13.வேலை
வேலை
வேலையில்லாதவர் அன்னையிடம் வந்து வேலை பெற்றால், அது போகாது. வேலைக்கு எதிரான காரியங்களை விருப்பமாகச் செய்பவர்கட்கே அப்படி வரும். அவர்களாக மாறும்வரை அதற்குக் கதி மோட்சமில்லை.
அன்னை பக்தர்கட்கு வேலை போகாது. நாட்டு நிலைமை மாறி வேலை போகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் முடிவில் அன்னையும், அருளும் செயல்பட்டது தெரியும்.
இன்ஜினியரின் தாயார் சொன்ன அனுபவம் :
"என் மகன் ராம்கோவில் இன்ஜினியராக இருக்கிறான். அவனுக்கு இலண்டன் போகும் வாய்ப்பு வந்தது. அதற்கு முன் இருமுறை மலேசியா புராஜக்ட் விஷயமாகப் போனபொழுது நல்ல பெயர். இரண்டு மாதத்திற்கு முன் softwareஇல் நெருக்கடி ஏற்பட்டு இளம் இன்ஜினியர்களை வேலை நீக்கம் செய்யும்படியான சூழல் வந்துள்ளது. என் மகனுக்கும் அதே நிலை. அவனைத் தியான மையம் போய்ப் பிரார்த்திக்கச் சொன்னேன். அவன் போனதாகத் தெரியவில்லை. நான் மகனுக்காகப் பிரார்த்தனை செய்தேன். இரண்டு மாதம் கழித்து என் மகனை வேறொரு பிராஞ்சில் போட்டு ரூ.2000 சம்பள உயர்வு கொடுத்தனர்!''
****
- Login to post comments
Comments
வேலைAfter para 3, line 3 -
வேலை
After para 3, line 3 - முன்softwareஇல் - முன் softwareஇல்