Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 177: As if in her ascent to her lost source

இழந்த இலக்கை நாடி உயர்பவர் போல

  • இருப்பதெல்லாம் எடுத்துரைக்க விழைபவர் போல
  • அவள் உயர்ந்த ஊர்வலம் கட்டம் கட்டமாக வளர்ந்து
  • பார்வை திருஷ்டியாகும் பக்குவம் தரும் முன்னேற்றம்
  • ரூபம் ரூபலாவண்யமாகும் நேர்த்தியான முன்னேற்றம்
  • அளவுகடந்த அபரிமிதமான பிரயாணிகளின் யாத்திரை
  • அளவை மீறிய எண்ணம், கட்டுக்கடங்காத சக்தி
  • மடியிலிருந்த மகத்தான சக்தி காலத்தால் கட்டுப்படாதது
  • ஆதியற்ற மௌனம் அந்தமற்ற அமைதியாகி
  • ஆத்மாவின் அழியாத ஆனந்தத்தினின்று பிரிக்கப்பட்டு
  • தானிழந்த சந்தோஷத்தையெல்லாம் தக்கவைக்க முயன்று
  • அழியும் பொருளுக்கு அழியாரூபம் கொடுத்து
  • சிருஷ்டிக்கும் செயலின் பிரம்ம சக்தியை நம்பி
  • நிரப்பமுடியாத பிளவைத் தாண்டி வென்று
  • பிரிவினையின் புண்ணைச் சற்று குணப்படுத்தி
  • சிறுமையின் சிறையினின்று தப்பி ஓடி
  • பிரம்மத்தின் பரந்த உயர்வுகளைக் கண்டு
  • காலத்தின் அரங்கம் கட்டவிழும் நிலையற்ற நிழலில்
  • அணுகமுடியாத அற்புதம் அருகே வந்து தவழ்ந்து
  • பிரம்மாண்டமான காலம் நொடியினுள் சிக்கி
  • சிறிய ஆத்மாவைப் பிரம்மத்தால் நிரப்புகிறது.
  • அசைவற்றது அவள் மந்திர இசைக் குரலால் வளைந்து
  • அகன்ற கரையின் அளவற்ற நீட்சியில் நின்று
  • ரூபத்துள் உறையும் அரூபியைக் கண்டு
  • அனந்தத்தின் அரவணைப்பை அருகேயுணர்ந்து
  • சேவைக்கு இலட்சியமில்லை, கடமைக்கு முடிவில்லை
  • பரமனின் திருவுள்ளம் பாட்டை உயர்த்தி நடத்தி
  • அறிய முடியாத ரூபமற்ற பரப்பு அளிக்கும்
  • இது அவள் இரகஸ்யம், முடியாத கடமை
  • எல்லையற்றதை பிறப்பெனும் சிறுவலையில் பிடிக்க முயன்று
  • ஆன்மாவை உடலின் ரூபத்துள் அடக்க முயன்று
  • சொற்பதம் கடந்தவனை சொல்லால் வர்ணிக்க முயன்ற எண்ணம்
  • வெளிப்படாத இரகஸ்யத்தை வெளிப்படுத்த பாடுபட்டு
  • முடியாதது அவள் முயற்சியால் முடிந்தது
  • உயர்ந்த அறிவுக்குப் பொருத்தமற்ற திட்டத்தை ஏற்று
  • அந்த மந்திர மாயக் கலையின் தந்திரங்களைக் கண்டு

**********

ஜீவிய மணி

அன்னையின் ஜீவியம் சிருஷ்டிக்கவல்லது. அது சிருஷ்டிக்கக் கூடியவற்றுள் ஒன்று, அன்னையின் ஜீவியமாகும். அதாவது தன்னைத்தான் பெருக்கிக் கொள்ளக் கூடியது. உளி மேஜையைச் செய்யும். பேனா எழுதும். ஆனால் உளியால் உளியைச் செய்யவோ, பேனாவால் பேனாவைச் செய்யவோ முடியாது. அன்னை ஜீவியம் உலகில் எதையும் சிருஷ்டிக்க வல்லது. அத்துடன் தன்னையும் சிருஷ்டிக்கக் கூடியது.

அதனால் அன்னை ஜீவியம் அனந்தமாகும் (Infinity).

*******



book | by Dr. Radut