Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

129. பொங்கி வரும் சந்தோஷம் - Conscious Joy

  • கல்லடியில் தப்பலாம் கண்ணடியில் தப்ப முடியாது.
  • உள்ளத்து சந்தோஷம் உலகமறிந்தால் போய்விடும்.
  • உள்ளம் பெறும் உவகை உலகத்தையடைவதே பூரண யோகம்.
  • ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் என்பவை சச்சிதானந்தம்.
  • ஆனந்தம் தானே எழுவது மனம் ஆத்மாவை வெளிப் படுத்துவது.
  • அது பொங்கிவரும் சந்தோஷமானால் நல்லது.
  • மணக்குள விநாயகரை அன்னை happy being சந்தோஷமான ஜீவன் என்றார்.
  • ஞானானந்தரையும் அது போலவே விவரித்தார்.
  • “அன்னை போல எவரும் சிரிக்க முடியாது” எனப் பலரும் கூறுவர்.
  • சந்தோஷம் க்ஷணமும் நிலைக்காது எனவும் பொங்கிவரும் நிரந்தர சந்தோஷம் ‘வாயில்’ எனவும் கூறுவது முரண்பாடு.
  • பைத்தியம் தெளிய கல்யாணம் செய்ய வேண்டும் எனில் எப்படிச் செய்வது. கல்யாணப் பேச்சு சற்று சந்தோஷம் தருமானால் அதைத் தொடர்ந்து பைத்தியம் தெளியும்.
    நல்லெண்ணம் வலிமையானவர் பேசினால் அது முடியும்.
  • நமது சந்தோஷம் நம்மைச் சந்தோஷப்படுத்துவது சுயநலமான சந்தோஷம்.
  • பரநலமான சந்தோஷம் அழிந்தாலும் மீண்டும் எழும்.
  • பரநலமான சந்தோஷம் பெற்றவர் மூன்று வகை 1) அவர் விலகுவார் 2) கொடுத்தவர் சந்தோஷம் அழியும் 3) கொடுத்தவர் சந்தோஷம் வளரும்.
  • இம்மூன்றாம் வகையினரில் ஆரம்பித்து அடுத்தவர்களுடன் தொடரலாம்.
  • கொடுப்பது பரநலம் வளர உதவுமானால், எழும் சந்தோஷம் பொங்கும்.
  • இப்படிப்பட்டவரைக் குழந்தைகள் நாடும்.
  • குழந்தைகளிடம் இதை எளிதில் காணலாம்.
  • AID பொருளாதார உதவி பெறும் நாட்டை அபிவிருத்தி செய்ய உதவியதில்லை. ஒரு நாடு AID கொடுத்து அதைப் பெறும் நாடு அதனால் சுபீட்சமானால் அந்த நாடு எதிர்காலத் தலைவனாகும்.
  • தாயின் பாசம் (Physical love) உடலில் இது போன்றது.
  • உயிரால் இணையும் கணவன் மனைவி அது போன்றவர்.
  • எலிசபெத் ஜேனிடம் அது போன்ற பாசம் உடையவளாதலால் ஜேன் வாழ்வு மலர்ந்தது.
  • Sydney Carton சிட்னி கார்டன் காதலியின் வாழ்வு மலர உயிரைக் கொடுத்து அவள் காதலனைக் காப்பாற்றினான்.
  • Cheerfulness சந்தோஷம் யோகத்திற்குப் பெரிய அஸ்திவாரம்.
  • சமர்ப்பணம் சந்தோஷம் தருவதால் சந்தோஷமானவர்க்கு சமர்ப்பணமும் தேவையில்லை.
    உலகம் சந்தோஷத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டது.

**********

ஜீவிய மணி

படிப்பு முடிந்ததும் வேலை தேடும் இளைஞன் தனக்குள்ள திறமைகள் என்ன, சிறப்புகள் என்ன, நாட்டிற்கு எத்திறமைகள் தேவைப்படுகின்றன, எங்குத் தேவைப்படுகின்றன, எந்த ரூபத்தில் தேவைப்படுகின்றன என ஆராய்ச்சி செய்தால்தான் எதிர்பார்க்கும் வருமானத்தைப் போல் பல மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பு பல வகைகளில் நாட்டில் மலிந்திருப்பதையும், அதற்குரிய இளைஞர் கிடைக்காததையும் அறிவான். ரிடையராகும் நேரம் சம்பாதிக்கும் வருமானம் இன்றே பெறலாம் எனத் தெரியும்.

**********

 



book | by Dr. Radut