Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

52. செயல்படத் தயாராக நிற்கும் பொறுமை ஒன்றை மற்றதாகக் கருதுவது

  • செயல்படுத்தத் தயாரான நிலையும், பொறுமையும் உடன் வாரா.
  • பொறுமை செயலற்ற நிலை, செயலைக் கைவிட்ட நிலை.
  • இரண்டும் சேர்ந்த நிலை அறிவுக்கெட்டாதது, ஆத்மாவுக்குப் புலப்படும்.
  • Silent will மௌன சக்தியை உதாரணமாகச் சொல்லலாம்.
  • மௌனம் பேச்சுக்கு எதிரிடையானது.
  • மௌனம், மௌனமாகப் பேசுகிறது.
  • அதன் சாதனை பெரியது.
  • நம்பிக்கையும் பகுத்தறிவும் எதிரானவை.
  • சக்தியும், அன்பும் எதிரானவை.
  • எதிரானவை இணைந்து உடன்பாடாக இருப்பது பூரணயோக நிலை.
  • வக்கீல் ஒரு கட்சி பேசுபவர்.
  • எதிர்க்கட்சிக்கு எதிரானவர்.
  • ஜட்ஜ் இரண்டு கட்சிக்கும் சாதகமானவர்.
  • இரண்டு கட்சிக்கும் எதிரானவர்.
  • சாதகமாகவும், எதிராகவும் இரண்டு கட்சிகளையும் ஏற்பதால் அவர் இரு வக்கீல்களைவிட உயர்ந்த நிலையில் ஜட்ஜாக இருக்கிறார்.
  • வாழ்க்கையில் ஒத்து வராதது, ஒத்துப்போவது யோகம்.
  • எதிரானவை இணைவதால், அதிக சக்தி எழுகிறது.
  • காலம் நகர்ந்தபடியிருக்கும்.
  • நகராதது காலமில்லை.
  • நகராத காலம், காலமாகச் செயல்படுவது அற்புதம் நிகழும் நிலை.
  • ஒரு திறன் எந்த நேரமும் செயல்படத் தயாராகப் பின்னணியிலிருப்பது பெரும் திறன்.
  • நமக்குள்ள பெருந்திறன்கள் அனைத்தும் அப்படிப்பட்டவை.
  • வட இந்தியாவுக்குப் போய் தங்கினால் தமிழ் பேசும் சந்தர்ப்பமில்லை.
  • தமிழரைச் சந்தித்தால் உடனே பிரவாகமாகத் தமிழ் வரும்.
  • நீச்சலடிக்கத் தெரிந்தால் அத்திறன் பின்னணியிலுள்ளது.
  • தண்ணீரில் இறங்கினால் தானே நீச்சல் திறன் வெளிவரும்.
  • ஆன்மா விழிப்பாக இருந்து பின்னணியிலிருப்பது யோகம்.
  • அதே க்ஷணம் முடிக்கும் திறன், யுகாந்த காலப் பொறுமையுடனிருப்பது யோக நிலை என்கிறார் பகவான்.
  • செயல்பட அவசரப்பட்டால், திறமை பூரணம் பெறவில்லை என்றாகும்.
  • காதலுக்காக காத்திருக்கும் நெஞ்சம் அது போன்ற பொறுமையுடையது.
  • தனக்கென்று உரியவர் வரும்வரை அது சலனமின்றி தன் கடமைகளைச் செய்யும்.
  • நேரம் வந்தால் எரிமலையாக எதிர்கொள்ளும்.
  • 5 ஆண்டில் 6 பேருடன் பழகும் இளைஞர்கள் காதலை நாடுவது இலவு காத்த கிளியாக முடியும்.  
  • பெரும் இலட்சியங்களை நாடுபவர் ஆயுள் முழுவதும் காத்திருப்பர்.
  • கணவன் கைவிட்ட மனைவி 20 ஆண்டு அவன் திரும்பி வரப் பொறுத்திருந்து சாதித்ததுண்டு.
  • மனைவியின் அன்புக்காக வாழ்நாள் முழுவதும் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என அவளறியாமல் பொறுமையாகக் காத்திருந்து நேரம் வந்து புதியன பூத்த பின் மலரும் மனித இதயமும் உண்டு.
  • இலட்சம் பிறவி காத்திருக்கக்கூடிய பக்தனுக்கு உடனே மோட்சம் கிடைத்தது.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உன்னை உன் மனத்தில் அறியலாம்.
உலகத்தில் உன் பிரதிபலிப்பைக் காணலாம்.
உன் செயலால் உன்னை நிர்ணயிக்கலாம்.
உள்ளதை ஏற்று உத்தமனாகலாம்.
உதவியை ஏற்காதவன் பெரியவன்; கொடுக்காதவன் பெரிய ஆத்மா.
உடலும் அசையாமல் உள்ளே வாழ்பவன் உனக்கே உரியவன்.
 

*******



book | by Dr. Radut