இம்மாதச் செய்தி
அன்பின் ஆணைக்குக் கட்டுப்படுவதே உயர்ந்த வாழ்வு என்பது உலகம் அறிந்தது. அன்பு பக்தியாகி, பக்தி பவித்திரத்தால் உயர்ந்து, சரணாகதியால் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அன்பின் ஆணை தெய்வத்திருவுள்ளமாகிறது. திருவுள்ளத்தைத் தன் வாழ்வில் நிறைவேற்றும் பக்தன் வாழ்வை பரமபதமாக்கிக் கொள்கிறான். அவனை ஆணையிடும் அன்பு பரமாத்மாவின் பாதமலர்களின் இதழ்களாகும். இதழ் அவிழ்வதால் விரியும் மணம், சரணாகதியின் நறுமணமாகும்.
தீண்டிய திருவடிகளை நீங்காமல் சிரமீது தாங்கும் நித்திய பாக்கியம் சத்தியஜீவசொர்க்கம்.
"நினைத்தறியாத நிறைவை உன் இருபாதங்கள் என் தலை மீது நின்று கொடுத்தருளின. நிறைவை நிரந்தரமாக்கி என்னை நினதாக்கிக் கொள்வாய் அம்மா.''
- Login to post comments