Skip to Content

12.சமாதி புஷ்பம்

சமாதி புஷ்பம்

       சமாதி புஷ்பம் ஒரு இதழ் கிடைப்பது அருள். அது உயிரைக் காப்பாற்றியதை நாம் அறிவோம். Blessing packet பிளசிங் பாக்கட்டில் வருவது ஓர் இதழ். ஓர் இதழும் அற்புதத்தை நிகழ்த்தும். ஒரு கூடை சமாதி புஷ்பம் கொண்டு வந்தேன், பலனில்லையே என்பதும் ஓர் அனுபவம். மனம் சமாதி புஷ்பத்தின் சக்தியை நிர்ணயிக்கிறது. முதல் மந்திரிக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு. "நான் முதல் மந்திரியை 30 வருஷமாக அறிவேன். எனக்கு எதுவும் இல்லை'' என்பதும் ஓர் அனுபவம்.

 சக்தி ஏராளம். பெறுவது பக்தியைப் பொருத்தது.

       பந்த் நம் நாட்டில் எப்பொழுது வரும், எந்த அளவில் வரும் என்பது நிர்ணயமில்லை. நாள் முழுவதும் உண்டு. 6 மணிக்கு முடியும் பந்த் உண்டு. மோட்டார் பைக்கை அனுமதிப்பது உண்டு. கார் போகலாம் என்ற பந்த் உண்டு. எது, எந்த பந்தில் எப்படி அனுமதிக்கப்படும் என்பது நிலைமையைப் பொருத்தது. பக்தர் புஷ்பம் கொண்டு போக புதுவை வந்தபின் பந்த் அறிவிக்கப்பட்டது. தியான மையத்திற்குப் புஷ்பம் போக வேண்டும். மையத்தின் சக்தி, அன்பரின் பக்தி, புஷ்பத்தின் மகிமை எது செயல்படும் என்பதை நிர்ணயிக்கும் நேரம்.

- வந்தவர் பக்தியால் உருகும் பக்தர்.

- பந்த் என்பதால் பஸ் இல்லை. பிரைவேட் கார் அனுமதிக்கப்படும் என்பது நிலை.

- புஷ்பத்திற்காக டாக்ஸி போவது அதிகச் செலவு. டாக்ஸி போகுமா என்பதும் தெரியவில்லை.

- ஏர் போர்ட்டுக்குக் கார் போகவேண்டும் என்ற செய்தி வந்தது. பக்தரும், புஷ்பமும் மையம் போய்ச் சேர்ந்தனர்.

****



book | by Dr. Radut