09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- ஊரார் வீட்டு நெய்யே, என் பொண்ஜாதி கையே.
கை பெரிதானால், நெய்யிக்குக் குறைவிருக்காது.
- கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல்.
தட்டிப் பறிப்பவரெல்லாம் தாம் கட்டி வைத்தப் பணத்தைத் தருபவர்.
- ஆற்றிலே போகுது தண்ணீரை, அப்பா குடி ஆத்தாள் குடி.
நாடெல்லாம் செல்வம் கொழிக்கிறது. நாமெல்லாம் அதிர்ஷ்டக்காரர்.
- பிள்ளைப் பெறப் பெற ஆசை. பணம் சேரச் சேர ஆசை.
நினைக்க நினைக்க நெஞ்சம் ஆத்மாவாகும்.
தொடரும்....
********
ஸ்ரீ அரவிந்த சுடர் தொந்தரவு உள்ளிருந்துதான் வரும். வெளியிலிருந்து வரவே வராது. உள்ளது ஒன்றே. |
*******
- Login to post comments