03. யோக வாழ்க்கை விளக்கம் VI
யோக வாழ்க்கை விளக்கம் VI
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
II/72) மனம் ஆரம்பத்தை இழக்க வேண்டுமெனில் அது மௌனத்தால் நிரம்பியும் அதன் அமைப்பை இழந்தும் நிற்க வேண்டும். அந்நிலையில் சக்தி (the force) மௌனத்தைச் சந்தித்து அதில் கரைந்துவிடும்.
- மௌனம் நிறைந்த மனம் சக்தியில் கரையும்.
- எல்லோரும் மனத்தை அறிவோம்.
- அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என அறியோம்.
- அனைவரும் பேசுகிறோம்.
- பேசக் குரல் வேண்டும். குரலின் சக்தியால் பேச்சு எழுகிறது, கேட்கிறது.
- பேச்சுக்கு அமைப்புண்டு (construction).
- சுவர்கள் வீட்டின் அமைப்பு.
- வீட்டை அறைகளாகத் தடுப்பது, எல்லையை நிர்ணயிப்பது சுவர்கள்.
- சுவர்களில்லாமல் வீடு கட்ட முடியாது.
- சுவர்களை அதனால் வீட்டின் அமைப்பு என்கிறோம்.
- சட்டையின் அமைப்பு வெட்டிய இடங்களின் தையல்.
- தையலின்றி, வெட்டாமல் சட்டையில்லை.
- வீதிகள் ஊரின் அமைப்பு.
- அவைபோல் பேச்சுக்குச் சொற்கள் அமைப்பாக இருக்கின்றன.
- சொற்களின்றிப் பேச்சில்லை.
- அதேபோல் எண்ணங்கள் மனத்தின் அமைப்பு.
- ஒரு ஊரை இடித்து அகற்றி புது ஊர் கட்ட வேண்டும் என்றால் வீடுகளை இடிக்க வேண்டும், வீதிகளை மூட வேண்டும்.
- வீடுகட்கு அஸ்திவாரம் உண்டு.
- ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னும் தோண்டி எடுத்தால் அஸ்திவாரம் தெரியும்.
- களிமண் பானையைச் சூளையில் சுட்டுவிட்டால் மீண்டும் களி மண்ணாகாது.
- சுடாத பானையை நீரில் மூழ்கி ஊற வைத்தால் பானை கரைந்துவிடும்.
- சூளை சுடுவதால் பானையின் அமைப்பு உருவாகிறது.
- சுடாத பானையின் அமைப்பு கரையக்கூடியது.
- மனத்தின் அமைப்பு எண்ணம்.
- எண்ணம் மாறக்கூடியது.
- எண்ணம் உணர்வு பெற்று நம்பிக்கையானால், எண்ணம் அமைப்பு பெறும்.
- மனத்தின் பொருளில் அந்த அமைப்புக்கு அஸ்திவாரம் விழும்.
- மௌனம் நிறைந்தால் (saturate) எண்ணம் கரையும்.
- எண்ணம் கரைவதால் அதன் அஸ்திவாரம் கரையாது.
- மௌனம் மனத்தின் பொருளை நிரப்பினால் அஸ்திவாரமும் கரையும்.
- பொதுவாக மௌனி, சாது என்பவர் பேசமாட்டார்.
- பேசாதவர் மனத்தில் பேசிக் கொண்டிருப்பார்.
- அவர் பேசுவதை நிறுத்தினால் எண்ணம் எழுந்து பேசும்.
- எண்ணத்தை நம்பாவிட்டால், நம்பிச் செயல்படாவிட்டால் எண்ணம் மௌனத்தால் கரையும்.
- எண்ணம் உணர்வால் நம்பிக்கையாகி இருப்பதால் அப்பொழுதும் அஸ்திவாரம் கரையாது.
- எண்ணத்தைச் செயலுக்கு நம்புகிறோம். அதைக் கடந்து எண்ணத்தை எண்ணமாக நம்புகிறோம்.
- அது கரைய மௌனம் மனத்தின் பொருளை நிரப்ப வேண்டும்.
- ஆரம்பம் (initiative) என்பது எண்ணத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது.
- அதை இழப்பது அகந்தை கரைவது.
******
II/73) ஆரம்பத்தை இழக்கும் நிலையை மௌனம் ஏற்படுத்தும். ஆனால் சக்தியைச் சைத்திய புருஷனிடம் அனுப்ப அதனால் இயலாது. அது சமர்ப்பணம், ஆர்வத்தால் பூர்த்தியாவது.
- ஆரம்பத்தை இழந்த பின்னும் சமர்ப்பணம் தேவை.
- மனிதனுடைய சரணாகதி பூர்த்தியான பின்னும், கருவி, வேலையைச் செய்பவன் (instrument, worker) இருக்கும் என்கிறார் பகவான்.
- வீட்டை இடித்து அப்புறப்படுத்திய பின் அஸ்திவாரம் பூமியிலிருக்கும்.
- நான் எனும் முனைப்பு அகந்தை, கருவி, வேலைக்குரியவன் என்ற உருவில் இருக்கும்.
- ஆங்கிலேயன் போனபின் ஆங்கிலேய ஆபீசர்களிருந்தனர்.
- அதுவும் போனபின் இன்றுவரை அவன் நிர்வாகம் இருக்கிறது.
- ஒரு அமைப்பு மாறும் பொழுது பெரும்பாலும் மாறும், அனைத்தும் மாறாது.
- திருவுருமாற்றம் பொறாமையைப் பேருதவியாக்குவதால் அடியில் தங்க எதுவுமில்லை.
- (Initiative) ஆரம்பம் என்பது யுகம் யுகமாக நம்முள் தயாரானது.
- சக்தி உடலிலும், உயிரிலும், மனத்திலும் சேர்கிறது.
- சேர்ந்தது முழுமையானால் (saturated) அதற்கு முனைப்பு எழும்.
- முனைப்புக்கு முழு உருவம் தருவது ஆரம்பம்.
- இளைஞர்கள் ஓர் ஊரில் எது செய்ய ஆரம்பித்தாலும், பெரியவர்கள் எதையும் மாற்றாதே, எதையும் புதியதாக ஆரம்பிக்காதே எனக் கூறுவார்கள்.
- புதியன செய்தல் புரட்சி செய்தல்.
- காசு சம்பாதித்தவனால் சும்மாயிருக்க முடியாது, கல்யாணம் செய்வான், அதிகப் பணமிருந்தால் வீடு கட்டுவான், ஏராளமாக இருந்தால், எலக்ஷனில் நிற்பான்.
- அணு ஆயுதங்களைப் பற்றி அன்னை பேசியபொழுது அவையிருந்தால் உபயோகப்படுத்தும்படி தூண்டும் என்றார்.
- நாலு பேர் பேசும் விஷயத்தில் நமக்குப் படிப்பு, தெளிவு இருந்தால், அவர்கள் அறியாததை நாம் கூற விரும்புவோம்.
- அதைத் தடை செய்வது இயலாத காரியம்.
- அப்படி ஒருவர் வென்றால், அந்த எண்ணம் பசுமையாக ஜீவனோடு எந்த நேரமும் மனதிலிருக்கும்.
- மேடைப் பேச்சாகவோ, கட்டுரையாகவோ, பிறரிடமோ அது வெளிவரத் துடிக்கும்.
- சமர்ப்பணத்தின் சிறப்பை அறிய அதுபோன்ற உந்துதலை சமர்ப்பணம் செய்து பார்ப்பது தெரிவிக்கும்.
- மௌனம் மகத்தானது.
- பெரும்பாலும் தானே மேலிருந்து நம்முள் வருவது.
- மௌனம் குடிகொண்டால் ஆரம்பம் முனை மழுங்கும்.
- மௌனம் கலைந்தபின், மீண்டும் வெளிவர முயலும்.
- ஆரம்பத்தின் அஸ்திவாரத்தை மௌனத்தின் ஆழம் தொட்டால், ஆரம்பம் கரைவது தெரியும்.
- கரையாத ஆரம்பம் இருக்கும்வரை சமர்ப்பணம் தேவை.
- விக்காம் போக்கடா என்று டார்சி கடிதம் கூறியதை எலிசபெத் ஏற்றாள்.
- ஏற்றவுடன் அவன்மீது இருந்த ஆசை, ஆர்வம், பரிவு அப்படியே மறந்துவிட்டது.
- அவனை மனம் மறந்துவிட்டது.
- உணர்வு மனத்தைவிட ஆழத்திலிருப்பது.
- உணர்வு அறிவை ஏற்காது.
- லிடியாவால் குடும்பத்தைச் சர்வ நாசம் செய்த பின்னும் அவன் மீது அவளுக்கு அனுதாபமிருந்தது.
- தன் சிறுவாட்டுக் காசிலிருந்து அவனுக்காக லிடியாவுக்குத் தவறாது பணம் அனுப்புவாள்.
- மரத்தை வெட்டியபின் அடிமரம் நிற்கும்.
- அதையும் வெட்டி எடுத்தபின் ஆணிவேர் ஆழ்ந்திருக்கும்.
- கிளைகளை வெட்டியதால் மரம் அழிந்தது உண்மையானாலும், மரம் உற்பத்தியான வரலாற்றைக் கருதினால், கிளைகள், அடிமரம், ஆணிவேர் என ஒன்றன்கீழ் ஒன்றாக அடுத்த அடுத்த நிலைகள் ஏற்படும்.
தொடரும்....
*******
- Login to post comments