Skip to Content

06.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

குழந்தை தானே வளர்வது போல் சமூகம் தானே வளர்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்குச் சாப்பாடு, கவனம், காற்று என்பவை துணை செய்கின்றன. அதேபோல் சமூகம் தானே வளர்கிறது. டெக்னாலஜி, மூலதனம், கனிப்பொருள்கள், பணம், போக்குவரத்து என்பவை துணை செய்பவை. சமூக வளர்ச்சியில் பொருளாதார வளர்ச்சி ஒன்று. தானே வளராத சமூகத்திற்குப் பணமோ, டெக்னாலஜியோ, மற்ற எதுவோ பயன் தாராது. சமூகத்தின் வளர்ச்சி தன்னிச்சையாக வளர்வது.

சமூகத்தின் வளர்ச்சியைப் பல கோணங்களில் பார்க்கலாம் என்றாலும், பண்பால் சமூகம் வளர்வதைக் கருதுவோம். பண வளர்ச்சியே நம் கருத்து, சமூகமன்று. மனித வாழ்வு சௌகரியமாவது சமூக வளர்ச்சி. மனிதனுக்கு வசதியும் சௌகரியமும் வருகின்றன. இது சமூகத்தின் நல்லெண்ணம். மனிதன் வசதியாக வாழவேண்டும், நீண்ட ஆயுளுடனிருக்கவேண்டும், சுத்தமான சூழ்நிலையில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், பற்றாக்குறையால் பதறக்கூடாது, படிப்பறிவு பெறவேண்டும் என்பது சமூகத்தின் நல்லெண்ணம். இதன் பிறகு சமூகம் அவனுக்கு அதிக வசதி தரும்பொழுது குறைந்த விலைக்குத் தருகிறது. இன்றைய சமூகத்தின் நல்லெண்ணம் மனிதனுக்கு மலிவுப் பொருளாக வருகிறது. நாம் வாங்கும் பொருள் அதிக வசதி தருவதாகவும், குறைந்த விலையுள்ளதாகவுமிருக்கின்றது. கம்ப்யூட்டரிலும், தினசரி பேப்பரிலும் இதைத் தெளிவாகக் காணலாம். மக்கள் செலவைக் குறைத்து அதிக வசதி பெறுவதால் பணம் உபரியாக அவர்கள் கையிலிருக்கின்றது. ஏராளமாகப் பணம் மக்கள் கையிலும், பாங்க்களிலும், கம்பனிகளிலுமிருப்பதால் வட்டி குறைகிறது. இந்தியாவில் டெபாசிட் போட்டால் 12% வட்டி கிடைக்கும். ஐரோப்பா, அமெரிக்காவில் 3%, 3½% தான் கிடைக்கும். ஜப்பானில் 0% வட்டி. அனைவரும் இதை அறிந்தாலும் சமூகக் கண்ணோட்டத்தில் இதன் காரணம் எவருக்கும் விளங்கவில்லை.

இதை நான் maturity சமூகம் முதிர்ச்சியடைந்தது என்று கூறுகிறேன். இக்கட்டத்திற்குப்பின் பணம் தானே பெருகும் (self-multiply). வேரூன்றிய செடி இனி எவரும் நீர்ப் பாய்ச்சாமல் தானே வளர்வதுபோல் இக்கட்டத்திற்குப் பிறகு பணம் தானே வேறு உதவியோ, காரணமோயில்லாமல் பெருகும்.

இன்று சமூகம் பெறும் திறன் நாளை தனி மனிதனுக்கு வரும்.

மனிதன் தன்னிடம் உள்ள பணத்தை தானே பெருக்கிக்கொள்ள முடியும் என்ற திறன் பெறுவான். அது நடக்க நாளாகும். ஓர் ஆசிரியர் எழுதும் புத்தகம் பிரசுரமானால் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கு இடைவெளியுண்டு. ஆசிரியருடைய நண்பருக்கு, பிரசுரத்திற்கு முன்பே பிரதி கிடைக்க முடியும். சமூகம் இன்று பெற்ற திறனை - பணம் தானே பெருகும் திறனை - மனிதன் இன்றே பெற வழியுண்டு. அதற்கு மனிதன் சமூகத்தை எட்டவேண்டும், இத்திறனுடைய மூலத்தை எட்டித் தொடவேண்டும்.

  • நல்லெண்ணத்தால் சமூகம் தன் பணத்தைத் தானே பெருக்கிக் கொள்கிறது.
  • நல்லெண்ணமுள்ள மனிதன் சமூகத்தை இவ்விஷயத்தில் தொடமுடியும். அதன்மூலம் இத்திறனைப் பெறமுடியும்.

மனிதன் நல்லெண்ணம் பெறுவதுடன், தானே அவனுள் நல்லெண்ணம் பெருகும் மனநிலையை அடையவேண்டும். அதன்மூலம் சமூகம் பெற்ற திறன் அவனுக்கு அவனுடைய சொந்தத் திறனாக வரும்.

கிராமப்புற வாழ்வையும் பம்பாய்போல் பெருநகர வாழ்வையும் எடுத்துப் பார்ப்போம். கிராமத்திலும், பம்பாயிலும் ஒரே திறனுடையவர் ஒரே வேலையைச் செய்வதானால் இங்கு 10 பேர் வேலை செய்தால், அங்கும் பத்து பேர் வேலை செய்தால் வித்தியாசம் (values) பண்புகள். செய்பவருடைய திறமை சமம். பண்புகள் இங்கு கிராமப்புறப் பண்புகள். அங்கு பம்பாய்க்குரியது. பலன் வரும்பொழுது நகரத்தில் 5 அல்லது 10 மடங்கு அதிகப் பலன் பணமாக வரும். அவ்வதிக வருமானம் பண்புகள் சம்பாதித்தது.

பண்புகள் பணத்தை ஈட்டும் என்பதை ஏற்பது சிரமமில்லை. ஒரே படிப்பு, வயது, திறமை, சந்தர்ப்பமுள்ள இருவர் பண்பால் மாறுபட்டிருந்தால் அவர்கள் சாதனைகள் அதிகமாக மாறுபட்டிருக்கும். அதைப் பணமாகவும் கணக்கிடலாம். அந்த வித்தியாசம் பண்புக்குரியது.

 பண்பில்லாமல் செயலில்லை.

நல்லதோ, கெட்டதோ செயலுக்குப் பண்புண்டு.

மேற்சொன்ன உதாரணத்தில் மாறுபடுபவை punctuality சுத்தம், நியாய விலை, பேரம் பேசாதது, குறித்த நேரத்தில் கொடுப்பது, நாணயம், இனிமை, பாதுகாப்பு, பிறர்நோக்கு ஆகியவை.

ஓர் இடத்தில் தலைக்கு மாதம் ரூ.2000/- வந்தால் அடுத்த இடத்தில் ரூ.20,000/- வருகிறது. பண்புகள் 10 மடங்கு சம்பாதிக்கும் எனக்கூற இவ்வுதாரணம் உதவும். அன்னையை அழைப்பது அன்னையைப் பொதுவாக ஏற்பது. அன்னையின் பண்புகளை ஏற்பது, ஒவ்வொரு வேலையிலும் ஏற்பது நாம் அதிகபட்சம் அன்னையைப் பெறுவதாகும். அன்னைக்கு முக்கியமான பண்புகள் நிதானம், இனிமை, பொறுமை, தெளிவு, பிறர்நோக்கு போன்றவை.

பண்புகள் இரு முனையில் செயல்படுவதாக (double opening) யோக பாஷையில் கூறலாம். மேலே போவது சிறப்பு, அளவு, பரப்பு ஆகியவற்றை வளர்க்கும். மனத்தின் வளர்ச்சியைக் கீழே போகும்போது உடலுக்கும், உணர்வுக்கும் தருவது அடுத்தது.

தன் பணத்தைத் தானே பெருக்கிக்கொள்ள முன்னோடியாக ஒருவர் கற்றுக்கொண்டால், அது அவருக்குப் பெரிய பலன் தரும். ஆர்ட்டீஷியன் கிணறுபோல தானே பெருகுவது தடை செய்யாமல் பெருகும். ஒரு விதை ஓராயிரம் விதையைத் தருவதைப் போல் அது பெருகும். தானே பெருக ஆரம்பித்தபின் அதற்கு வெளியுதவி தேவையில்லை. தானே வேரூன்றி, பலன் தரும்.

மொழி குழந்தை பிறந்தவுடன் பிறப்பதில்லை. குழந்தை நெடுநாள் பேச்சைக் கேட்கிறது. ஒரு நாள் பேச ஆரம்பிக்கிறது. சில சொற்கள், பிறகு மொழியாகின்றன. மனிதன் வளர்ந்தபின் சிலர் பேச்சாளராகின்றனர். எண்ணம் உள்ளே சேர்ந்தால் பேச்சாக வெளிவரும். சக்தி, திறமை, நம்பிக்கை மனதில் சேர்ந்தால், பணமாக வாழ்வில் வெளிப்படும்.

பணம் ஒரு பொருளன்று. அது ஒரு சின்னம். நம்பிக்கையின் சின்னம். பிறரை நம்புவது, பரஸ்பர நம்பிக்கை, சமூகத்தையும், அதன் ஸ்தாபனங்களையும் நம்புவது, பொதுவாக மனித மனத்திலுள்ள நல்லெண்ணத்தை நம்புவது ஆகியவை நம்பிக்கையின் உருவங்கள்.

இன்று கொலை நடக்கிறது, கொள்ளையடிக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், பிரயாணத்தில் ஆபத்து வருகிறது. புயல், பூகம்பம் வந்தால் சமூகம் உதவுகிறது. இக்கொடுமைகள் குறைந்து வருகின்றன. ஒரு நாள் மனித வாழ்வில் சூறையாடுவதும், கொலையும், கொள்ளையாகவுமிருந்தது. அது மாறி நாகரீகம் வந்தும் அப்பழைய பழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. சமூகம் வளர்ந்து மாறி தன் நல்லெண்ணத்தைப் பிரவாகமாக மனிதனுக்குக் கொடுப்பதை அன்று ஒரு நாள் உலகம் எப்படியிருந்தது, இன்று எப்படி மாறியுள்ளோம் என மேற்சொன்னவை காட்டுகின்றன. இராணுவம் எல்லையைப் பாதுகாக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது. இவை சமூகத்தின் நல்லெண்ணத்தால் நடப்பவை. உடல்நலத்தையும் கல்வியையும் கட்டாயமாக சமூகம் நமக்குத் தருகின்றது. இன்ஷூரன்ஸும், பென்ஷனும் சமூகத்தை நம்பலாம் என்பதற்குரிய சின்னங்கள். நம்பிக்கைக்கு ஓர் அளவுகோலிருந்தால், ஆயிரம் மடங்கு நம்பிக்கை வளர்ந்துள்ளதைக் காட்டும். இந்த நம்பிக்கை பணம். முடிவில்லாத வழிகள் மூலம் முடிவில்லாத வளர்ச்சி பணத்திற்குரியது.

 தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

தாழ்வில் உள்ள உயர்வைக் காணுவது மனிதனின் பெருந்தன்மை. அத்துடன் உயர்வோடு சேர்ந்து உயர விரும்புவது இயற்கை.

 தாழ்ந்ததின் உயர்வைக் கண்டும், உயர்ந்ததின் உயர்வை ஏற்றும் உயரலாம்.

*****

Comments

அபரிமிதமான செல்வம்para 2,

அபரிமிதமான செல்வம்

para 2, line 10 - விலையுள்ளதாகவு மிருக்கின்றது. -

                    விலையுள்ளதாகவுமிருக்கின்றது.

do.      line  13 - கையிliருக்கின்றது. - கையிலிருக்கின்றது.

do.  6, do.   4 - (values)பண்புகள். - (values) பண்புகள்.

do. 10, do.  4 - from தன் பணத்தைத் தானே to தானே வேரூன்றி, பலன்  தரும் - separate paragraph.

para 13, line 12 - அளவுகோருந்தால், - அளவுலிகோருந்தால்,

 

 

 



book | by Dr. Radut