Skip to Content

14.பிரகாசமான முகம்

 பிரகாசமான முகம்

      “முகத்திற்கு ½அங்குலம் கடந்து ஒளி வீசுகிறது. என்ன விசேஷம்?” என்று கேட்ட கேள்விக்குப் பதிலாக “மண்டை வெடித்தும் போகும்போல் காலையிலிருந்து தலைவலி” என்று விடை வந்தது. சுமார் 30 ஆண்டுகட்கு முன் இவர் ஆசிரமம் வந்தவர். அன்னையைப் பல முறை நேரில் தரிசனம் செய்தவர். “தரிசனத்தில் என்னுடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போலிருக்கும். உடல் தாங்காது. நடக்க முடியாது. எதுவும் செய்ய முடியாது. ஒரு நாள் அல்லது இரண்டு நாளாகும் அந்த அதிர்ச்சி அடங்க படுத்தபடியிருப்பேன்” என்பது தரிசன அனுபவம். உணர்வு விழிப்பானவர்க்கே இந்த அனுபவம். மற்றவர்க்கில்லை.

       கானடாவிலிருந்து ஆரோவில் சேவைக்காக நம் நாட்டு டாக்டர் வேலையை விட்டுவிட்டு வந்து சேர்ந்தார். சீக்கிரம் அவர் சேவா மனப்பான்மையும், தொழில் நுணுக்கமும் பிரபலமாயின. அவருக்கு அன்னையிடம் ஈடுபாடில்லை. நண்பருக்காக வந்தார். நண்பருக்கு ஈடுபாடில்லை. அவர் தம் நண்பருக்காக வந்தவர். தலை வலிப்பவர்கட்கு டாக்டர் மருந்து தருவார். புதியதாக ஆரோவில்லில் சேர்ந்தவர் அன்னை சக்தியை முன்சொன்ன அன்பர்போலப் பெற்றால் அது தலைவலியாக மாறும். மருந்தால் குணமாகாது. மருந்து ஆத்மானுபவத்தைத் தடை செய்யும். வலியும் போகாது. இது புதியதாக ஆரோவில் வருபவர்களில் பலருக்கு அனுபவம். டாக்டர் பேச்சை இவர்கள் கேட்பதில்லை. இந்த டாக்டருக்கு அதுபோன்ற தலைவலி வரவில்லை. “தலைவலிக்கு மருந்து சாப்பிடாமல் இது என்ன Supramental headache” எனக் கேலிசெய்வார்.

       The Life Divine அத்தியாயம் 24,25,26,18,19,20 ஆகியவற்றை சுமார் 3 மாதமாகப் படிக்கிறார். ஆங்கிலம் தாய்மொழி என்பதால் தடையில்லை. ஒரு நாளைக்கு 1 பாராவுக்கு மேல் படிப்பது சிரமம். அதன் அனுபவம் அன்னை தரிசனம் போலிருக்கிறது. இந்தத் தலைவலி போகாது. Synthesis of Yoga என்ற நூலை தொடர்ந்து படித்து முடித்தவர்க்கு 64 நாள் தலைவலி இடைவிடாமலிருந்தது.

       புதியதாக உடற்பயிற்சி செய்தால் 10 நாளைக்கு உடம்பெல்லாம் வலிப்பதுபோல் நாம் அறியாத விஷயங்களை மனம் அறிய முற்பட்டால், மனத்திற்கு ஏற்படும் மாற்றம் தலைவலியைத் தருகிறது.

  • மனம் தான் பெற்ற (structure) அமைப்பை விட்டு புது அமைப்பைப் பெறுவதால் தலைவலி.
  • The Life Divine படித்துப் புரியும்பொழுது உள்ளே வரும் சக்தி அன்னை தரிசனம் போன்றது.

    ****

 



book | by Dr. Radut