண்டு. பெறுபவர் தம் சுபாவத்தில் பெறுகிறார். செயலின் பலனில் ராசி, பர்சனாலிட்டி, சுபாவம் வெளிப்படும். வேலைக்கு ஆள் கிடைக்காத காலத்தில் நூறு ரூபாய் வேலைக்கு ஆயிரம் ரூபாய் போனஸ் தந்து அழைத்த ஸ்தாபனத்திற்கு வந்தவர் வேலையை ஏற்றார். போனஸை மறுத்துவிட்டார். இரு ஆண்டுகட்குப் பின் அவருடைய வருமானம் மாதம் ரூபாய் ஆயிரம் ஆயிற்று. ராசி, பர்சனாலிட்டி, சுபாவம் சேர்ந்து செயல்படும் வகை.

  • பழைய பழக்கம் என விலக்குதல் அவசியமில்லை.
  • ஊழல் புதிய பழக்கம் என்பதால் ஏற்க வேண்டுமென்பதில்லை.
  • நல்லதை ஏற்று உயர்ந்ததுடன் இணைத்துப் பலன் பெறுவது சரி.
  • பழைய நிலை சிருஷ்டி, புதிய இயக்கம் பரிணாமம்.

சிருஷ்டி பரிணாமத்தால் அன்றாட நிகழ்ச்சிகளை அற்புதமாக்கும் திறன் பெறுகிறது. பழைய நிலை இருளான தீமை, புதிய வாய்ப்பு பரமாத்மா. இவை இணைந்து தெய்வீக வாழ்வாக மிளிர்கிறது.

*********



book | by Dr. Radut