05. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
52. செயல்படத் தயாராக நிற்கும் பொறுமை ஒன்றை மற்றதாகக் கருதுவது
- செயல்படுத்தத் தயாரான நிலையும், பொறுமையும் உடன் வாரா.
- பொறுமை செயலற்ற நிலை, செயலைக் கைவிட்ட நிலை.
- இரண்டும் சேர்ந்த நிலை அறிவுக்கெட்டாதது, ஆத்மாவுக்குப் புலப்படும்.
- Silent will மௌன சக்தியை உதாரணமாகச் சொல்லலாம்.
- மௌனம் பேச்சுக்கு எதிரிடையானது.
- மௌனம், மௌனமாகப் பேசுகிறது.
- அதன் சாதனை பெரியது.
- நம்பிக்கையும் பகுத்தறிவும் எதிரானவை.
- சக்தியும், அன்பும் எதிரானவை.
- எதிரானவை இணைந்து உடன்பாடாக இருப்பது பூரணயோக நிலை.
- வக்கீல் ஒரு கட்சி பேசுபவர்.
- எதிர்க்கட்சிக்கு எதிரானவர்.
- ஜட்ஜ் இரண்டு கட்சிக்கும் சாதகமானவர்.
- இரண்டு கட்சிக்கும் எதிரானவர்.
- சாதகமாகவும், எதிராகவும் இரண்டு கட்சிகளையும் ஏற்பதால் அவர் இரு வக்கீல்களைவிட உயர்ந்த நிலையில் ஜட்ஜாக இருக்கிறார்.
- வாழ்க்கையில் ஒத்து வராதது, ஒத்துப்போவது யோகம்.
- எதிரானவை இணைவதால், அதிக சக்தி எழுகிறது.
- காலம் நகர்ந்தபடியிருக்கும்.
- நகராதது காலமில்லை.
- நகராத காலம், காலமாகச் செயல்படுவது அற்புதம் நிகழும் நிலை.
- ஒரு திறன் எந்த நேரமும் செயல்படத் தயாராகப் பின்னணியிலிருப்பது பெரும் திறன்.
- நமக்குள்ள பெருந்திறன்கள் அனைத்தும் அப்படிப்பட்டவை.
- வட இந்தியாவுக்குப் போய் தங்கினால் தமிழ் பேசும் சந்தர்ப்பமில்லை.
- தமிழரைச் சந்தித்தால் உடனே பிரவாகமாகத் தமிழ் வரும்.
- நீச்சலடிக்கத் தெரிந்தால் அத்திறன் பின்னணியிலுள்ளது.
- தண்ணீரில் இறங்கினால் தானே நீச்சல் திறன் வெளிவரும்.
- ஆன்மா விழிப்பாக இருந்து பின்னணியிலிருப்பது யோகம்.
- அதே க்ஷணம் முடிக்கும் திறன், யுகாந்த காலப் பொறுமையுடனிருப்பது யோக நிலை என்கிறார் பகவான்.
- செயல்பட அவசரப்பட்டால், திறமை பூரணம் பெறவில்லை என்றாகும்.
- காதலுக்காக காத்திருக்கும் நெஞ்சம் அது போன்ற பொறுமையுடையது.
- தனக்கென்று உரியவர் வரும்வரை அது சலனமின்றி தன் கடமைகளைச் செய்யும்.
- நேரம் வந்தால் எரிமலையாக எதிர்கொள்ளும்.
- 5 ஆண்டில் 6 பேருடன் பழகும் இளைஞர்கள் காதலை நாடுவது இலவு காத்த கிளியாக முடியும்.
- பெரும் இலட்சியங்களை நாடுபவர் ஆயுள் முழுவதும் காத்திருப்பர்.
- கணவன் கைவிட்ட மனைவி 20 ஆண்டு அவன் திரும்பி வரப் பொறுத்திருந்து சாதித்ததுண்டு.
- மனைவியின் அன்புக்காக வாழ்நாள் முழுவதும் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என அவளறியாமல் பொறுமையாகக் காத்திருந்து நேரம் வந்து புதியன பூத்த பின் மலரும் மனித இதயமும் உண்டு.
- இலட்சம் பிறவி காத்திருக்கக்கூடிய பக்தனுக்கு உடனே மோட்சம் கிடைத்தது.
தொடரும்.....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் உன்னை உன் மனத்தில் அறியலாம். உலகத்தில் உன் பிரதிபலிப்பைக் காணலாம். உன் செயலால் உன்னை நிர்ணயிக்கலாம். உள்ளதை ஏற்று உத்தமனாகலாம். உதவியை ஏற்காதவன் பெரியவன்; கொடுக்காதவன் பெரிய ஆத்மா. உடலும் அசையாமல் உள்ளே வாழ்பவன் உனக்கே உரியவன். |
*******
- Login to post comments