Skip to Content

08. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஐயா,

கடந்த மாத வாக்கில், எனது வங்கி பணியில், எனது கவன குறைவு காரணமாக ஓர் தவறு ஏற்பட்டது. உரியவருக்கு சேர வேண்டிய ஓர் பெரும் தொகை, மற்றொருவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. அத்தொகை எவ்வித சிரமமும் இன்றி கிடைக்க அன்னையிடம் வேண்டிக்கொள்ளுமாறு தங்களுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு தங்களிடம் இருந்து பதிலும் வந்தது. நமது பிரார்த்தனையின் பலனாக அன்னையின் அருளினால் அத்தொகை ஓர் பைசா இழப்பின்றி திரும்பி வந்து உரியவரிடமும் சேர்க்கப்பட்டுவிட்டது. எனது நன்றியை அன்னையிடம் சமர்ப்பிக்க வேண்டி ஓர் சிறு தொகையை காணிக்கையாக அன்னையின் திருபாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

-- N.தனக்கோடி, அம்மாசத்திரம்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆசையைத் திருவுருமாற்ற சிறந்த நேரம் அடக்க முடியாத ஆசை பீறிட்டெழும் இளமையாகும்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை, சிருஷ்டியைத் தழுவியவை. அந்த அளவு விசாலமான புத்திக்கே விளங்கும்.
 
சிருஷ்டியைத் தேடுபவர்க்கு ஸ்ரீ அரவிந்தம் புரியும்.
 
 
******



book | by Dr. Radut