Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 

தம்பி - அன்னை சேவைக்குக் கோடிக்கணக்காய் பணம் வந்தது. அதாவது கொடுப்பதாகச் சொல்லியது தெரியும்.  கையில் வந்ததாகத் தெரியவில்லை.

அண்ணன் - சொத்தாக வருவது முடியும். சேவைக்கு வருவது கடினம்.

தம்பி - எனக்கு 1 கோடி வேண்டும். நான் செய்கிறேன்.

அண்ணன் - 1 கோடி பணமுள்ளவனுடைய திறமை - நிர்வாகம், நிதானம், பொறுமை - உனக்குண்டு. பிறரை நீ சம்பந்தப்படுத்தாவிட்டால் உன் முயற்சி பலிக்கும். எளிதன்று. ஆனால் பலிக்கும்.

தம்பி - மீண்டும் ஒருமுறை நிபந்தனைகளைக் கூறவும்.

அண்ணன்-அஜெண்டாவில் அன்னை நல்லது goodness என்பதைப்பற்றி 6, 7 இடங்களில் கூறுகிறார்கள். அதன் சுருக்கம்:-

"நல்லவனாக இருக்கவேண்டும் என்று நேரடியாகக் கூறமுடியவில்லை என்பதால், நான் பல்வேறு வகையாக விளக்க வேண்டியிருக்கிறது''. நல்லவனாகவும், திறமைசாலியாகவுமிருந்தால் அந்த அளவுக்குள்ள

  • புகழ்,
  • செல்வாக்கு
  • பதவி
  • செல்வம்
  • அருள்
ஒருவனைத் தேடிவரும் என்பதே அன்னை கொள்கையின் சுருக்கம். அருளைப்பெற பிறர் நலம் நாட வேண்டும். சாதாரண மனிதனுக்குத் தான் சம்பாதிப்பதைவிடப் பிறர் கெட்டுப்போவதில் சந்தோஷம் அதிகம்.

 

தம்பி - எனக்கு ஒரு கண் போனாலும்... என்ற கதை எல்லா நாடுகளிலும் கேள்விப்படுகிறோம். அவர்களை விலக்கினால், மீதி எத்தனை பேரிருப்பார்கள்?

அண்ணன் - எது வேண்டுமானாலும் அதற்குரிய தகுதியைப் பெற்றவுடன் நல்லவனுக்கு உடனே வரும் என்பது அருளின் சரித்திரம். உலகம் பணத்தை முக்கியமாகக் கருதுவதால், நாமும் அதைக் கருதுகிறோம். பணம் மட்டும் முக்கியமில்லை. முக்கியமானவை பல. அவற்றுள் பணம் ஒன்று.

40, 45 வயதில் ஒருவர் இதுவரை உலகிலுள்ள பணக்காரர்களைத் தாண்டும் அளவுக்குச் சம்பாதித்து விட்டார் எனில் அருளால் அது முடியாது என நினைக்க முடியுமா?

தம்பி - இது வரை 75 பில்லியன் டாலர் ரிக்கார்ட். Bill Gates 100$ Billion சம்பாதித்துவிட்டார். இது technology ஆல் நடந்தது. அருளின் பல்வேறு பாகங்களில் டெக்னாலஜி ஒன்று. ஒரு பாகத்தால் முடியுமானால், முழுமையால் முடியாது எனக் கூற முடியுமா? நாம் அருளைச் சரிவரப் புரிந்து கொண்டு ஏற்கவில்லை எனப் பொருள்.

சோதனை மனத்திற்குரியது. சோதனை பலித்தால் நாள் முழுவதும் எந்தக் காரியமும் தடையாக இருக்கக் கூடாது. மனதில் கெட்ட எண்ணத்திற்கு இடம் கொடுக்காவிட்டால் கெடாது. தகுதியிருந்தால் பலன் வரும்.

அண்ணன் - சோதனை செய்வது தவறு எனக் கூறமுடியாது. ஆனால் இதை நிரூபிக்கும் நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கும் பொழுது ஏன் சோதனை? நேரடியாகப் பலனை நாடமுடியும் என்பதே என் கருத்து. இந்த நாடார் தம்பி பல நாட்களாக வருவதில்லை. ஒரு புது project வந்தது. அவர் வந்தால் சொல்லலாம் என இருக்கிறேன்.

தம்பி - நான் அவரைக் கூப்பிடட்டுமா?

அண்ணன் - நாமாகக் கூப்பிட்டு project ஐப் பற்றிச் சொன்னால் அது பலிக்காது என்று தெரியுமே.

தம்பி - ஆமாம்.

அண்ணன் - நான் இதை நம் தாசீல்தாரிடம் சொன்னேன். அவர் அன்னையிடம் சொல்வதாகச் சொன்னார். ஒரு 1/2 மணியில் நாடார் தம்பி வந்தார். ரொம்ப நல்ல மனசு. பொதுவாக அவர் வந்தால் நல்லது நடக்கும்.இன்றும் அது போலிருந்தது. நாம் 4 வருஷமாக எதிர்பார்த்த காண்ட்ராக்ட் வந்தது. அத்துடன், வழக்கத்திற்கு மாறாக, அவரே முன்பணம் தருவதாகச் சொன்னார். இதுபோன்ற இடங்களில் அன்னையை நம்மவர் விவரமாக அறிவதில்லை.

தம்பி - நீங்கள் சொல்வது organisation of consciousness அன்னை ஜீவியத்தின் சிறப்பைப் பற்றித்தானே.

அண்ணன் - ஒரு வகையில் இது பெரிய ஆத்ம ஞானம். வேறு வகையாகப் பார்த்தால் எல்லோருக்கும் தெரிந்த எளிய விஷயம்.

தம்பி - சிறியதில் பெரியதை அறிவதுதான் ஆத்ம ஞானம் என்று கூறுகிறாரே, இதையே வேறு வகையாகவும் கூறலாமன்றோ? "எந்த முறை நமக்குப் பெரும்பலன் தருகிறதோ அதை அன்னையிடம் நாம் பின்பற்றினால் போதும்'' என்று சொல்லலாமன்றோ?

அண்ணன் - நம் வீட்டில் ஒரு முக்கியக்காரியம் என்றால் உ-ம், இப்பொழுது வந்துள்ள காண்ட்ராக்ட் 5 கோடி நமக்குப் பெரியது. யாரும் தானே அட்வான்ஸ் தருவதில்லை. இவர் 5 லட்சம் தருவதாகச் சொல்கிறார். இது கூடிவர நாம் முதற்காரியமாக இதை எவரிடமும் சொல்வதில்லை. குறிப்பாகக் காண்ட்ராக்ட் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வதில்லை. நம் டிரைவர் தம்பி வந்தால் நமக்கு ஒத்து வருவதில்லை என்பதால் இந்த காண்ட்ராக்ட் கையெழுத்தாகும் வரை அவனைச் சேர்ப்பதில்லை. இது நாம் மட்டும் செய்யும் காரியங்களில்லை. காரியம் முக்கியமானால், யாரும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். இரண்டாம் மனிதரிடம் சொல்லமாட்டார்கள். இதேபோல் அன்னையிடம் நாமிருந்தால் எல்லாக் காரியங்களும் கூடிவரும், அங்கு இந்த ஜாக்கிரதையிருப்பதில்லை. சற்று அலட்சியமாக இருக்கிறோம், காரியம் தவறிவிடுகிறது. "இதெல்லாம் பார்த்தால் முடியுமா?'' என நம் காரியத்தில் சொல்வதில்லை. அன்னை விஷயத்தில் சொல்கிறோம்.

தம்பி - நீங்கள் சொல்வது புரியாது. நாடார் தம்பியை வரச்சொல்லி தாசீல்தார் அன்னையிடம் சொன்னார், வந்தார். அதுபோன்ற உதாரணத்து மூலம் சொன்னால் புரியும்.

அண்ணன் - நாடார் தம்பி வருமுன் காண்ட்ராக்ட் சேதி வந்தது. எனக்குச் சந்தோஷம். போனில் தம்பியைக் கூப்பிட்டு "நீங்கள் வந்தீர்கள். நல்லது நடக்கிறது'' என்றேன். போனை வைத்தவுடன் பாக்டரியில் குடித்துவிட்டு கலாட்டா என்று ஒரு செய்தி, பகலில் வீட்டில் திருடன் வந்தான் என்று வேறொரு செய்தி. எனக்கு என் பக்கத்திலிருந்து காரணம் தெரியும். ஸ்ரீ அரவிந்தர் நிதானம் equalityயை வற்புறுத்துகிறார். தம்பி வந்தது சரி. அவர் போனபின் அவரிடம் நல்ல செய்தி வந்ததாகக் கூறவேண்டும் என்று ஆசை.கூறினேன். உடனே விஷயம் தலைகீழாகப்போய் கலாட்டா, திருடு வருகிறது.

தம்பி - நல்ல விஷயத்தைச் சொல்லி சந்தோஷப்படுவதும் ஆசை என்ற அளவில் உங்களைப் பாதிக்கிறது. அதெல்லாம் என்னைப் பாதிப்பதில்லை. அதுபோல் சொன்னால் நல்லது நடக்கும். நான் சிறியவன். பாராட்டுவதே எனக்குப் பக்குவம். உங்களுக்கு அன்னை அதையும் அனுமதிக்கவில்லை.

தொடரும்

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

தெரிந்ததைக் கொண்டு தெரியாததை நம்புவது, நம்பிக்கை எனப்படும்.

தெரியாததைக் கொண்டு தெரிந்ததை மறுப்பது சந்தேகம். 

"மாப்பிள்ளை"

தானெனும் ஆணவமுள்ள பெரிய மனிதர்கள் சிலரைப்பற்றி ஒரு வழக்குண்டு. "திருமணத்திற்குப் போனால் மாப்பிள்ளையை விட இவருக்கு முக்கியத்துவம் தேடுவார், துக்கத்திற்குப் போனாலும் இறந்தவரைவிட தமக்கு முக்கியத்துவம் தேடுவார். எங்குப் போனாலும் தாமே முதன்மையாக இருக்க விரும்புவார்'' என்பது அவ்வழக்கு. இதுபோன்றவர் பெண்ணுக்குத் திருமணம் செய்த பின்னும், தாமே "மாப்பிள்ளை'' யாக நடந்து கொள்வார்கள்.

போகுமிடமெல்லாம் முதன்மையாக இருக்க விரும்புவதாகச் சர்ச்சில், முன்ஷியைப் பற்றிச் சொல்வார்கள். சர்ச்சில் அபாரத் தைரியசாலி. முன்ஷி அறிவின் சிகரம். ஏதாவது ஒரு நல்ல அம்சம் மிக உயர்வாக இருப்பவர்களுக்கே இக்குணம் இருக்கும். அளவுகடந்த நல்ல குணமும், உதவி மனப்பான்மையும் உள்ளவர் ஒருவர், ஏராளமான புத்தகங்களை எழுதிய புத்திசாலி ஒருவர், ஓர் எலக்ஷன் கூட தவறாமல் ஜெயித்த அரசியல்வாதி ஒருவர் இக்குணம் உடையவர்களில் சிலர்.

இவர்கள் அன்னையிடம் வந்தால், அரசியல் தொண்டரானால், முதன் மந்திரியாவார். உலகப்பிரசித்தி பெறுவார்கள். அளவுகடந்த பெருஞ்செல்வம் பெறுவர். தங்கள் உயர்ந்த குணங்களை வீணடிக்கும் "முதன்மை'' மனப்பான்மையை இவர்கள் மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். அதைச் செய்வது அரிது.

அப்படிப்பட்டவர் தம் பெண்ணுக்குத் திருமணம் முடித்து மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிலுள்ள அனைவரும் அன்று மாலை "மாப்பிள்ளை'' கோபமாக இருக்கிறார் என்று பதட்டத்துடன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த புதியவர் வியந்து, "மாப்பிள்ளை சந்தோஷமாக முன்கட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்'' என இடைமறித்துச் சொல்லியபொழுது, அவரை அருகில் அழைத்து "எங்கள் வீட்டில் மாப்பிள்ளை என்பது பெண்ணின் தகப்பனார்'' என்று ஒருவர் விளக்கமளித்தார். 

பிரார்த்தனை பலிக்குமா?

தன் முயற்சி ஜெயிக்கும்வரை மனிதனுக்குத் தெய்வம் நினைவு வருவதில்லை. அது தோற்றபின் பிரார்த்தனை நினைவு வரும். அப்பொழுதும் தோற்ற தன் முயற்சி பலிக்கவேண்டும் என்று தோன்றுமே தவிர காரியம் கூடி வரவேண்டும் என்று தோன்றுவதில்லை.

இன்டர்வியூக்குப் போய் வந்தபின் தேறவில்லை என்றால், தேறவேண்டும் எனப் பிரார்த்திப்பான். வேலை கிடைக்கவேண்டும் என்பதைவிட இன்டர்வியூவில் தான் சொல்லிய பதிலை ஏற்க தெய்வம் அருள் செய்ய வேண்டும் என்பதே மனதிலிருக்கும். பொதுவாக அன்னையை நாடிப் பிரார்த்தனையை எடுத்து வருபவர்கள், இதுவரை எந்தத் தெய்வத்திடமும் பலிக்காத பிரார்த்தனையுடன் வருவார்கள். முதலில் அன்னையை நாடுவது பெரும்பாலும் இது போலத்தானிருக்கும்.

வயது வந்த பெண். வேலைக்குப் போகிறாள். அவள் மீது எந்தக் குறையும் எப்பொழுதும் யாரும் கூறியதில்லை. பெண் பொறுமைசாலி. முணுமுணுப்பவளில்லை. அவளுக்கு குறையிருந்ததாகத் தெரியவில்லை. ஒரு நாள் காலையில் எழுந்தால், பெண்ணை வீட்டில் காணோம். தேடிய இடத்தில் எல்லாம் எந்தத் தடயமும் இல்லை. இந்தப் பெண் ஓடிப் போனாள் என்றாலும் பரவாயில்லை. எங்காவது நன்றாக இருக்கிறாள் என்று செய்தி கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு பல மாதம் கழித்து பெற்றோர் வந்துவிட்டார்கள். இவள் ஓடிப் போகும் பெண்ணல்லள் என்பதே அனைவருடைய கணிப்பு. 1 1/2 ஆண்டு ஓடியது. அன்னையை அறிந்தனர். பிரார்த்திக்க மையம் தேடி வந்தனர். பிரார்த்தனை தவறாது பலிக்கும், உடனேயும் பலிக்கும் என்று அறிந்தனர். பிரார்த்தனை செய்தனர். 7ஆம் நாள் பெண்ணிடமிருந்து போன் வந்தது. எல்லாம் நல்ல செய்தி, திருமணம் செய்துகொண்டு நல்லமுறையில் வாழ்கிறாள்!

உடனே பலிப்பது அன்னை முத்திரை. பிரார்த்தனை பலிக்குமா?

Comments

After the last line of ஸ்ரீ

After the last line of ஸ்ரீ அரவிந்த சுடர்,  and "மாப்பிள்ளை' 

extra space is there

"மாப்பிள்ளை'

"மாப்பிள்ளை' - quotation marks are different in the beginning and end.

Para No.4, Line No. 5 - பேசிக்கொண்டிருக் கிறார்'' - பேசிக்கொண்டிருக்கிறார்''

பிரார்த்தனை பலிக்க

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

Para No.6 - sub para - after the bullets Line No.1 - கொள்கை யின்- கொள்கையின்

Para No.8, Line No.2 - அருüன் - அருளின்

Para No. 9, 1st line - 40, 45 ...... missing

Para No. 12,   -  between 3rd and 4th line extra space 

Para No.14, Line No.1 - ப-க்காது  - பலிக்காது 

Para No.20 - between 2nd and 3rd lines extra space

Para No.20, Line No.5 - சொல்வ தில்லை - சொல்வ தில்லை

Para No.20, Line No.8 -சேர்ப்ப தில்லை - சேர்ப்பதில்லை

Para No.22 - Between Line No.8 and 9 extra space is there.



book | by Dr. Radut