Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

எது ஆயிரம் முறை மனத்தை அரிக்கின்றதோ அதன்பின் ஆண்டவன் உள்ளான். அரிப்பதை அகற்றினால் அன்னை தரிசனம் தருவார்.

ஆயிரமாண்டை அரை நிமிடமாக்கும் அன்னையை அழைக்க மனம் வருவதில்லை. நினைவும் வருவதில்லை. அழைக்க நினைப்பதே அருள்.

வெறும் மனிதன் காண்பது எண்ணவோட்டம். சிந்திப்பவன் காண்பது சிந்தனை. சிந்தனை நின்றால் அகந்தை தெரியும். அகந்தையைக் கடந்தால் ஆன்மா தெரியும்.

ஆன்மா அதே நிமிடம் முடிக்கும். அவசரம் ஆன்மா அறியாதது. அடுத்த நிமிடம் ஆன்மா அறியாதது.

 

*****



book | by Dr. Radut