06. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
63. எரிச்சல் பட முடியாதது - சமத்துவம்.
- மனித குணங்களில் ரஜஸ் ஒன்று.
- அதற்குப் பிடித்ததை ஏற்கும், பிடிக்காவிட்டால் எரிச்சல்படும்.
- தெய்வங்களும் அதற்கு முழுமையாக விலக்கில்லை.
- எரிச்சல்படாவிட்டால் எதிராகச் செயல்படும்.
- பஸ்மாசூரனை தகிக்க விஷ்ணு செயல்பட்டார்.
- இது செயலுக்குரிய எரிச்சல்.
- எரிச்சல்படவில்லையெனில் எதிரி மறைவான்.
- மேடம் அலெக்ஸாண்டர் பு- நெருங்கி வந்தபொழுது எரிச்சல் படவில்லை, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார். புபோய் விட்டது.
- அதைவிட உயர்ந்த கட்டம் புலி என்னைத் தின்னப் பிரியப்பட்டேன் என்பது.
- அதிகபட்சம் மனிதன் எரிச்சலைக் காட்டாமலிருக்கலாம்.
- உள்ளே எரிச்சல் படாமலிருக்க சாட்சி புருஷனாயிருக்க வேண்டும்.
- எரிச்சல் பட முடியாதவனுக்கு யோகம் பலிக்கும்.
- எரிச்சல் படாமலிருக்க ஞானம் தேவை.
- ஏன் எதிரி எரிச்சல் மூட்டுகிறான் என்பது அந்த ஞானம்.
- அந்த ஞானமிருந்தால் உள்ளே எரிச்சல் எழாது.
- தான் விரும்பும் பெண் அழகனான அயோக்கியனை விரும்புகிறாள் என்றறிந்து டார்சி எரிச்சல்படுவதைவிட அது நிலைக்காது என்ற ஞானம் பெற்றிருந்ததால், அவனை விலக்கி அவளைப் பெற முடிந்தது. இது பிரம்மப் பிரயத்தனம்.
- எரிச்சல் படக்கூடாது என்ற முடிவு இதுவரை எழாத எரிச்சலைத் தரும்.
- அந்த முடிவு சில நாள் நீடித்தால், பல நாள் பயில முடிந்தால், அன்பர் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.
- முதலாவதாக மற்றவர் அர்த்தமற்ற ஆழ்ந்த அபிப்பிராயங்கள் தெரியும்.
- அடுத்தது நாமும் அது போலிருப்பதால் நமக்கு அது வருகிறது எனத் தெரியும்.
- எரிச்சல்படாததோடு, எரிச்சலை விலக்க முடியுமானால் swimming poolல் இருந்து கடலுள் வந்தது தெரியும்.
- அர்த்தமற்ற வெறும் பெண்ணான மனைவியில் ஆழ்ந்த மனைவியின் பாசம் தெரியும்.
- பாகற்காயின் ருசி கசப்பு, இப்பொழுது பாகற்காய் ணீ நிமிஷம் இனிக்கும்.
- தானே சுற்றுப்புறம் சுத்தமாகும்.
- அமைதி என்றால் என்ன என்று முதன்முறையாகப் புரியும்.
- ஓரளவு அன்பு நாடி வரும்.
- பெரும் அளவு அன்பு செலுத்த முடியும்.
- அர்த்தமற்றவையின் அர்த்தம் விளங்கும்.
- சிலையும், படமும் உயிர் பெறும்.
- மேலேபடும் காற்று தென்றலாக இனிக்கும்.
- இனிப்பின் சுவையைக் கடந்த உயர்ந்த சுவை இனிப்பின் பின்னால் தெரியும்.
- நல்ல சொல் பேசியறியாதவர் நம்மிடம் இனிக்கப் பேசுவார்.
- வாய் ஓயாமல் பேசுபவர் வாய் மௌனமாகும்.
- பரம்பரையான ஆசாரம், கட்டுப்பெட்டி, மடியானவர் தன் பெரும் அசுத்தத்தை அறிவார்.
- உயர்ந்தோர் தம்மை உயர்ந்தோரில்லை என எளிதில் காண்பார்.
- அற்புதம் மின்னலாகத் தெறிக்கும்.
தொடரும்.....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் மனித முயற்சி எதிரிக்குத் துணை செய்யும். தெய்வ முயற்சிக்கு எதிரி இல்லை; எதிரும் இல்லை. |
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் நடக்கும் நல்ல காரியங்களை அருள் செய்வதாகவும், நடக்காததைத் தம் குணம் மறுத்ததாகவும் புரிந்து கொள்வது அறிவுடைமை. |
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் இடைவிடாது நெஞ்சு அன்னையை அழைக்கும் பொழுதும், உடல் அன்னை பக்கம் திரும்ப மறுக்கிறது. உடலே அன்னையை அழைத்தால் உலகமே நகரும். |
********
- Login to post comments