Skip to Content

05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • எந்தக் கெட்டதும் - அல்பம், கருமித்தனம், கோபம், etc.. பர்சனாலிட்டியைச் சிறியதாக்கும்.

    நல்லதும் கெட்டதும் கலக்கும்பொழுது பலன் எப்படி மாறுகிறது என அனுபவத்தில் பார்க்க வேண்டும்.

சில சட்டங்கள்:

  1. கெட்டதைமீறி நல்லது பலிக்கும். நல்லது அதிகமானால் அப்படியிருக்கும்.
  2. கெட்டது அதிகமானால் நல்லதைமீறி காரியம் கெடும்.
  3. நல்லதோ, கெட்டதோ அளவுக்குத் தகுந்தவாறு (proportionate) பலன் தரும்.
  4. ஆயிரம் கெட்டதைமீறி ஒரு நல்லது பலன் தரும்.
  5. ஆயிரம் நல்லதைமீறி ஒரு கெட்டது கெடுக்கும்.
  6. திறமை அதன் அளவுக்கு (proportionate) பலன் தரும்.
  7. Values - கற்பு, விஸ்வாசம், மானம் - பூரணமானால்தான் 100% இருந்தால்தான் பலன் தரும்.
  8. நம் வாழ்வில் பலன் செய்த அளவுக்குண்டு.
  9. நமக்கு உயர்ந்த நிலையில் பலன் பெற 100% சுத்தம் தேவை.
  10. நாம் 8 லெவல் வழியாக உயருகிறோம். எட்டாவது அன்னை.
    அங்கு, சிறிய முயற்சிக்குப் பிரம்மாண்டமான பெரிய பலனுண்டு. சிறு தவறுக்குப் பெருநஷ்டம் வரும்.
    அனுபவம் முடிவானது.
    அதுவும் அறிவைப் பொருத்தது.
    நம்பிக்கையும் மூடநம்பிக்கையாக இருக்கும்.
    அடி மடத்தனமும் அற்புதமான பலனைத் தரும்.
    இவற்றிலும் அடிப்படைச் சட்டங்கள் மாறா. 
  1. இது உள்மனத்தின் ஆழ்ந்த பகுதி - Substance - ரிஷிக்குரியது.
    இது பெரும்பலன் தரும். பெருமுயற்சிக்குப் பெரும்பலன்.
    கர்மம் கரையும் நிலையிது. எதுவும் க்ஷணத்தில் நடக்கும்.
    இது போன்றவை நம் வாழ்வில் நடந்தவை மறந்து போகும்.
    இப்பொழுது நடப்பது கண்ணில் படாது.
    சேல்ஸ்மேன் 1500ரூபாய் சம்பளம் பெற்றவன், MLA ஆகிவிட்டான்.
  2. அடிமனம் - அதன் மேற் பகுதி Consciousness.
    ஒன்று 100ஆகும் நிலை. அகந்தை அழிந்த நிலை. சிந்தனை நின்று மெய் மறந்து செயல்படும் நிலை. மெய்மறந்து லயத்திலிருப்பது 4ஆம் நிலை. மெய்மறந்து செயல்படுவது 5ஆம் நிலை.
    • உலகம் பாராட்டும் நிலை.
    • (Causeless joy), காரணமில்லாமல் வரும் சந்தோஷம்.
    • ஆழ்ந்த வருத்தத்தை உயர்ந்த சந்தோஷமாக்கும் திறன்.

    பெரிய கேஸைத் தோற்ற அன்பர் அன்று இரவில் பல முறை எழுந்து உட்கார்ந்து வாய்விட்டுச் சிரித்தார். முடிவாக அவருக்குப் பூரண வெற்றி கிடைத்தது.

    எல்லோருடைய வாழ்விலும் ஓரளவு நடந்திருக்கும். மறந்து போய்விடும்.

  3. அடிமனம் - ஆழ்ந்த பகுதி - Substance.
    மனம் உலகம் முழுவதும் பரவும்.
    நமக்கு நடந்தது அனைவருக்கும் நடப்பது எல்லா அன்பர்கட்கும் உண்டு. இது பெரிய நிலை. இதை நம் வாழ்வுக்குப் பயன்படுத்த கட்டுப்பாடு (discipline) தேவை.
  4. கிருஷ்ணபரமாத்மா, ஸ்ரீ அரவிந்தர் நிலை.
    & இந்நிலைகளும் நம் வாழ்வைத் தொடுவதுண்டு.
  5. இப்படி நல்லது நடந்தால் மேலே பூச்சி விழுவதை உதறுவதுபோல் உதறிவிடுகிறோம்.
    நடந்தவற்றை நினைவுபடுத்தி இப்பொழுது பாராட்ட வேண்டும்.
    அன்பர்கள் (Devotees) வாழ்வில் இது போன்றவை நடக்காமலிருக்காது.
    ஒரு விஷயத்தை நினைவுபடுத்தி உயிர்ப்பித்தால் புதுவாழ்வு பிறக்கும்.

    அனுபவம் அறிவாக மாறுவது திறமை பலன் தருவது.
    நடந்ததை நடந்ததாக அறிவது அறியாமை.
    நடந்த நல்லதும், கெட்டதும், நல்லதுஎன்பது ஞானம்.
    அது ஒரு விஷயத்தில் இப்பொழுது நினைவு வந்து மாறுவது அதிர்ஷ்டம்.
    அப்படி அனைத்தையும் மாற்றும் திறன் அருள்.
    அருள் பெற்று, 7, 8 நிலையைச் சற்று அடைவது அருளைப் பேரருளாக மாற்றுவது.

    10,000 ரூபாய் வசூல் செய்ய நினைத்ததைப் பெறவேண்டியவர் கேலி செய்தார். கேலி செய்தால் பலிக்காது. கேலியைமீறிப் பலிப்பது அருளன்று; பேரருள். அது 20,000 ரூபாயானது பேரருள் பெருகுவது. அது 2 லட்சமானது ஆசிரமச் சாதகர் வாழ்வில் கேட்டறியாதது.

    • பணம் சாதிக்காததை மனம் சாதிக்கும்.
    • மனம் சாதிக்க முடியாததை மனத்தின் மணம் சாதிக்கும்.
    • பிறரை மனம் ஏற்காது, ஏற்றால் போற்றாது. பிறரை ஏற்றுப் போற்றிப் பாராட்டினால் அது தனக்காக இருக்கும். பிறரைப் பிறருக்காக ஏற்றுப் போற்றிப் பாராட்டி மகிழ்வது மனித சுபாவத்திலில்லை. அதைச் செய்யும் கணவனும், மனைவியும், பெற்றோரும், பிள்ளைகளும் “எங்கள் குடும்பத்தை” எளிதாக்குவர்.
  • அன்னை ஒரு சூட்சும ஸ்தாபனம்
    (Mother is an institution)
    • வீட்டைவிட்டு வெளியேறிய பையனை நாம் கண்டுபிடிக்க முடியாது.
      போலீஸ் எல்லா ஊர்களிலுமிருப்பதால் - அது ஒரு ஸ்தாபனம் - அவர்களால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
      அன்னையெனும் ஸ்தாபனம் உலகெங்கும் உள்ளது.
      அது சூட்சுமத்திலும் உள்ளது.
      பிரபஞ்ச முழுவதும் உண்டு.
      தலைமைஆபீஸ் - மதர் - பெறும் செய்தி ஸ்தாபனம் முழுவதும் பரவும்.
      போலீஸூக்கு நேரம் தேவை.
      அன்னைக்கு (Internet போல) நேரம் தேவையில்லை.
      காணாமற் போனதைக் கண்டுபிடிப்பதுமட்டும் போலீஸ் வேலை.
      நியூயார்க்கில் உள்ள பொருளை வாங்க போலீஸ் உதவாது.
      அமேஸான் (Amazon) கம்பெனி உலகில் எங்கும் உள்ள புத்தகம் வாங்க உதவும்.
      அன்னை எங்குள்ள எந்த வேலை செய்யவும் உதவுவார்.
      இல்லாததை உற்பத்தி செய்ய உதவுவார்.
      பிள்ளை ராமானுஜமாக அதே அன்னைஸ்தாபனம் உதவும்.
      திறமையை ஏற்படுத்த இந்த ஸ்தாபனம் உதவும்.
      அதற்குரிய விண்ணப்பத்தைப் (application) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
      நம் அறிவு, அனுபவம், கற்பனை, கற்பனைக் கருவூலத்திற்கு எட்டிய எதையும் பூர்த்தி செய்ய அன்னை செயல்படுவார்.
      எட்டாதது முடியவும் அன்னை செயல்படுவார்.

      இதைத் தத்துவமான முறையில் அறியலாம்.
      அனுபவமாக அறியலாம்.
      தத்துவத்தைப் போதிக்கும் அனுபவமாக அறியலாம்.
      அறிவு வெளிப்படும் அனுபவமாகக் காணலாம்.
      காண விரும்புவது அதிர்ஷ்டம், காண்பது அருள்.
      அது வாழ்வில் அன்னையை அறிதல்.
      புரியாத எதுவும், புரிய முடியாத எதுவும் புரிவதைப் பார்க்கலாம்.
      அது மனத்தில் அன்னையைக் காண்பது.
      ஆத்மாவில் அறிவதுஎன்பது இதுவரை எவரும் பெறாத ஆன்மீக அனுபவம் பெற அன்னைஸ்தாபனம் உதவும்.
      Westerners are physical. மேல் நாட்டார் உடலால் வாழ்பவர்.
      Indians are spiritual. இந்தியருக்கு ஆன்மீகம் உண்டு.
      புளகாங்கிதம் ஆன்மீகத்தின் (spirituality) முடிவான கட்டம்.
      அது இந்தியருக்குண்டு.
      அது உள்ளவருக்கு அவர் அதைப் பாராட்டினால் இல்லாதது இல்லை.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கண்டு பிடித்தால் சந்தோஷம். சிக்கலாக மறைந்தால் சந்தோஷம் அதிகமாகும். தன்னை மறந்து தனக்கெதிரான ஜீவியத்தில் விழுங்கப்படுவதே அதிகபட்சமாக மறைவதாகும் என்பதால் அங்கு தன்னைக் கண்டு கொள்வது அதிகபட்ச ஆனந்தமாகும்.
 
மறைந்து மறப்பதே லீலையின் ஆனந்தம்.

*****



book | by Dr. Radut