03. சாவித்ரி
சாவித்ரி
P.131 And all her sweetness into a maimed desire
இனிமையெல்லாம் சிதைந்த ஆசையாயின
- காலனுக்குச் சேவை செய்யும் கதியே அவள் வாழ்வின் விதி.
- அவள் நித்தியம் பெற்ற முகத்திரை,
- கண் மூடியவற்றின் கண் திறக்கும் கடமை,
- நிலையான மரணத்தின் நிலையற்ற சிறு நிகழ்ச்சி,
- அழிய வேண்டிய புதிரின் அழிவில்லா ஜீவன்.
- அதுவே அவள் தீமை புதிரென பெறும் உருவம்.
******
Canto Four
சிறு வாழ்வின் பெரு இராஜ்ஜியங்கள்
P.132 A QUIVERING trepidant uncertain world
நிலையற்ற லோகம் நடுங்கும் அலை எழுப்பும்
- அர்த்தமற்ற சந்திப்பில் எழுந்தது
- அவள் பாதம் பட்ட வெற்றிடத்து கிரகணம்,
- சுறுசுறுப்பான இருள், ஆர்வமிகு அசைவு,
- அரைகுறையாக விழித்தெழுந்த அவதி
- ஜட இருளின் உறக்கத்தினின்று எழுந்தபாடில்லை,
- உணர்வால் உந்தப்படும் அஞ்ஞானத்துடனிணைந்தது,
- தன்னையறியவும், தன் பிடியில் மற்றதைக் கொள்ளவும்,
- ஏழ்மையையும், நஷ்டத்தையும் வாரிசாகப் பெற்றது,
- மிரட்டலுக்குப் பயந்து விலகும் நினைவுகளின் தாக்குதல்கள்,
- அன்று மறந்த நம்பிக்கையின் மகிமை இன்று பிடித்து உலுக்குகிறது,
- தடவும் கைகளின் குருட்டு அசைவு எடுக்கும் முயற்சி,
- ஆபத்தும் வேதனையும் அகன்று விரியும் பிளவை நிரப்பும்
- வாழ்விழந்த ஆனந்தத்திற்கும் பூமாதேவியின் வேதனைக்குமிடையே
- இழந்ததை நாடும் உயர்ந்த வாழ்வு.
- புவியை விட்டகன்ற சந்தோஷத்தை நாடித் தேடும்,
- திருப்தியும் நிம்மதியுமின்றி வாயிலருகே வந்து நிற்கும்.
- திடமான ஜட பூமியில் அமைதி நின்று நிலைபெற
- அதன் தேவை பூமியின் பசியுடன் கலந்தது;
- ஆசையின் வேகத்தை வாழ்வுக்கு அது சட்டமாக அளித்தது,
- ஆத்ம தேவையை ஆழமறியாத கடலாக்கியது,
- அழியும் இரவு பகலில் எழுந்த சக்தியொன்று,
- காலத்தின் கர்மத்தால் கட்டுண்ட இனத்தின் மீது படிந்த நிழல்,
- கலங்கிய நீரோட்டத்தில் எழுந்த குருட்டு இதயத்துடிப்பு.
- புலனில் விழித்தெழும் நரம்பின் துடிப்பு
- ஜடத்தின் உறக்கத்தை மனத்தின் விழிப்பினின்று பிரித்தது,
- எங்கிருந்து வந்தது ஏன் வந்தது என்றறியாத அழைப்பு ஒன்று வந்துளது.
- பூமியைக் கடந்த சக்தி வந்து பூமியைத் தீண்டியது;
- கிடைத்திருக்கக்கூடிய அமைதி இல்லாமற் போய்விட்டது;
- உருவமற்ற ஏக்கத்தின் தீவிரம் மனித இதயத்திற்குரியது,
- சந்தோஷம் வேண்டும் என்ற கூக்குரல் வேகமாக எழுந்தது
******
ஸ்ரீ அரவிந்த சுடர் Mother என்ற மந்திரம் ஓம் என்பதைக் கடந்தது. |
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் அறிவு இருப்பதால் மட்டும் உலகம் ஏற்காது; ஆன்மீகத்தையும் ஏற்காது. பணமிருப்பதால் உலகம் ஏற்கும் எனில் பணத்தை ஏற்கும்; பணத்திற்காக மனிதனை ஏற்காது. உலகம் ஒருவரை ஏற்க உலகத்திற்கு அவர் தேவைப்பட வேண்டும். உலகம் தேவைக்கு ஏற்கும்; உயர்வுக்காக ஏற்காது. |
******
- Login to post comments