04. சாவித்ரி
சாவித்ரி
P.143 As if a stranger or enemy at its door
முகம் தெரியாத மனிதன், எதிரி வாயில் வந்து
- அதிர்ச்சி பெற்ற புலன்கள் அனுமதித்த எண்ணங்கள்
- ரூபத்தின் ஜீவனை இழந்த அவ்வெண்ணங்கள்
- கண்டதை விண்டுணராத விநோத இதயம்
- செயலைக் கண்டும் அதன் திறனையறியாத
- நிகழ்ச்சிகள் உணர்த்தும் நித்தியத்தைத் தவறவிடும்
- அதன் பொருளென்ன என்று அறிய முயலாத நிலை
- மனித ரூபம் பெற்ற ஜீவன்கள் நிறைந்த இடம்
- நேரம் கண்ட வேகத்துள் முழுதும் இழந்த பெருநிலை
- என்னவென்று அறியாத, ஏன் வாழ்கிறோம் என்றுணராத
- இயற்கை தரும் இன்பம் எழில் தரும் முடிவென
- புறம் தரும் புலனுணர்வு புலப்படும் நிலை
- உடல் பெற்றதே உலகம் பெற்றதாக உணரும் பாங்கு
- உணர்ந்து, செயல்பட்டு, புலனாலறிந்து, புலப்படுவது தவிர வேறில்லை
- ஆத்மாவின் புற ஆடையுடன் ஐக்கியமாகி
- ஆழ்ந்து ஒளிந்துள்ள அறிவு கண்டுகொள்ளும்
- அகக் கண்ணை அவன் மீதே பொருத்த மறுத்து
- நாடகக் கர்த்தாவை தேடி மறுத்து
- கண்டது மேடை, கண்ணில் பட்டது நாடகம்
- ஆழ்ந்து உணரும் ஆராய்ச்சியுணர்வில்லை
- சிந்தனை எழுந்து சிறக்கும் சிரமத்தை ஏற்கவில்லை
- இயற்கையைக் கண்ட மனம் ஏதும் அறியவில்லை
- வரத்தைப் போற்றி, வலியெழ அடித்ததைக் கண்டு பயந்து
- அவள் சட்டத்தின் மந்திர யுக்தியை மனதில் கொள்ளவில்லை
- சத்தியம் ஊறும் ஊற்றைக் காணத் துடிக்க மறுத்து
- ஏராளமான தகவலை தஸ்தாவேஜாக்கி
- தெளிவான நூலிழை கோர்க்கும் உணர்ச்சி மணிகள்
- வேட்டையாடி, விரைந்து சென்று, நுகர்ந்து பார்த்து
- ஒளியிலும், ஓடும் காற்றிலும் ஒடுங்கி நிற்கும் தமஸ்
- உலகோடு இணைந்து மறையும் ஸ்பர்சத்தை நாடி
- மேல் மன உணர்வை மேலோடு திருப்தி செய்து
- இவை வாழ்வின் துடிப்பை மேலோடு தொட்டு
- மறைவிலுள்ள ஆத்மாவின் ஸ்பர்சத்தை அறியாமல்
- உள்ள ரூபத்தை வெளி ரூபத்தின்று காப்பாற்ற
- பிழைத்தெழுந்து அனுபவிப்பதே நோக்கம்
- குறுகிய வாழ்வின் குட்டை நாட்கள் நிரம்பின
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் நடந்தவை எல்லாம் நல்லது என்பவருக்கு நல்லது மட்டுமே நடக்கும். |
*******
- Login to post comments