04. யோக வாழ்க்கை விளக்கம் VI
யோக வாழ்க்கை விளக்கம் VI
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
II/86) அசத்திலும் பரம்பொருளைக் காண்பது பூரண யோகம்.
- பூரண யோகம் பூரணத்தை ஏற்கிறது.
- சத், கர்மம், நியூட்டன் ஒரு வகை - பகுதி.
- அசத், சத், ஜீவன், ஐன்ஸ்டீன் அடுத்த வகை - முழுமை.
- நியூட்டனை விட உயர்ந்த மனம் இனி உற்பத்தியாகாது என்றார் பகவான்.
- ஐன்ஸ்டீன் நியூட்டனைக் கடந்தவர்.
- சென்ற நூற்றாண்டில் நியூட்டன் கூறியவை உண்மை.
- இருபதாம் நூற்றாண்டில் உலகம் மலர்ந்து நியூட்டனைக் கடந்தது.
- அதற்குரிய தத்துவத்தை ஐன்ஸ்டீன் கூறினார்.
- சந்திர மண்டலம் சென்றதும், இன்ட்டர்நெட், செல்போன் வந்ததும் நியூட்டன் தத்துவத்தை, உலகம் ஐன்ஸ்டீனால் கடந்து வந்ததால் நிகழ்ந்தவை.
- இந்திய மரபிற்கு, கர்மம் உண்மை. அது மனத்திற்குரிய உண்மை.
- மனம் சக்திக்கும், கர்மத்திற்கும் உரியது.
- சத்திய ஜீவியம் மனத்தைக் கடந்தது.
- அதனால் கர்மத்திற்குரிய சக்தியை மனிதன் கடந்து ஜீவனுக்கு வருகிறான்.
- கர்மம் அழிவது ஜீவன் எழுவதால்.
- சச்சிதானந்தமே முடிவு என்பது சிருஷ்டியை சத்தோடு முடிப்பது.
- சத்தைக் கடந்த அசத்துண்டு.
- சத்தும், அசத்தும் சேர்ந்த முழுமை பிரம்மம்.
- இதுவரை செய்த யோகங்கள் முடிவாக சச்சிதானந்தப் பிரம்மத்தை அடைந்தன.
- பூரண யோகம் அவர்கள் விலக்கிய அசத்தையும் சேர்த்துக் கொள்கிறது.
- அதைச் செய்ய மனத்தைக் கடந்து சத்திய ஜீவியம் வர வேண்டும்.
- மனம் செயல்படும்பொழுது கர்மம், இருள் உண்டு.
- மனத்தைக் கடந்து சத்திய ஜீவியம் செல்லும்பொழுது கர்மத்தைக் கடந்த ஜீவன் செயல்பட்டு இருள் அருளாகத் திருவுருமாறுகிறது.
- ஞானயோகி மனத்திலிருந்து அட்சரப் பிரம்மத்தையடைய பிரபஞ்சத்தைத் தவிர்க்கிறார்.
- பிரபஞ்சம் மனிதனுக்கும் இறைவனுக்கும் - பிரம்மத்திற்கும் - இடையில் உள்ளது.
- சமாதியால் மனிதனால் நேரே மனத்திலிருந்து பிரம்மத்தை அடைய முடியும்.
- அது கண் மூடிய நிலை.
- விழிப்பான நிலையில் மனிதன் முழுமையை நாடுகிறான்.
- முழுமை பிரபஞ்சத்தை ஏற்பதிலுள்ளது.
- கண் மூடிய நிலையில் எலிசபெத்தைக் கவர்வது விக்காம்.
- விழிப்பான நிலையில் எலிசபெத்தைக் கவர்வது டார்சி.
- பெம்பர்லி, சொத்து, வித்தியாசம்.
- யோகிக்கு பிரபஞ்சம் முழுமை தருவதுபோல் எலிசபெத்திற்குப் பெம்பர்லி முழுமை தருகிறது.
- எலிசபெத் உணர்ச்சி வசப்பட்டு, அறிவைப் பயன்படுத்தாமல், விக்காமை நாடினாள்.
- அறிவுடன் செயல்பட உணர்வைக் கடந்து வர வேண்டும். அது முழுமை.
- மனம் - அட்சரப் பிரம்மம் - சமாதி - பகுதி - கர்மம் - சக்தி - ஒரு நிலை.
- சத்திய ஜீவியம் - முழு பிரம்மம் - விழிப்பு - முழுமை - ஜீவன் - அடுத்த நிலை.
- அறிவில்லாத நிலையில் சேர மன்னன் காதல் வயப்பட்டு, முடியைத் துறந்து, முஸ்லீம் மாப்பிள்ளையானான். அவர்கட்கு மாப்பிளா முஸ்லீம் எனப் பெயர்.
- அதேபோல் எட்வர்ட் VII முடியைத் துறந்து அமெரிக்க (divorcee) விவாகரத்தான பெண்ணை மணந்தான்.
- இருவரும் வாழ்வில் தாழ்ந்தனர், உயரவில்லை.
- அறிவு உணர்வைக் கடந்தது, சத்திய ஜீவியம் அறிவைக் கடந்தது.
*******
II/87) பரம்பொருள் சத்தியமாகும் எனில் அசத்தாகவுமாகும்.
- எதுவுமாகும் பரம்பொருள்.
- பரம்பொருள் - பிரம்மம் - எதுவுமாகும்.
- பரம்பொருள் எதிரெதிரானவையாகவுமாகும், ஒரே சமயத்திலும் ஆகும்.
- பரம்பொருளுக்கு முடியாததில்லை.
- பரம்பொருள் சத்தாகி, சத்புருஷனாகி, ஆன்மாவாகி, சத்தியமாகிறது.
- அசத் என்பது பரம்பொருளில் சத் போக மீதி.
- சத்தாவதுபோல் பரம்பொருள் அசத்தாகவுமாகும்.
- சர்க்கார் நம்மைப் பாதுகாக்க ஏற்பட்டது.
- வெளிநாட்டுத் தாக்குதல்களினின்று சர்க்கார் நம்மைக் காக்கிறது.
- உள்நாட்டுக் கலவரத்தினின்றும் காப்பாற்றுகிறது.
- உள்நாட்டுக் கலவரத்தில் சர்க்கார் போலீஸ் மூலம் மக்களைத் தாக்குகிறது. நம்மைக் காக்கும் சர்க்கார், நம்மைத் தாக்கவும் செய்கிறது.
- அணைக்கும் கரம் அடிக்கும்.
- அமிர்தமான பால் கெட்டுப் போனால் விஷமாகும்.
- ஏராளமான சௌகரியங்களைச் செய்யும் விஞ்ஞானம், ஏராளமான தொந்தரவுகளையும் செய்கிறது.
- கத்திக்கு வெட்டும் திறமை உண்டு. வெட்டலாம், வெட்டக் கூடாது என்ற குணமில்லை.
- திறமை கத்திக்குரியது, அதன் குணத்தை மனிதன் நிர்ணயிக்கிறான்.
- ரிஷிகள் பரம்பொருளை அட்சரப் பிரம்மமாகக் கண்டனர்.
- அட்சரப் பிரம்மம் அசைவற்றது, குணங்களற்றது, ரூபமற்றது.
- அதனால் ரிஷிகள் பிரம்மம் சிருஷ்டிக்க முடியாது என்றனர்.
- அசையாத பிரம்மம் எப்படி சிருஷ்டிக்கும் என்பது அவர்கள் நோக்கம்.
- பகவான் பிரம்மம் அசையாதது மட்டுமல்ல, வேண்டுமானால் அசையும் என்றார்.
- அசைவற்றதை உச்சகட்டமான நிலையெனக் கண்டனர் ரிஷிகள்.
- அசைவது திறனற்றது, அசையாத நிலை திறனுடையது என்று கருதினர்.
- பிரம்மம் அசையும் திறனற்றது எனக் கூறுவது சரியில்லை என்றார் பகவான்.
- அசையும் சுதந்திரம் அதற்கில்லை என நாம் கூறுவது அதன் முழு சுதந்திரத்தை மறுப்பதாகும் என்றார்.
- சுதந்திரம் என்ற கருத்தை ரிஷிகள்,
- செயலிலிருந்து சுதந்திரம்.
- அசைவிலிருந்து சுதந்திரம் என்று கொண்டனர்.
- பிரம்மத்தால் அசைய முடியாது எனில் அது பூரண சுதந்திரமாகாது என்றார் பகவான்.
- பிரம்மம் அசையும், அசையாமலுமிருக்கும், எதுவாக இருக்க வேண்டும் என்ற சுதந்திரம் அதற்குண்டு என்றார் பகவான்.
- மனம் பெற்ற சுதந்திரம் ரிஷிகள் கூறுவது.
- பகவான் கூறும் சுதந்திரம் சத்திய ஜீவிய சுதந்திரம்.
- மனத்திற்கு எல்லையுண்டு.
- சத்திய ஜீவியத்திற்கு எல்லையில்லை.
- ரிஷிகள் கண்ட பிரம்மம் பகுதியானது.
- பகவான் கண்ட பிரம்மம் முழுமையானது.
- போர்க்களம் சென்று ஆயுதமேந்தாமல் பாரதப் போரை வென்றது ரிஷிகள் கண்ட பகுதியான தெய்வீக மனத்திற்குரிய அட்சரப் பிரம்மம்.
- போர்க்களம் போகாமல், ஆயுதமேந்தாமல் உலகப் போரை வென்றது பகவான் கண்ட முழுமையான சத்திய ஜீவியத்திற்குரிய பிரம்மம்.
தொடரும்....
*******
ஜீவிய மணி பொறுப்பால் திறமை வரும். |
*******
- Login to post comments