06. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
51. தீமையை முழுமையாகக் காணும் திறன் - சிருஷ்டியின் ஒருமை.
- இது தெய்வங்கட்குரிய திறன். அவர்களையும் சில சமயம் கடந்தது என்று கூறலாம்.
- தெய்வங்கள் தீமையை அழித்துள்ளதால், அவர்கள் அதை நன்மையாகக் காணவில்லை என்று அறிகிறோம்.
- அன்னை கடலோரம் உள்ள ஆசிரம தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
- ஒரு கருநாகம் அவரை நோக்கி விரைந்து வந்தது.
- உடனிருந்த சாதகர்கள் ஓடிவிட்டனர்.
- அன்னை நகரவில்லை.
- நாகம் அருகில் வந்தது.
- அன்னை சிரித்து, "என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
- நாகம் படமெடுத்துத் தரையில் படத்தால் அடித்துவிட்டு, வேகமாகத் திரும்பியது.
- "எனக்கு வணக்கம் சொல்ல வந்தது'' என்றார் அன்னை.
- அன்னைக்கு நாகம் விஷமல்ல, தீமையல்ல, பயப்படுவதில்லை.
அன்னையை நாகம் அறிந்தது. நாகத்தை அன்னை அறிவார். - தீமை நன்மையின் பழுத்த ரூபம் நன்மையைக் காவலாகச் சூழ்வது என்று The Life Divine கூறுகிறது.
- பகவான் கூறுவதால் ஏற்றுக் கொள்ளலாம், நம் அறிவுக்கு எட்டாது.
- சண்டி செய்யும் குழந்தையின் மீது தாய்க்குள்ளது அன்பு.
- குழந்தை பள்ளிக்கூடம் போக, மருந்து சாப்பிட, சாப்பாடு சாப்பிட மறுக்கிறது.
- தாயின் சாதுர்யம் குழந்தையிடம் பலிக்கவில்லை.
- தனக்குக் குழந்தை மேலுள்ள அன்பை, குழந்தை நலனைத் தாய் காப்பாற்ற வேண்டும்.
- குழந்தையைக் கண்டிக்கிறாள், பலனில்லை.
- குழந்தையைக் கடுமையாக அடிக்கிறாள்.
- தாயின் அன்பு நன்மை.
- அடிப்பது தீமை.
- அன்பு கனிந்து, அன்பின் பலனாக உயர்ந்த கல்வியை பாதுகாக்க அரணாக அமைவது தாயின் கொடுமை.
- நன்மையின் சிறப்பு அரணாக நன்மையைக் காக்கும் திறன், தீமை.
- ஒரு சிறிய அளவில் டார்சி "பரவாயில்லை'' எனக் கூறியதை எலிசபெத் விளையாட்டாக எடுத்துக் கொண்டதில் காணலாம்.
- அதே சந்தர்ப்பத்தில் வேறொரு பெண்ணிற்கு எரிச்சல் பொங்கி வரும்.
- ஆண் பெண் முன் மண்டியிட்டுப் பேசும் நாடு அது.
- பெண்கள் உள்ளே வந்தால் அனைத்து ஆண்களும் எழுந்து மரியாதை செய்வார்கள்.
- மனைவி பெண் என்பதால் அவள் செய்வது தவறு எனக் கூறுவது அநாகரிகம் என்பது அந்த நாட்டு நாகரிகம்.
- ஒரு பெண்ணை உயர்வாக அவளிடம் பேசுவது மரியாதை. உயர்வாகப் பேச மறுப்பது அநாகரிகம்.
- பரவாயில்லை என்பது, அவள் காதுபடப் பேசுவது மன்னிக்க முடியாத கொடுமை.
- எலிசபெத் அதைப் பொருட்படுத்தவில்லை. கேலியாக எடுத்துக் கொண்டாள்.
- அதன் பலனிரண்டு. (1) அவனை வாயாரத் திட்டினாள், (2)பெம்பர்லிக்குத் தலைவியானாள்.
தொடரும்.....
********
ஸ்ரீ அரவிந்த சுடர் சொல்லி நடக்காதது மௌனத்தால் நடக்கும். மௌனத்தாலும் நடக்காதது மௌனமான செயலால் நடக்கும். சமர்ப்பணமும் சரணாகதியும் அவற்றைக் கடந்தவை. முடிவில்லாத பொறுமையின் முடிவு யோகம். |
******
ஸ்ரீ அரவிந்த சுடர் மூலத்தை அறியாமல், எல்லாப் பகுதிகளையும் அறிவதால் ஞானம் பெற முடியாது. மூலம் தெரிந்தவுடன் பகுதிகள் தெளிவு பெறும். மூலம் ஞானம் தரும். மூலமின்றி முழுமையில்லை. விபரம் தெரிவதால் மட்டும் விஷயம் தெரியாது. |
********
- Login to post comments