Skip to Content

05. அஜெண்டா

அஜெண்டா

P.169 Medicines cure you of one thing and give you another (Volume VI)

மருந்து ஒரு வியாதியைக் குணப்படுத்தி அடுத்ததைத் தரும்

  • குறையை முறையால் நிவர்த்தி செய்வது மருந்து.
  • மந்திரம் குறையை நிறைவால் நிறைவு செய்கிறது.
  • மணி, மந்திரம், ஔஷதம் எனப் பெயர்.
  • நிலத்தை விற்று வீடு கட்டினால் சொத்து மதிப்பு மாறாது.
  • ஹாலந்தில் ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது, போனால் வெளிவர முடியாது என்றொரு நம்பிக்கை. இது அனுபவத்தால் வந்தது.
  • மருந்து ஒரு உபாயம். வியாதியைக் குணப்படுத்த சக்தி வேண்டும். மருந்திற்கு அந்தச் சக்தியில்லை. எனவே உடலின் பொதுவான சக்தியைக் கொண்டு ஒரு வியாதியை மருந்து குணப்படுத்துகிறது. அதனால் அந்த இடம் குறைவுபட்டு வியாதி வருகிறது.
  • ஆன்மீக முறைக்கு இக்குறை வாராது. ஏனெனில் ஆன்மா புது சக்தியை அளித்து வியாதியைக் குணப்படுத்துகிறது.
  • அன்னைக்குப் பிரார்த்தனை செய்வதால் தீரும் பிரச்சனைகள் மேலும் ஒரு வாய்ப்பைக் கொண்டு வருவதைக் காணலாம்.
  • தூங்க முடியவில்லை என்பது ஒரு வியாதி. இதற்குப் பல்வேறு உபாயங்கள் உள. எதுவும் முழுப் பலன் தாராது.
  • இரவில் தூங்க முடியாமல் பகலில் தூங்குவார்கள்.
  • இப்படிப்பட்டவர்க்கு, அன்னையை அதிகமாக அறியும் வாய்ப்புண்டு. இதனால் தூக்கம் போகும் என நிச்சயமாகக் கூற முடியாது.
  • அன்னையின் அளவில்லாத சக்தியை அன்பர் நம்பினாலும், அதை உள்ளபடி அறிவதில்லை.
  • ஒரு குழந்தை ஓர் அமெரிக்க சாக்லேட் சாப்பிட்டுவிட்டு மறுநாளும் அது வேண்டும் என விரும்பி அன்னையிடம் 1 மணிக்குச் சொல்லிற்று. மாலை 6ணீ மணிக்கு அமெரிக்காவிலிருந்து வந்தவர் அதே சாக்லேட்டை அக்குழந்தைக்குத் தந்தார்.
  • இது கேட்டுக் கிடைத்தது. கேளாமல் கிடைப்பது அபரிமிதம்.
  • நெடுநாளாக இரவில் தூங்க முடியாதவர் பகலில் வேலை செய்ய முடியாமல் தூங்குகிறார்.
  • அப்படி ஒரு நாள் இரவு தூங்கவேயில்லை என்றபின், அன்னையைத் தொடர்ந்து அழைக்க முடிவு செய்தார். பகல் முழுவதும் தெம்பாக வேலை செய்ய முடிந்தது. இரு இரவுகள், மூன்று இரவு தூங்காமலிருந்தாலும் அழைப்பு நாலாம் நாள் போதிய தெம்பு தரும்.
  • கேட்டுப் பெற்றது 8 ஆண்டில் 100 ஏக்கர். கேளாமல் பெற்றது 3 மணி நேரத்தில் 200 ஏக்கர். கேட்டால் நிச்சயம் கிடைக்கும். கேளாவிட்டால் ஆரம்பத்திலேயே அபரிமிதமாகக் கிடைக்கும்.
  • கேட்டோ, கேளாமலோ அன்னையிடமிருந்து பெற விரும்பாத மனநிலைக்கு யோகம் பலனாகக் கிடைக்கும்.
  • திரௌபதி கேட்டுப் பெற்றது மானத்தைக் காப்பாற்றியது.
  • பகவான் கேளாமல் பெற்றது சத்திய ஜீவியம்.
  • சண்டையும் பூசலுமான தம்பதிகள் கேட்டுச் சுமுகம் பெறலாம்.
  • கேளாமல் அன்பையும், பிரியத்தையும் பெறலாம்.
  • கேளாமல் பெறுவது Silent Will மௌன சக்தி.
  • வியாதியைக் கேட்டும் குணப்படுத்தலாம், கேளாமலும் குணப்படுத்தலாம்.
  • குணம் வேண்டியவர் கேட்கலாம், அருள் வேண்டியவர் கேட்கக்கூடாது.

********

ஜீவிய மணி
 
அன்னையை ஏற்றால் அனைவரும் ஏற்பர்.
நிகழ்ச்சிகளை நினைப்பது அன்னையை மறப்பதாகும்.
கிடைக்காது என்பதால் கிடைத்த பக்குவம்.
வெளிப்படாத சொல் வேகமுடையது.
கடந்தது காரமாகத் திரும்பி வரும்.        
 
 
 
******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கேட்காமலிருப்பது கேட்பதை சரணம் செய்வதாகும்.
 
 
 
******
 
 
 ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை நினைக்கப் பிரச்சனை அடுத்த சந்தர்ப்பம் என்பவன் பக்தன்.
 
 
 
********



book | by Dr. Radut